Monday, July 3, 2017

ஸகாத் பெறும் பீஸபீலில்லாஹ் கூட்டத்தவர் தெளிவு - தொடர் -01

                                                                                                        

 ஸகாத் பெறும்  பீஸபீலில்லாஹ் கூட்டத்தவர் பற்றி தெளிவு - தொடர் -01

ஸகாத் பெறும் தகுதியுடைய பீஸபீலில்லாஹ் கூட்டத்தவர் பற்றிய தெளிவு 

காலத்தின் தேவைகளை அனுசரித்து நடத்தல் என்ற தோரணையில் அல்லாஹுத்தஆலாவின் மார்க்கத்தை மாற்றியமைக்கும் வகையில் சில சட்டங்களை உள்ளடக்கிய ஒரு பிரசுரம் அறபு முஸ்லீம் வாலிபர் அமைப்பினால் கலாநிதி யூசுப் அல்கர்ளாவியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. அப்பிரசுரத்தின் முதற்பகுதியில் இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகள் சிந்தனை ரீதியான போராட்டங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திவிட்டு மேற்கூறப்பட்ட அமைப்பின் நடவடிக்கைகள், செயல்பாடுகளை புகழ்ந்து பாராட்டி இறுதிப்பகுதியில் இவ்வமைப்புக்கு ஸகாத்திலிருந்து ஒரு பங்கை கொடுக்க முடியும் எனக்கூறப்பட்டுள்ளது. ஏனெனில் இவ்வமைப்பின் செயற்பாடுகள் ஜிஹாதில் அடங்குவதால் ஸகாத் பெறத்தகுதியான எட்டுக்கூட்டங்களில் ஒன்றான 'பீஸபீலில்லாஹ்' அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் செய்யச் செல்பவர்களுக்கு கொடுக்கப்படக்கூடிய பங்கிலிருந்து கொடுக்கமுடியும் எனக்கூறப்பட்டுள்ளது.

கலாநிதி யூசுப் அல்கர்ளாவி தொடர்ந்து கூறும் போது:

அல்லாஹூத்தஆலாவின் பாதையில் போராடுதல் என்ற அடிப்படையில் மேற்கூறப்பட்ட சங்கத்தின் செயல்பாடுகள் காணப்படுவதால் ஒரு முஸ்லிம் அவனுடைய ஸகாத்தை இவ்வமைப்புக்கு கொடுக்கமுடியும் என்றே நான் கருதுகிறேன். யுத்தம் என்பது வாலினால் மாத்திரம் செய்யப்படுவதல்ல அல்லாஹூத்தஆலா திருமறையில் நபி ஸல்லல்லாஹூ அலைவஸல்லம் அவர்களை நோக்கி நீங்கள் காபிர்களுக்கு வழிப்பட்டு நடக்க வேண்டாம். அதைக்  (குர்ஆனைக்) கொண்டு போராடுங்கள் என ஸூராத்துல் புர்கான் : 52ல் கூறியுள்ளான். இஸ்லாத்தின் துரோகிகளால் தற்காலத்தில் நாம் எதிர்கொள்வது சிந்தனை, கலாச்சார போராட்டமாகும். எனவே அவர்களுடைய ஆயுதங்கள் போன்ற சிந்தனை ரீதியிலான போராட்டத்தின் மூலம் போராடுவதே கடமையாகும் இந்தப்பணியைத்தான் அறபு முஸ்லீம் வாலிபர் அமைப்பு செய்கிறது. எனவே 'பீஸபீலில்லாஹ்' என்ற பங்கிலிருந்து அவர்களுக்கு ஸகாத்தை கொடுப்பதில் எவ்வித குற்றமும் கிடையாது என்ற கருத்தை கூறுகிறார்.

