4- இப்னுதைமிய்யாவும்
இஸ்லாமிய அறிஞர்களும்
இப்னுதைமிய்யாவிடமுள்ள மிகச்சிறந்த விஷேஷத்தன்மை அவரின் நாவன்மையும்
தர்க்கம் புரிவதுமாகும்.
டமஸ்கஸ் நாட்டு தலைவரின் சமூகத்தில் மார்க்க சட்ட வல்லுனர்களுடன்
நடைபெற்ற ஒரு கலந்துரையாடலைப்பற்றி பின்வருமாரு வர்ணிக்கிறார்.
இப்னுதைமிய்யா: முற்காலத்திலே மார்க்கத்தை பின்பற்றும் 'பாஸிக்' உடைய விடயத்தில் கருத்துவேற்றுமை
கொள்ளப்பட்டது. இது மார்க்கத்தில் ஏற்பட்ட முதலாவது கருத்துவேற்றுமையாகும்.
பெரியார்: அவ்வாரல்ல முஸ்லீம்கள் முதலாவது கருத்துவேற்றுமை கொண்ட
விடயம் கொள்கை கோட்பாடு சம்பந்தமான விடயமாகும்.
இப்னுதைமிய்யா: நான் கோபமடைந்து கூறினேன். நீர் சொல்வது தவறாகும். இது ஏகோபித்த முடிவுக்கு மாற்றமான பொய்யாகும். ஒழுக்கமும் கிடையாது சிறப்பும் கிடையாது. நீர் என்னுடன் ஒழுக்கமாக
பேசவில்லை. நீர் சரியாக பதில் சொல்லவும் இல்லை.
அல் உகூதுத்துர்ரிய்யா பீமனாகிபி இப்னுதைமிய்யா (பக்:236)
இதுதான் இப்னுதைமிய்யா பேசும் போது கடைபிடித்த ஒழுக்கமாகும்.
ஒரு முறை இப்னுதைமிய்யா ஒரு விடயத்தில் பத்வா கொடுத்த போது மற்றுமொறு அறிஞர் அதற்கு மாற்றமாக
பத்வா கொடுத்ததால் அதை கேள்விப்பட்ட இப்னுதைமிய்யா இவ்வாறு யாராவது பத்வா கொடுத்தால்
அவர் வீட்டிலுள்ள கழுதையைப் போன்றவறாகும் எனக்கூறினார்
அல்பகீஹுல்முஅத்திப்
இப்னுதைமிய்யா (பக்:152)
இமாம் இப்னு அறபி, இமாம் அபீப் அத்தில்மஸானி, இமாம் ஙஸ்ஸாலி, இமாம் பஹ்ருர்ராஸி போன்றவர்களை அதிகமாக ஏசக்கூடியவராக
இருந்ததோடு வேண்டுமென்றே குறைகண்டதோடு இந்தியர்கள், யூனானிகளின் குஞ்சுகள் என்றும் கூறினார்.
இப்னுல் முதஹ்ஹர் அல்ஹல்லி அவர்களைப்பற்றிக் கூறும் போது இப்னுல்
முனஜ்ஜஸ் என்று கூறுவார். (இப்னுல் முதஹ்ஹர் என்றால் சுத்தமானவரின் மகன் இப்னுல் முனஜ்ஜஸ்
என்றால் அசுத்தமானவரின் மகன் என்று பொருளாகும்).
தர்க்கவியல் அறிஞரான தபீரான் அவர்களைப்பற்றிக் கூறும் போது துபைரான்
என்று கூறுவார்.
(அல்வாபீ பில்வபிய்யாத்
அஸ்ஸபதி (7:18)
இது தான் இப்னுதைமிய்யா கடைபிடித்த ஒழுக்கமாகும்.
