மறைக்கப்படுகின்ற நபிமமொழிகளும் வழிகேடர்களின் அடையாளங்களும்
Moulavi AzmyKhan AlMuayyidi
முன்னோர்கள் வழியில் இஸ்லாத்தை அறிவோம்
Thursday, June 10, 2021
மறைக்கப்படுகின்ற நபிமமொழிகளும் வழிகேடர்களின் அடையாளங்களும்
Wednesday, January 3, 2018
இப்னு தைமிய்யாவின் உண்மை முகம் - 10
4- இப்னுதைமிய்யாவும்
இஸ்லாமிய அறிஞர்களும்
இப்னுதைமிய்யாவிடமுள்ள மிகச்சிறந்த விஷேஷத்தன்மை அவரின் நாவன்மையும்
தர்க்கம் புரிவதுமாகும்.
டமஸ்கஸ் நாட்டு தலைவரின் சமூகத்தில் மார்க்க சட்ட வல்லுனர்களுடன்
நடைபெற்ற ஒரு கலந்துரையாடலைப்பற்றி பின்வருமாரு வர்ணிக்கிறார்.
இப்னுதைமிய்யா: முற்காலத்திலே மார்க்கத்தை பின்பற்றும் 'பாஸிக்' உடைய விடயத்தில் கருத்துவேற்றுமை
கொள்ளப்பட்டது. இது மார்க்கத்தில் ஏற்பட்ட முதலாவது கருத்துவேற்றுமையாகும்.
பெரியார்: அவ்வாரல்ல முஸ்லீம்கள் முதலாவது கருத்துவேற்றுமை கொண்ட
விடயம் கொள்கை கோட்பாடு சம்பந்தமான விடயமாகும்.
இப்னுதைமிய்யா: நான் கோபமடைந்து கூறினேன். நீர் சொல்வது தவறாகும். இது ஏகோபித்த முடிவுக்கு மாற்றமான பொய்யாகும். ஒழுக்கமும் கிடையாது சிறப்பும் கிடையாது. நீர் என்னுடன் ஒழுக்கமாக
பேசவில்லை. நீர் சரியாக பதில் சொல்லவும் இல்லை.
அல் உகூதுத்துர்ரிய்யா பீமனாகிபி இப்னுதைமிய்யா (பக்:236)
இதுதான் இப்னுதைமிய்யா பேசும் போது கடைபிடித்த ஒழுக்கமாகும்.
ஒரு முறை இப்னுதைமிய்யா ஒரு விடயத்தில் பத்வா கொடுத்த போது மற்றுமொறு அறிஞர் அதற்கு மாற்றமாக
பத்வா கொடுத்ததால் அதை கேள்விப்பட்ட இப்னுதைமிய்யா இவ்வாறு யாராவது பத்வா கொடுத்தால்
அவர் வீட்டிலுள்ள கழுதையைப் போன்றவறாகும் எனக்கூறினார்
அல்பகீஹுல்முஅத்திப்
இப்னுதைமிய்யா (பக்:152)
இமாம் இப்னு அறபி, இமாம் அபீப் அத்தில்மஸானி, இமாம் ஙஸ்ஸாலி, இமாம் பஹ்ருர்ராஸி போன்றவர்களை அதிகமாக ஏசக்கூடியவராக
இருந்ததோடு வேண்டுமென்றே குறைகண்டதோடு இந்தியர்கள், யூனானிகளின் குஞ்சுகள் என்றும் கூறினார்.
இப்னுல் முதஹ்ஹர் அல்ஹல்லி அவர்களைப்பற்றிக் கூறும் போது இப்னுல்
முனஜ்ஜஸ் என்று கூறுவார். (இப்னுல் முதஹ்ஹர் என்றால் சுத்தமானவரின் மகன் இப்னுல் முனஜ்ஜஸ்
என்றால் அசுத்தமானவரின் மகன் என்று பொருளாகும்).
தர்க்கவியல் அறிஞரான தபீரான் அவர்களைப்பற்றிக் கூறும் போது துபைரான்
என்று கூறுவார்.
(அல்வாபீ பில்வபிய்யாத்
அஸ்ஸபதி (7:18)
இது தான் இப்னுதைமிய்யா கடைபிடித்த ஒழுக்கமாகும்.
5- யஸீதிய்யாக்களுடன்
எல்லைமீறிய இக்கூட்டத்தாருடன் இப்னு தைமிய்யாவுக்கு இருந்த தொடர்பைப்
பார்க்கும் போது பல சந்தேகங்களை அவரின் கொள்கையைப்பற்றி கிளப்பவேண்டியிருக்கிறது. இந்த
யஸீதிய்யாக்களில் யஸீத் இப்னு முஆவியாவையும், அதீ இப்னு முஸாபிர் அல்உமவியையும் அளவுகடந்து நம்பியவர்கள் இருந்தார்கள்.