 சிந்தனைப் போராட்டத்தின் அவசியத்தை வலியுறுத்துவதிலோ, பகிரங்கமாகவும் மறைமுகமாகவும் இஸ்லாத்தை குறைகூறுபவர்களுக்கு எதிராக போராடி இஸ்லாமிய அகீதாவை பாதுகாக்க வேண்டும் என்பதிலோ, இவ்வகைப் போராட்டம் நாவினால் பேனாவால் செய்யப்படும் போராட்டம் ஜிஹாதில் அடங்கும் என்பதிலோ வளர்ந்து வரும் சமுதாயத்தை நல்வழிப்படுத்துவதிலோ, அவர்களுடைய உள்ளத்தில் இஸ்லாத்தைப் பற்றிய நல்லமனப்பாங்கை உருவாக்குவது அவசியம் என்பதிலோ எமக்கு கர்ளாவியுடன் முரண்பாடு கிடையாது. 

   என்றாலும் 'பீஸபீலல்லாஹ்' என்ற திருமறை வசனத்தை திரிவுபடுத்தி கூறியதும் அல்லாஹூத்தஆலாவும், அவனுடைய ரஸூலும் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஆகுமாக்காத வழியில் ஸகாத் கொடுக்க முடியும் எனக்கூறியதே எம்மை அதிர்;ச்சிக்குள்ளாக்கிறது.

இந்த மார்க்கத்தீர்ப்பை வெளியிட்ட கர்ளாவி அவர்கள் மார்க்க அறிஞர்கள் அவருடைய தவறுகளை பகிரங்கப்படுத்தாததை தமக்கு சார்பாக நினைத்துச் செயல்படுகிறார். அதிகமான அறிஞர்கள் பெயர்கூறாமல் அவரது தவறுகளை சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். இவருடைய தவறுகளை  அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட நூல்களில் ஏராளம் ஏராளம் காணமுடிகிறது.  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் முஸ்லிம்களை உரிமையின்றி நோவினை செய்தார்கள், முதன் முதலாக படைக்கப்பட்ட படைப்பு எதுவென நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் தெளிவுடுத்தவில்லை, இசை ஆகுமானது, உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி தவறாக கூறியது, ஜஹ்மிய்யா என்ற வழிகெட்ட பிரிவினர்கள் இஸ்லாத்தின் எதிரிகளல்லர் என இவ்வாறு ஏராளமான மயிர்சிலுக்கக்கூடிய வழிகெட்ட கருத்துக்களை அடிப்படை விடயங்களிலும். நுணுக்கப் பிரிவுகளிலும் கூறியுள்ளார். இவைகளை நாம் 'அல்கர்ளாவி பில்அராஃ' என்ற நூலில் தெளிவாக கூறியுள்ளோம்.

அறிஞர்கள் பேசாமல் இருப்பதால் அவர்களும் என்னுடைய கருத்துகளை ஆதரிக்கிறார்கள் என எண்ணிவிட்டார் போலும். இதனால் அவரின் ஊகத்தின் அடிப்படையில் பல படிகள் மேலே சென்று நடைபெறும் நிகழ்வுகளுக்கு தனது சுய அபிப்பிராயத்தின் அடிப்படையில் மார்க்கத்தீர்புக்களை வழங்குகிறார். ஆனால் அவரிடம் ஒரு முப்திக்கு இருக்கவேண்டிய பண்புகளோ ஒர் (முஜ்தஹித்) அறிவாரய்ச்சியாளருக்குரிய நிபந்தனைகளோ அவரிடம் கிடையாது.

முஜ்தஹித்களாகிய இமாம்களின் கூற்றுக்களையும் அவர்கள் வழங்கிய மார்கத்தீர்ப்புக்களையும் கூறுவதற்குப்பதிலாக அவர்களின் கருத்துக்களுக்கு மாற்றமான கருத்துக்களை கூறுவதோடு எத்தனையோ விடயங்களில் 'இஜ்மா' ஏகோபித்த முடிவுக்கு  மாற்றமாகவும் பிரபல்யத்தை மாத்திரம் எதிர்பாத்து கூறியுள்ளார். இயலாமைக்காகவோ சரிகாண்பதற்காகவோ அறிஞர்கள் வாய்மூடி இருக்கவில்லை. மறாக தகுதிவாய்ந்த உலமாக்கள் குறைவாகவும் அவர்களுக்குரிய வேலைப்பளுக்கள் அதிகமாகவும் இருப்பதே காரணமாகும்.

