3. அஹ்லுபைத்தினர்களை
குறைசொல்வது
அஹ்லுபைத்தினர்களின் எதிராலிகளை பாதுகாக்க முற்பட்டது. அவர்களின்
அந்தஸ்த்துக்களை பொய்யாக்கியது மாத்திரமல்லாமல் அதையும் தாண்டி நாவினால் குறைசொல்லவும்
முற்பட்டார். இப்படியான ஒரு நிலை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தின்
பரம எதிரிகளான குரோதமும் வஞ்சகமும் நிறைந்த நவாஸிப் (நாஸிப்கள்) களிடமே தவிர இந்த உம்மத்தில் வேறுயாரிடமும்
காணப்படவில்லை.
இப்னு தைமிய்யா சொல்வதை கேளுங்கள்:
அஹ்லுபைத்தினர் இருப்பதால் எந்த ஒரு நலவும் உட்கிருபையும் ஏற்படவில்லை.
மின்ஹாஜுஸ்ஸூன்னா 2 : 84
ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கின்கிறார்கள்:
நான் உங்களிலே விட்டுச்செல்கிறேன் அதை பின்பற்றி நடந்தால் எனக்குப்பின்னால் வழிதவற
மாட்டீர்கள். அதுதான் அல்லாஹ்வின் வேதமும் எனது குடும்பமுமாகும். நாளை மறுமையில் ஹவ்லுல்
கவ்ஸரை வந்தடையும் வரை ஒன்றை ஒன்று பிரியாது
திர்மதி 3788, அஹ்மத் 3: 17 ஹாகிம் 3: 148
மற்றுமொரு ஹதீஸில்
நான் உங்களுக்கு மிகப்பெரிய இரு விடயங்களை விட்டுச்செல்கிறேன்.
முதலாவது அல்லாஹ்வின் வேதமாகும். அதிலே நேர்வழியும் பிரகாசமும் இருக்கின்கிறது....
மற்றது எனது குடும்பமாகும். எனது குடும்பத்தார் விடயத்தில் அல்லாஹு தஆலவை நினைவூட்டுகிறேன்
என்று மூன்று தடைவை கூறினார்கள். முஸ்லிம் 3408.
ஆனால் இப்னு தைமிய்யா இந்த ஹதீஸ்களைப்பற்றி சொல்லும் போது கைகொட்டி
சிறிக்கக்கூடிய அளவு சிறுபிள்ளைத் தனமாக விளக்கமளித்துள்ளார்.
ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெற்றிருக்கும் ஹதீஸ் நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இருக்குமானால் அதில் குர்ஆனை பின்பற்றும்படியே சொல்லப்பட்டுள்ளதே
தவிர அஹ்லுபைத்தினரை பின்பற்றும் படியாக அங்கே சொல்லப்படவில்லை, மாறாக அஹ்லுபைத்தினர் விடயத்தில் அல்லாஹ்வை நினைவுபடுத்துகிறேன் என்றே
கூறியுள்ளார்கள்.
மின்ஹாஜுஸ்ஸுன்னா
4 : 85
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகப்பெரிய இரண்டு விடயங்களை
விட்டுச்செல்கிறேன் என்று சொன்னது விளங்கவில்லையா?
அதில் முதலாவது அல்லாஹ்வின் வேதம் என்று கூறிவிட்டு தொடர்ந்து
அஹ்லுபைத்தினர் என்று கூறுகிறார்கள். குர்ஆனை மாத்திரம் பின்பற்றக் சொன்னால் அப்பொழுது
இரண்டாவது விடயம் எங்கே?
உண்மையிலே மனோ இச்சை அவரை செவிடாகவும் குருடாகவும் ஆக்கிவிட்டது.
அலி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் யுத்தம் செய்தது பற்றிக்கூறும் போது:
அலி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மக்களுடன் யுத்தம் செய்தது அவரை மக்கள்
வழிப்படுவதற்காகத்தான் (மக்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற
சுய நலத்துக்காகத்தான்) அல்லாஹ்வுக்கு வழிப்பட்டல்ல.