இதனால் இவர்களை இஸ்லாமிய அறிஞர்கள் மார்க்கத்தை விட்டு வெளிப்பட்டவர்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
அவர்கள் மனிதனுக்கு அல்லாஹ்வின் பண்புகள் இருப்பதாக நம்பியதே காரணமாகும். இவர்கள் அதவிய்யா
என்றும் அழைக்கப்படுவார்கள்.
இப்பிரிவினர் வாழ்ந்த காலப்பகுதியில் இப்னு தைமிய்யாவும் வாழ்ந்ததோடு
அவர்களோடு கடிதம் எழுதும்போது ஏனைய எதிராளிகளுக்கு எழுதுவது போன்றல்லாமல் இப்னு தைமிய்யாவே
பித்அத்வாதிகள் என்று கூறியவர்களுக்கு எழுதுவது போன்றில்லாமல் நல்ல முறையில் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தின் சில வாசகங்களை தருகிறோம்:
சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்த அஷ்ஷைக், அல்ஆரிப் அதிஇப்னு
முஸாபிர் அல் உமவியை பின்பற்றக்கூடியவர்களான முஸ்லிம்களில் நின்றும் இக்கடிதம் சென்றடைய
வேண்டியவர்களுக்கும் அவர்கள் போன்றவர்களுக்கும் அஹ்மத் இப்னு தைமிய்யா எழுதிக்கொள்வதாவது:
அல்லாஹுதஆலாவின் சாந்தியும், கருனையும் அபிவிருத்தியும் உங்கள் மீது நிலவட்டுமாக.
அல்வாஸிதிய்யதுல் குப்ரா (பக்:05)
இவர்கள் எல்லைமீறிச் சென்றவர்கள் எனத்தெரிந்தும் முஸ்லீம்கள்
என்றும் சுன்னத் ஜமாத்தினரைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறுவதோடு அவர்களுக்காக பிரார்த்தித்திருப்பதோடு
ஸலாமும் சொல்கிறார். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கும் அவர்கள் போன்றவர்களுக்கும் என்றும்
கூறுகிறார்.
அஹ்லுபைத்தினரை குறைகண்டு இமாம்களான ராஸி, ஙஸ்ஸாலி, இப்னு ஸீனா போன்றவர்களை இந்தியர்கள் யூனானிகளின் குஞ்சுகள்
என்றும், யஹுதி நஸாராக்களை
விட வழிகேடானவர்கள் என்றும் கூறிய இப்னு தைமிய்யா எல்லை மிறியவர்கள் என்று அறிஞர்களால்
அடையாளம் காட்டப்பட்ட இக்கூட்டத்தினருடன் இவ்வாறு பேசுவதற்கான காரணம் தான் என்ன?
அவர்கள் யஸீத் இப்னு முஆவியாவை அளவுகடந்து நம்பி பின்பற்றியதே
அதற்கான கராணமாகும். யஸீதை கண்ணியப்படுத்துவது இப்னு தைமிய்யாவிடம் சுன்னத்ஜமாத்தினர்
என்பதற்கு அடையாளமாகும். கண்ணியப்படுத்துவது
அளவுகடந்துவிட்டாலும் சரியாகும். இவரே தான் அஹ்மத் இப்னு ஹன்பல் றஹ்மதுல்லாஹி
அலைஹி அவர்கள் யஸீதைப்பற்றி பின்வருமாரு கூறியதை அறிவித்திருக்கிறார்.
'அல்லஹு தஆலாவைக்கொண்டும்
மறுமையைக் கொண்டும் ஈமான் கொண்ட ஒருவர் யஸீதை நேசிப்பாரா?'
தொடரும்....
Tuesday, December 5, 2017
இப்னு தைமிய்யாவின் உண்மை முகம் - 09
3. அஹ்லுபைத்தினர்களை
குறைசொல்வது
அஹ்லுபைத்தினர்களின் எதிராலிகளை பாதுகாக்க முற்பட்டது. அவர்களின்
அந்தஸ்த்துக்களை பொய்யாக்கியது மாத்திரமல்லாமல் அதையும் தாண்டி நாவினால் குறைசொல்லவும்
முற்பட்டார். இப்படியான ஒரு நிலை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தின்
பரம எதிரிகளான குரோதமும் வஞ்சகமும் நிறைந்த நவாஸிப் (நாஸிப்கள்) களிடமே தவிர இந்த உம்மத்தில் வேறுயாரிடமும்
காணப்படவில்லை.