மேற்கூறப்பட்ட கர்ளாவியின் வழிகெட்ட பிரசுரங்கள் உச்சகட்டத்தை அடைந்து  பிரசுரங்கள் பள்ளிவாயல்களிலும், வீடுகளிலும் இலவசமாக விநியோகிகிக்கப்படுவதையும் அநியாயமாக ஸகாத் சொத்துக்களை வேட்டையாடுவதற்க்காக கர்ளாவி கூறும் கருத்துடைய வேறு பிரசுரங்களும் இவைகளோடு விநியோகிக்கப்படுகின்றன. அதனால் இதை தெளிவுபடுத்த வேண்டிய கடமைப்பாடு எமக்கு இருக்கிறது. எங்களிடம் இருப்பவைகளில் எங்களுடைய மார்க்கம் தான் எங்களுக்கு உயர்ந்தது. திரிவுபடுத்தல்களை விட்டும் பாதுகாப்பது மார்க்கச்சட்டத்தின்படி எம்மீது கடமையாகும். சிறுதுளி நீராக இருந்தாலும் அது பெருக்கெடுத்து வீடுகளையும் மக்களையும் அழிப்பதற்கு முன் பாதுகாப்பதே சிறந்ததாகும்.

 சில அறிஞர்கள் கர்ளாவிக்கு இரகசியமாக உபதேசம் செய்த போதும் அதை அவர் ஏற்கவில்லை. மார்க்கத்தின் அடிப்படையில் அறுக்கப்படாத இறைச்சிகளை சாப்பிட முடியும் என கர்ளாவி பத்வா வழங்கிய போது அஸ்ஸெய்யித் அப்துல்ஹை அல்குமாரி (றஹ்)  அவர்கள் ஒரு சிறு நூலை மறுப்பாக எழுதி வெளியிட்டார்கள். அதேபோல் முஹத்திஸ் அப்துல்லாஹ் அல்குமாரி (றஹ்) அவர்களும் தவறை சுட்டிக்காட்டிய போது அதை ஏற்கவுமில்லை தனது தனிப்பட்ட கருத்தை வாபஸ் பெறவுமில்லை.

 முஸ்லிம்களை இவரைக்குறித்து எச்சரிப்பதற்க்காவும் அல்லாஹுத்தாஆலாவின் மார்க்கத்தை பாதுகாப்பதற்காக வேண்டியும் இதை பகிரங்கமாக வெளியிடுகிறோம.; அல்லாஹ்வின் கிருபையால் உலகவிடயத்தில் அவருடன் போட்டிபோடவுமில்லை சொத்துப் பிரச்சினை கிளப்பவுமில்லை. அல்லாஹுத்தஆலா பொருந்திக்கொள்ளாத விதத்தில் நாம் சாப்பிடவும் மாட்டோம் அவருடன் ஸகாத் பங்கில் சேர்ந்துகொள்ள விருப்பமுமில்லை. என்றாலும் உபதேசம் கட்டாயமானதாகும்.

உங்களில் யாராவது ஒரு தவறைக் கண்டால் கையினால் தடுக்கட்டும் முடியாவிட்டால் நாவினால் தடுக்கவும் அதற்கும் முடியாவிட்டால் உள்ளத்தால் வெறுத்து நடக்கவும் இதுதான் ஈமானின் கடைசி படித்தரமாகும் என நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள் (ஆதாரம் முஸ்லிம்)

கர்ளாவியைப்பற்றி எச்சரிக்கை செய்வது ஹராமாக்கப்பட்ட புறம் பேசுவதில் அடங்கமாட்டாது  என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும். ஏனெனில் நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உணவில் மோசடி செய்தவரை குறித்து எச்சரிக்கை செய்துள்ளதோடு முஸ்லிம்களுக்கு மத்தியில் வாழ்ந்த இருவரைப்பற்றி இன்னாருக்கும், இன்னாருக்கும் மார்க்கத்தைப்பற்றி ஒன்றுமே தெரியாது எனவும் கூறியுள்ளார்கள். 

தொடரும்