5- யஸீதிய்யாக்களுடன்
எல்லைமீறிய இக்கூட்டத்தாருடன் இப்னு தைமிய்யாவுக்கு இருந்த தொடர்பைப்
பார்க்கும் போது பல சந்தேகங்களை அவரின் கொள்கையைப்பற்றி கிளப்பவேண்டியிருக்கிறது. இந்த
யஸீதிய்யாக்களில் யஸீத் இப்னு முஆவியாவையும், அதீ இப்னு முஸாபிர் அல்உமவியையும் அளவுகடந்து நம்பியவர்கள் இருந்தார்கள்.
இதனால் இவர்களை இஸ்லாமிய அறிஞர்கள் மார்க்கத்தை விட்டு வெளிப்பட்டவர்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
அவர்கள் மனிதனுக்கு அல்லாஹ்வின் பண்புகள் இருப்பதாக நம்பியதே காரணமாகும். இவர்கள் அதவிய்யா
என்றும் அழைக்கப்படுவார்கள்.
இப்பிரிவினர் வாழ்ந்த காலப்பகுதியில் இப்னு தைமிய்யாவும் வாழ்ந்ததோடு
அவர்களோடு கடிதம் எழுதும்போது ஏனைய எதிராளிகளுக்கு எழுதுவது போன்றல்லாமல் இப்னு தைமிய்யாவே
பித்அத்வாதிகள் என்று கூறியவர்களுக்கு எழுதுவது போன்றில்லாமல் நல்ல முறையில் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தின் சில வாசகங்களை தருகிறோம்:
சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்த அஷ்ஷைக், அல்ஆரிப் அதிஇப்னு
முஸாபிர் அல் உமவியை பின்பற்றக்கூடியவர்களான முஸ்லிம்களில் நின்றும் இக்கடிதம் சென்றடைய
வேண்டியவர்களுக்கும் அவர்கள் போன்றவர்களுக்கும் அஹ்மத் இப்னு தைமிய்யா எழுதிக்கொள்வதாவது:
அல்லாஹுதஆலாவின் சாந்தியும், கருனையும் அபிவிருத்தியும் உங்கள் மீது நிலவட்டுமாக.
அல்வாஸிதிய்யதுல் குப்ரா (பக்:05)
இவர்கள் எல்லைமீறிச் சென்றவர்கள் எனத்தெரிந்தும் முஸ்லீம்கள்
என்றும் சுன்னத் ஜமாத்தினரைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறுவதோடு அவர்களுக்காக பிரார்த்தித்திருப்பதோடு
ஸலாமும் சொல்கிறார். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கும் அவர்கள் போன்றவர்களுக்கும் என்றும்
கூறுகிறார்.
அஹ்லுபைத்தினரை குறைகண்டு இமாம்களான ராஸி, ஙஸ்ஸாலி, இப்னு ஸீனா போன்றவர்களை இந்தியர்கள் யூனானிகளின் குஞ்சுகள்
என்றும், யஹுதி நஸாராக்களை
விட வழிகேடானவர்கள் என்றும் கூறிய இப்னு தைமிய்யா எல்லை மிறியவர்கள் என்று அறிஞர்களால்
அடையாளம் காட்டப்பட்ட இக்கூட்டத்தினருடன் இவ்வாறு பேசுவதற்கான காரணம் தான் என்ன?
அவர்கள் யஸீத் இப்னு முஆவியாவை அளவுகடந்து நம்பி பின்பற்றியதே
அதற்கான கராணமாகும். யஸீதை கண்ணியப்படுத்துவது இப்னு தைமிய்யாவிடம் சுன்னத்ஜமாத்தினர்
என்பதற்கு அடையாளமாகும். கண்ணியப்படுத்துவது
அளவுகடந்துவிட்டாலும் சரியாகும். இவரே தான் அஹ்மத் இப்னு ஹன்பல் றஹ்மதுல்லாஹி
அலைஹி அவர்கள் யஸீதைப்பற்றி பின்வருமாரு கூறியதை அறிவித்திருக்கிறார்.
'அல்லஹு தஆலாவைக்கொண்டும்
மறுமையைக் கொண்டும் ஈமான் கொண்ட ஒருவர் யஸீதை நேசிப்பாரா?'
தொடரும்....
No comments:
Post a Comment