இப்னு தைமிய்யா சொல்வதை கேளுங்கள்:
அஹ்லுபைத்தினர் இருப்பதால் எந்த ஒரு நலவும் உட்கிருபையும் ஏற்படவில்லை.
மின்ஹாஜுஸ்ஸூன்னா 2 : 84
ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கின்கிறார்கள்:
நான் உங்களிலே விட்டுச்செல்கிறேன் அதை பின்பற்றி நடந்தால் எனக்குப்பின்னால் வழிதவற
மாட்டீர்கள். அதுதான் அல்லாஹ்வின் வேதமும் எனது குடும்பமுமாகும். நாளை மறுமையில் ஹவ்லுல்
கவ்ஸரை வந்தடையும் வரை ஒன்றை ஒன்று பிரியாது
திர்மதி 3788, அஹ்மத் 3: 17 ஹாகிம் 3: 148
மற்றுமொரு ஹதீஸில்
நான் உங்களுக்கு மிகப்பெரிய இரு விடயங்களை விட்டுச்செல்கிறேன்.
முதலாவது அல்லாஹ்வின் வேதமாகும். அதிலே நேர்வழியும் பிரகாசமும் இருக்கின்கிறது....
மற்றது எனது குடும்பமாகும். எனது குடும்பத்தார் விடயத்தில் அல்லாஹு தஆலவை நினைவூட்டுகிறேன்
என்று மூன்று தடைவை கூறினார்கள். முஸ்லிம் 3408.
ஆனால் இப்னு தைமிய்யா இந்த ஹதீஸ்களைப்பற்றி சொல்லும் போது கைகொட்டி
சிறிக்கக்கூடிய அளவு சிறுபிள்ளைத் தனமாக விளக்கமளித்துள்ளார்.
ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெற்றிருக்கும் ஹதீஸ் நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இருக்குமானால் அதில் குர்ஆனை பின்பற்றும்படியே சொல்லப்பட்டுள்ளதே
தவிர அஹ்லுபைத்தினரை பின்பற்றும் படியாக அங்கே சொல்லப்படவில்லை, மாறாக அஹ்லுபைத்தினர் விடயத்தில் அல்லாஹ்வை நினைவுபடுத்துகிறேன் என்றே
கூறியுள்ளார்கள்.
மின்ஹாஜுஸ்ஸுன்னா
4 : 85
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகப்பெரிய இரண்டு விடயங்களை
விட்டுச்செல்கிறேன் என்று சொன்னது விளங்கவில்லையா?
அதில் முதலாவது அல்லாஹ்வின் வேதம் என்று கூறிவிட்டு தொடர்ந்து
அஹ்லுபைத்தினர் என்று கூறுகிறார்கள். குர்ஆனை மாத்திரம் பின்பற்றக் சொன்னால் அப்பொழுது
இரண்டாவது விடயம் எங்கே?
உண்மையிலே மனோ இச்சை அவரை செவிடாகவும் குருடாகவும் ஆக்கிவிட்டது.
அலி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் யுத்தம் செய்தது பற்றிக்கூறும் போது:
அலி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மக்களுடன் யுத்தம் செய்தது அவரை மக்கள்
வழிப்படுவதற்காகத்தான் (மக்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற
சுய நலத்துக்காகத்தான்) அல்லாஹ்வுக்கு வழிப்பட்டல்ல.
யாரவது முஆவியா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அரசுக்கெதிராக கிளர்ச்சிசெய்தவர் எனக் குறைசொன்னால் அலி அலைஹிஸ்ஸலாம்
அவர்களும் அரசுக்கெதிராக கிளர்ச்சிசெய்த அநியாயக்காரர் தான் என நவாஸிப்கள் சொல்வார்கள்.
அவருடைய ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளத்தான் யுத்தம் செய்து மக்கள் மீது அடர்ந்தேரினார்.
யாராவது தனது சுய நலத்துக்காக யுத்தம் செய்தால் அவர் உலகத்தில் குழப்பத்தை விளைவித்து
உயார்த்தியை விரும்பியவராகும். இது பிர்அவ்னுடைய செயலாகும். அல்லாஹு தஆலா கூறுகிறான்:
அந்த மறுமை வீட்டை யார் உலகத்தில் உயர்த்தியை நாடாமலும் குழப்பத்தை
விளைவிக்காமலும் இருந்தார்களோ அவர்களுக்கே நாம் ஆக்கிவைத்துள்ளேம். இறுதி நல்முடிவு
இறையச்சம் உள்ளவர்களுக்காகும்.