யாரவது முஆவியா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அரசுக்கெதிராக கிளர்ச்சிசெய்தவர் எனக் குறைசொன்னால் அலி அலைஹிஸ்ஸலாம்
அவர்களும் அரசுக்கெதிராக கிளர்ச்சிசெய்த அநியாயக்காரர் தான் என நவாஸிப்கள் சொல்வார்கள்.
அவருடைய ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளத்தான் யுத்தம் செய்து மக்கள் மீது அடர்ந்தேரினார்.
யாராவது தனது சுய நலத்துக்காக யுத்தம் செய்தால் அவர் உலகத்தில் குழப்பத்தை விளைவித்து
உயார்த்தியை விரும்பியவராகும். இது பிர்அவ்னுடைய செயலாகும். அல்லாஹு தஆலா கூறுகிறான்:
அந்த மறுமை வீட்டை யார் உலகத்தில் உயர்த்தியை நாடாமலும் குழப்பத்தை
விளைவிக்காமலும் இருந்தார்களோ அவர்களுக்கே நாம் ஆக்கிவைத்துள்ளேம். இறுதி நல்முடிவு
இறையச்சம் உள்ளவர்களுக்காகும்.
யாராவது உலகத்தில் உயர்த்தியை நாடி குழப்பத்தை விளைவித்தாரோ
அவர் மறுமையில் சிதேவிகள் கூட்டத்தில் சேரமாட்டார்.
மின்ஹாஜுஸ் ஸுன்னா
(2:202,205,232,244)
இதே கருத்தில் பல பக்கங்கனள அவருடைய மின்ஹாஜுஸ் ஸுன்னா என்ற
நூலில் எழுதுகிறார்.
மின்ஹாஜுஸ் ஸுன்னா என்ற நூல் ஆரம்பம் முதல் கடiசிவரை இது போன்ற நூதனமான
கருத்துக்களால் நிரம்பிக் காணப்;படுகிறது. அந்நூலிலிருந்து பெறப்பட்ட தகவல்களே அதற்கு சான்றாகும்.
ஆனால் அலி அலைஹிஸ்ஸலாம் யுத்தம் செய்தது மார்க்கத்துக்கு அமைவானதும்
அதற்கு ஒத்தாசையாக இருப்பது அவசியமான விடயமாகும் என்பதை பின்வரும் விடயங்கள் தெளிவுபடுத்துகின்றது.
குர்ஆன் இறங்கியதற்காக நான் யுத்தம் புரிந்தது போல் அதற்கு கருத்துக்கொடுக்கும்
விடயத்தில் யுத்தம் செய்பவர் உங்களிலே இருக்கின்றார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறியபோது அச்சபையில் அபூ பக்ர் றழியல்லாஹு அன்ஹு, உமர் றழியல்லாஹு அன்ஹு போன்றவர்களும் இருந்தார்கள். அப்பொழுது அபூ பக்ர்
றழியல்லாஹு அன்ஹு நானா என்று கேட்டபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இல்லை
என்று சொன்னார்கள். உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் நான்தானே எனக்கேட்ட போது இல்லை என்று சொல்லிவிட்டு செறுப்பு சரிசெய்யக்கூடியவர்
எனச்சொன்னார்கள், அலி அலைஹிஸ்ஸலாம்
அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் செறுப்பை சரிசெய்யக்கூடியவர்களாக இருத்தார்கள்.
அபூ ஸயீத் றழியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்: நாங்கள் அலி அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் போய்
இதை சுபச்செய்தி சொன்னபோது ஏற்கனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டவர்
போல் தலையை உயர்த்தாமல் இருந்தார்கள்.