யாராவது உலகத்தில் உயர்த்தியை நாடி குழப்பத்தை விளைவித்தாரோ
அவர் மறுமையில் சிதேவிகள் கூட்டத்தில் சேரமாட்டார்.
மின்ஹாஜுஸ் ஸுன்னா
(2:202,205,232,244)
இதே கருத்தில் பல பக்கங்கனள அவருடைய மின்ஹாஜுஸ் ஸுன்னா என்ற
நூலில் எழுதுகிறார்.
மின்ஹாஜுஸ் ஸுன்னா என்ற நூல் ஆரம்பம் முதல் கடiசிவரை இது போன்ற நூதனமான
கருத்துக்களால் நிரம்பிக் காணப்;படுகிறது. அந்நூலிலிருந்து பெறப்பட்ட தகவல்களே அதற்கு சான்றாகும்.
ஆனால் அலி அலைஹிஸ்ஸலாம் யுத்தம் செய்தது மார்க்கத்துக்கு அமைவானதும்
அதற்கு ஒத்தாசையாக இருப்பது அவசியமான விடயமாகும் என்பதை பின்வரும் விடயங்கள் தெளிவுபடுத்துகின்றது.
குர்ஆன் இறங்கியதற்காக நான் யுத்தம் புரிந்தது போல் அதற்கு கருத்துக்கொடுக்கும்
விடயத்தில் யுத்தம் செய்பவர் உங்களிலே இருக்கின்றார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறியபோது அச்சபையில் அபூ பக்ர் றழியல்லாஹு அன்ஹு, உமர் றழியல்லாஹு அன்ஹு போன்றவர்களும் இருந்தார்கள். அப்பொழுது அபூ பக்ர்
றழியல்லாஹு அன்ஹு நானா என்று கேட்டபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இல்லை
என்று சொன்னார்கள். உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் நான்தானே எனக்கேட்ட போது இல்லை என்று சொல்லிவிட்டு செறுப்பு சரிசெய்யக்கூடியவர்
எனச்சொன்னார்கள், அலி அலைஹிஸ்ஸலாம்
அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் செறுப்பை சரிசெய்யக்கூடியவர்களாக இருத்தார்கள்.
அபூ ஸயீத் றழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்: நாங்கள் அலி அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் போய்
இதை சுபச்செய்தி சொன்னபோது ஏற்கனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டவர்
போல் தலையை உயர்த்தாமல் இருந்தார்கள்.
இது ஸஹீஹான ஹதீஸாகும். அஹ்மத்(3 : 82),இப்னு ஹிப்பான் (6898), ஹாகிம் (3 :123)
இது ஸஹீஹான ஹதிஸ் என ஹாகிம் றஹ்மதுல்லாஹி அலைஹி கூறியதை தஹபி
றஹ்மதுல்லாஹி அலைஹி சரிகண்டுள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலைஹிஸ்ஸலாம், பாத்திமா அலைஹஸ்ஸலாம், ஹஸன் அலைஹிஸ்ஸலாம்
ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் ஆகிய நால்வரையும் பார்த்து நீங்கள் யுத்தம் செய்தவர்களுடன் நானும்
யுத்தம் செப்வேன, நீங்கள் சமாதானம் செய்தவர்களுடன் நானும் சமாதானம் செய்வேன் எனக் கூறினார்கள்.
திர்மிதி(3870), அஹ்மத் (2:442)
ஆனால் இப்னு தைமிய்யா இந்த ஹதீஸை பொய்யானது எனக்கூறுகிறார்.
ஆனால் அதற்கான எந்த காரணத்தையும் ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. மாறாக அல்லாஹ்வினதும்
ரஸுலினதும் பேச்சுக்களில் வீணான தர்க்கத்தையே முன்வைக்கிறார்.
அலி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அறிவைப்பற்றி இப்னு தைமிய்யா கூறும்போது
முதலாம் தரத்தில் படிக்கும் மாணவன் கூறுவதைப்போல் வாதத்;தை முன்வைக்கிறார்.
அதாவது
நான்கு மத்ஹபுகளின் இமாம்களோ ஏனயை மார்க்க சட்டவல்லுனர்களான
இமாம்களோ அலி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கருத்தை எடுக்கவில்லை, இமாம் மாலிக் அவர்கள்
மதீனாவாசிகளின் கருத்துக்களை எடுத்தார்கள். மதீனா வாசிகள் அலி அலைஹிஸ்ஸலாம் அவர்களின்
கருத்தை எடுக்கமாட்டர்கள்... இமாம் அபூஹனீபா, இமாம் ஷாபி, இமாம் அஹ்மத் ஆகியோர் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹமா அவர்களின்
வழியில் சென்றவர்களாகும். இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹமா சுயமான முஜ்தஹித் அறிவாராய்ச்சியாளராகும்.
அவர்கள் அலி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கருத்தை சொல்லமாட்டார்கள்.!!
மின்ஹாஜுஸ் ஸுன்னா
(4:142,143)
மனோ இச்சைப்படி செயல்படுபவர்கள் இவ்வாருதான். அவர்கள் ஒன்றுக்குப்
பின்னால் ஒன்றாகச்சொல்லி தர்க்கத்தில் மூழ்கிவிடுவார்கள். ஆனால் அவர்களுக்கே என்ன சொல்வதென்று
தெரியாமல் ஆகிவடும். இதனால் உலமாக்களுக்கும் அறிவைத் தேடுபவர்களுக்கும் பரிகாசம் செய்யும்
தளமாக மாறிவிடுகிறார்கள். குர்ஆனையும் ஹதீஸையும் விட இப்னு தைமிய்யாவை கண்மூடித்தனமாக
பின்பற்றுபவர்கள் விதிவிலக்காகும்.
இமாம் ஷாபி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் மதீனாவாசிகளின் அறிவு
அலி அலைஹிஸ்ஸலாம், இப்னு அப்பாஸ் றழியல்லாஹு
அன்ஹமா ஆகிய இருவர்களிலுமே தங்கியுள்ளது என தனிப்புத்தகத்தையே எழுதியுள்ளார்கள்.
அலி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னதாக ஒரு கருத்து உறுதியாக நம்பப்படுமானால்
வேறொரு கருத்தை நாம் தேடமாட்டோம் என இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹமா கூறியுள்ளார்கள்.
இதை இப்னு குதாமா 'முக்னி' யில் கூறியுள்ளர்கள்.
தபகாதுல் புகஹா (பக்:42)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரப்பிள்ளையான ஹுஸைன்
அலைஹிஸ்ஸலாம் அவர்களைப்பற்றிக் கூறும் போது:
இவர் கூறியிருக்கும் வார்த்தை போன்றதை யஸீதிடம் நெருக்கத்தை
பெற்றுக்கொள்வதற்காக அக்காலத்திலிருந்த பிரசங்கிகளும் பேசியிருக்கமாட்டார்கள்.
யஸீதுக்கு எதிராக ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் புறப்பட்டதைப்பற்றிக்
கூறும் போது:
இது தவரான முடிவாகும், இதில் ஏற்படும் நலவுகளைவிட தீமையே அதிகாமகும். ஆதிகாரம் மிக்க
அரசுகளுக்கெதிராக வெளிப்பட்ட அனைவரினதும் செயல்களினால் ஏறப்பட்ட நலவை விட தீமையே அதிகமாகும்.
மின்ஹாஜுஸ்ஸுன்னா (2:241)
அப்படியானால் சுதந்திரத்துக்காக
போராடுபவர்களே!, தனி நாட்டை விரும்புபவர்களே!
நீங்கள் அனைவரும் குழப்பம் விளைவிக்க கூடியவர்களாகும். அரசருக்கு கட்டுப்படுவதும் சாட்டைகளுக்கு
முதுகை நீட்டுவதும் வால்களுக்கு கழுதை;தை நீட்டுவதுமே உங்கள் மீதுள்ள கடைமயாகும். ஏனெனில் இப்னு தைமிய்யா
சுதந்திரத்துக்காக போராடுவது பிழையான செயல் என்றும் அதனால் ஏற்படும் நலவை விட தீமையயே
அதிகம் எனக் கூறியுள்ளார் அல்லவா!! மாலிக் இப்னு நபி என்ற பெரிய ஆய்வாளர் காலனியாதிக்கத்தின்
தன்மை என்ற நூலில் இதை கூறாமல் விட்டுவிட்டது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா !!!!
மீண்டும் இப்னு தைமிய்யா யஸீதை நியாயப்படுத்தி சொல்கிறார்.
யஸீத் பனு இஸ்ரவேலர்களை விட பாவம் செய்தவரல்ல. பனு இஸ்ரவேலர்கள்
நபிமார்களை கொல்பவர்களாக இருந்தார்கள். ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களை கொலை செய்தது நபிமார்களை
கொலைசெய்ததை விட பெரியகாரியமல்ல.
மின்ஹாஜுஸ்ஸுன்னா (2:247)
இதைவிட மேசமான ஒரு நியாயப்படுத்தலை காணமுடியுமா??
இப்புத்தகம் நீண்டுவிடும் என்பதை கருத்தில்கொண்டு இத்துடன் நிறைவு
செய்து ஏனயை விடயங்களைப் பார்ப்போம்
தொடரும்......
Monday, November 27, 2017
இப்னு தைமிய்யாவின் உண்மை முகம் - 08
2. அஹ்லுபைத்துகளின்
அந்தஸ்த்துக்களை பொய்யாக்குவது
இப்னு தைமிய்யா அவரின் எல்லையற்ற பிடிவாதத்தை வெளிப்படுத்தகூடிய
பல கூற்றுக்களை கூறியுள்ளார். அதிலிருந்து சில விடயங்களை தருகிறோம்.
ரஸுல்மார்களின் குடும்பத்தினர் சம்பந்தமாகவும் எமது நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தினர் சம்பந்தமாகவும் கூறப்பட்டிருக்கும் அந்தஸ்த்துகளைப்
பார்ப்போம்.
இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் குடும்பத்தை பற்றி அல்லாஹு
தஆலா கூறும் போது :
அல்லாஹ்வுடைய அருளும், அவனுடைய பாக்கியங்களும் (இப்றாஹிமுடைய) இவ்வீட்டிலுள்ள உங்கள்
மீதுள்ளன. நிச்சயமாக அவன் மிக்க புகழுடையவனாகவும், மகிமை உடையவனாகவும் இருக்கிறான்.(ஹுத்: 73)
12 நபிமார்களின் பெயர்களை
கூறிவிட்டு 'இவர்கள் அனைவரையும்
உலகத்திலுள்ள அனைவரை விடவும் மேன்மையாக்கி வைத்தோம். இவர்களுடைய மூதாதைகளிலும் இவர்களுடைய
சந்ததிகளிலும் இவர்களுடைய சகோதரர்களிலும் (பலரை) மேன்மையாக்கி வைத்ததுடன் இவர்கள் அனைவரையும்
தேர்ந்தெடுத்து நேரான வழியிலும் செலுத்தினோம்'. (அன்ஆம்: 86,87)
நிச்சயாமாக அல்லாஹ், ஆதமையும், நூஹையும், இப்ராஹீமுடைய குடும்பத்தினரையும், இம்ரானுடைய குடும்பத்தினரையும்
அகிலத்தாரை விட மேலாகத் தேர்ந்தெடுத்தான்.
அவற்றில் சில, சிலரிலுள்ள சந்ததிதான், அல்லாஹ் (யாவற்றையும்)
செவியுறுகிறவன், நன்கறிகிறவன்.ஆல இம்ரான்
: (33.34)
மற்றுமொரு இடத்தில் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றி
அல்லாஹு தஆலா கூறும போது: இன்னும் அவர்களுடைய
சந்ததிகளுக்கே நபிப்பட்டத்தையும் வேதத்தையும் சொந்தமாக்கினோம் (அன்கபூத்:27) என கூறியுள்ளாள்.
அன்றியும், நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், கூடுதலாக யஃகூபையும் அன்பளிப்புச் செய்தோம், (இவர்களில்) ஒவ்வொருவரையும்
நல்லோர்களாகவும் நாம் ஆக்கினோம். இன்னும், நம்முடைய கட்டளையின்படி
நேர்வழி காட்டுகின்ற தலைவர்களாகவும் அவர்களை நாம் ஆக்கினோம், அன்றியும், நன்மையான காரியங்களைச்
செய்யுமாறும், தெழுகையை நிறைவேற்றுமாறும், ஜகாத்தைக் கொடுத்து
வருமாறும் இவர்களுக்கு (வஹீ மூலம்) நாம் அறிவித்தோம், இவர்கள் அனைவரும்
நம்மையேவணங்குபவர்களாக இருந்தார்கள். (அன்பியா: 72,73)
எங்களுடைய நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
குடும்பத்தாரைப்பற்றிக் கூறும்போது:
(நபியுடைய) வீட்டுடையார்களே!
உங்களை விட்டு எல்லா அசுத்தங்களையும் நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் விரும்புகிறான்.
(அஹ்ஸாப் :33)
(நபியே) நீங்கள் கூறுங்கள்:
இதற்காக நான் உறவினர்களை நேசிப்பதை தவிர யாதொரு கூலியும் கேட்கவில்லை. (சூரா:23 )
அலி அலைஹிஸ்ஸலாம் பாதிமா அலைஹஸ்ஸலாம், ஹஸன் அலைஹிஸ்ஸலாம், ஹூஸைன் அலைஹிஸ்ஸலாம்
ஆகிய நாள்வரையும் பார்த்து இறiவா இவர்கள் எனது குடும்பத்தினர்கள். அவர்களை விட்டும் அசுத்தத்தை
நீக்கி அவர்களை பரிசுத்தப்படுத்துவாயாக என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரார்த்தித்தார்கள்.
முஸ்லிம் 2424, திர்மிதி 3205, 3787,3871
அல்லாஹு தஆலாவும் மலக்குமார்களும் நபியின் மீது ஸலவாத் சொல்கிறார்கள்.
விசுவாசிகளே நீங்களும் அவர்கள் மீது ஸாலத்தும் ஸலாமும் சொல்வீர்களாக (அஹ்ஸாப்: 56) என்ற வசனம் இறங்கிய
போது ஸஹாபக்கள் அல்லாஹ்வின் துதரே உங்கள் மீது எப்படி ஸலவாத் சொல்வது எனக்கேட்ட போது
اللهم صل على محمد
وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما
باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
எனச்சொல்லும் படி கூறினார்கள்.
பொருள். இறiவா இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தார்
மீதும் ஸலவாத் சொன்னது போல் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும்
அவர்களுடைய குடும்பத்தார் மீதும் ஸலவாத் சொல்வாயாக. இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்
மீதும் அவர்கள் குடும்பத்தார் மீதும் பரக்கத் செய்ததுபோல் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தார் மீதும் பரக்கத் சொய்வாயாக, நீ மிகவும் புகழுக்குரியவனும்
கீர்த்தி உள்ளவனுமாகும்.
ஆதாரம் புகாரி, முஸ்லிம்.
நான் உங்களுக்கு மிகப்பெரிய இரண்டு விடயங்களை விட்டுச்செல்கிறேன்
அவை அல்லாஹு தஆலாவின் வேதமும் எனது குடும்பமுமாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் 2408, திர்மிதி 3788
குர்ஆனிலும் ஹதீஸிலும் இவ்வாறு கூறப்பட்டிருக்கும் இவ்விடயத்தில்
இப்னு தைமிய்யாவின் நிலைப்பாடு என்னவென்று பார்ப்போம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தினரை முற்படுத்த
வேண்டும் என்ற கருத்து ஜாஹிலிய்யா காலத்தில் தலைவர்களின் குடும்பத்தினரை முற்படுத்த
வேண்டும் என்றிருந்த நிலையின் வெளிப்பாடாகும் என ஒரே வர்த்தையில் கூறியிருக்கிறார்.
மின்ஹாஜுஸ் ஸுன்னா
(3:269)
அப்படியானால் அல்லாஹு
தஆலா நபிமார்கள் ரஸுல்மார்கள் அவர்களுடைய குடும்பத்தினர்களை தெரிவுசெய்து அவர்களை இமாம்களாகவும்
தளபதிகளாகவும் ஆக்கி அவர்களை உயர்ந்த அந்தஸ்த்துக்களில் வைத்திருப்பது, அவர்களுக்கு செய்யப்பட
வேண்டிய கடமைகள் பற்றி சுன்னாவில் எடுத்துக்சொல்லப்பட்டதெல்லாம் ஜாஹிலிய்யா காலத்தின்
வெளிப்பாடு என்றே சொல்ல நேரிடும்!!
இது அல்லாஹு தஆலாவுடைய குர்ஆனையும் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாவையும் பொய்ப்பிக்கும் பரிகாசம்
செய்யும் வார்த்தைகள் என்று இதற்கு சொல்லாவிட்டால் வேறெதற்குச் சொல்வது?
அஹ்லுபைத்தினரே உங்களை விட்டும் அல்லாஹுதஆலா அசுத்தத்தை நீக்கி
உங்களை பரிசுத்தப்படுத்த விரும்புகறான் என்ற திருவசனம் இரங்கிய போது நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் அலிஅலைஹிஸ்ஸலாம் பாதிமா அலைஹஸ்ஸலாம் ஹஸன் அலைஹிஸ்ஸலாம் ஹுஸைன்
அலைஹிஸ்ஸலாம் ஆகிய நால்வரையும் அழைத்து போர்வையினால் அவர்களை போர்த்தி மேற்சொன்ன வசனத்தின்
கருத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதாவது இறiவா இவர்கள் தான் எனது
குடும்பத்தினர்கள் இவர்களை விட்டும் அசுத்தத்தை நீக்கி பரிசுத்தப்படுத்துவாயாக எனப்பிரார்த்தித்தார்கள்.
இச்சம்பவத்தை இப்னு தைமிய்யா ஏற்றுக் கொண்டாலும் அவர் சொல்லியிருப்பதை
கவனியுங்கள்
அல்லாஹு தஆலா அவர்களை பரிசுத்தப்படுத்தவதாக வெறுமனே நாடியது
மாத்திரமாகும், அவ்வாறே நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களும் அதைக்கொண்டு துஆகேட்டது மாத்திரமாகும். ஆனால் இதனால் அல்லாஹுதஆலா
அவர்களை உண்மையாகவே பரிசுத்தப்படுத்தினான் என்பது அர்த்தமல்ல.
மின்ஹாஜுஸ்ஸுன்னா 2: 117
அல்லாஹு தஆலாவும் அவனது ரஸுலும் எதை நாடினார்களோ அதை இப்னுதைமிய்யா
நாடவில்லை. அதனால் தான் அதை அவர் நம்பவில்லை போலும்.
அல்குர்ஆனில் அவர்களைப்பற்றி என்னென்ன திருவசனங்கள் இடம்பெற்றிருக்கின்றனவோ
அதை பொய் எனக்கூறுகிறார்.
அவர்கள் நேசத்துடன் ஏழைக்கும், அனாதைக்கும், சிறைக்கைதிக்கும்
உணவளிப்பார்கள் என்ற ஸுரத்துத்; தஹ்ரில் இடம்பெற்றிருக்கும் வசனம் அஹ்லுபைத்தினர் சம்பந்தமாகவே
இரங்கியது என அனைத்து திருக்குர்ஆன் விரிவுரையாளர்களும் கூறியிருக்கும் போது அவ்வசனம்
அவர்கள் விடயத்தில் இரங்கவில்லை எனக்கூறுகிறார்.
உங்களுடைய பொறுப்பாளர் அல்லாஹ்வும் அவனது ரஸுலும் தொமுகையை நிலைநாட்டுபவர்களும்
ருகூவுடைய நிலையில் இருந்துகொண்டும் ஸகாத்கொடுக்கக் கூடியவர்களான விசுவாசங் கொண்டவர்களுமாகும்
என்ற வசனம் அலி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ருகூவில் இருக்கும் போது அவர்களுடைய மோதிரத்தை
ஸதகாவாக கொடுத்தர்கள் என்ற காரணத்துக்காகவே இவ்வசமை; அருளப்பட்டது என அனைத்து திருக்குர்ஆன் விரிவுரையாளர்களும்
ஏகோபித்து கூறியிருக்கும் போது அது பொய்யென மறுக்கிறார்.
அதிலும் குறிப்பாக அலி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சம்பந்தமாக ஸஹீஹான
அறிவிப்புத்தொடர்கள் மூலம் கூறப்பட்ட ஹதீஸ்களை பொய்யானவை எனக் கூறுகிறார்.
உதாரணமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலி அலைஹிஸ்ஸலாம்
அவர்களை சகோதரராக இணைத்துக் கொண்டார்கள் என்ற ஹதீஸை பொய்யெனக் கூறுகிறார். ஆனால் இது
'முதவாதிர்' என்ற பலாராலும் அறிவிக்கபட்ட
நம்பகரமான செய்தியாகும். அனைத்து வரலாற்றாசிரியர்களும் இதை கூறியுள்ளர்கள்
தபகாத் இப்னு ஸஃத் (3: 22), ஸீரத்து இப்னிஹிஷாம் (2: 109), அஸ்ஸீறதுன்னபவிய்யா (பக் :149), அல்இஸ்தீஆப் (3: 35), உஸ்துல்காபா (2 : 221), உயூனுல்அஸர் (6 :167), பிதாயா வந்நிஹாயா (7 :348), திர்மிதி(372), ஹாகிம்
(3 :14).
ஆனால் இப்னு தைமிய்யா சகோதரனாக இணைத்துக்கொண்ட ஹதீஸ் பாதிலானது
பிழையானது எனக் கூறுகிறார்.
மின்ஹாஜுஸ்ஸுன்னா
4:75
இவ்வாறுதான் ஏனயை அஹ்லுபைத்தினர்
விடயத்திலும் எந்த ஒரு ஆதாரமுமில்லாமலும் இமாம்களுடைய சன்றுகள் இல்லாமலும் பிடிவாதத்தையும்
மனோ இச்சையையும் அடிப்படையாக வைத்து எழுதுகிறார்.
தொடரும்...
Subscribe to:
Posts (Atom)