இது ஸஹீஹான ஹதீஸாகும். அஹ்மத்(3 : 82),இப்னு ஹிப்பான் (6898), ஹாகிம் (3 :123)
இது ஸஹீஹான ஹதிஸ் என ஹாகிம் றஹ்மதுல்லாஹி அலைஹி கூறியதை தஹபி
றஹ்மதுல்லாஹி அலைஹி சரிகண்டுள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலைஹிஸ்ஸலாம், பாத்திமா அலைஹஸ்ஸலாம், ஹஸன் அலைஹிஸ்ஸலாம்
ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் ஆகிய நால்வரையும் பார்த்து நீங்கள் யுத்தம் செய்தவர்களுடன் நானும்
யுத்தம் செப்வேன, நீங்கள் சமாதானம் செய்தவர்களுடன் நானும் சமாதானம் செய்வேன் எனக் கூறினார்கள்.
திர்மிதி(3870), அஹ்மத் (2:442)
ஆனால் இப்னு தைமிய்யா இந்த ஹதீஸை பொய்யானது எனக்கூறுகிறார்.
ஆனால் அதற்கான எந்த காரணத்தையும் ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. மாறாக அல்லாஹ்வினதும்
ரஸுலினதும் பேச்சுக்களில் வீணான தர்க்கத்தையே முன்வைக்கிறார்.
அலி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அறிவைப்பற்றி இப்னு தைமிய்யா கூறும்போது
முதலாம் தரத்தில் படிக்கும் மாணவன் கூறுவதைப்போல் வாதத்;தை முன்வைக்கிறார்.
அதாவது
நான்கு மத்ஹபுகளின் இமாம்களோ ஏனயை மார்க்க சட்டவல்லுனர்களான
இமாம்களோ அலி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கருத்தை எடுக்கவில்லை, இமாம் மாலிக் அவர்கள்
மதீனாவாசிகளின் கருத்துக்களை எடுத்தார்கள். மதீனா வாசிகள் அலி அலைஹிஸ்ஸலாம் அவர்களின்
கருத்தை எடுக்கமாட்டர்கள்... இமாம் அபூஹனீபா, இமாம் ஷாபி, இமாம் அஹ்மத் ஆகியோர் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹமா அவர்களின்
வழியில் சென்றவர்களாகும். இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹமா சுயமான முஜ்தஹித் அறிவாராய்ச்சியாளராகும்.
அவர்கள் அலி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கருத்தை சொல்லமாட்டார்கள்.!!
மின்ஹாஜுஸ் ஸுன்னா
(4:142,143)
மனோ இச்சைப்படி செயல்படுபவர்கள் இவ்வாருதான். அவர்கள் ஒன்றுக்குப்
பின்னால் ஒன்றாகச்சொல்லி தர்க்கத்தில் மூழ்கிவிடுவார்கள். ஆனால் அவர்களுக்கே என்ன சொல்வதென்று
தெரியாமல் ஆகிவடும். இதனால் உலமாக்களுக்கும் அறிவைத் தேடுபவர்களுக்கும் பரிகாசம் செய்யும்
தளமாக மாறிவிடுகிறார்கள். குர்ஆனையும் ஹதீஸையும் விட இப்னு தைமிய்யாவை கண்மூடித்தனமாக
பின்பற்றுபவர்கள் விதிவிலக்காகும்.
இமாம் ஷாபி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் மதீனாவாசிகளின் அறிவு
அலி அலைஹிஸ்ஸலாம், இப்னு அப்பாஸ் றழியல்லாஹு
அன்ஹமா ஆகிய இருவர்களிலுமே தங்கியுள்ளது என தனிப்புத்தகத்தையே எழுதியுள்ளார்கள்.
அலி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னதாக ஒரு கருத்து உறுதியாக நம்பப்படுமானால்
வேறொரு கருத்தை நாம் தேடமாட்டோம் என இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹமா கூறியுள்ளார்கள்.
இதை இப்னு குதாமா 'முக்னி' யில் கூறியுள்ளர்கள்.
தபகாதுல் புகஹா (பக்:42)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரப்பிள்ளையான ஹுஸைன்
அலைஹிஸ்ஸலாம் அவர்களைப்பற்றிக் கூறும் போது:
இவர் கூறியிருக்கும் வார்த்தை போன்றதை யஸீதிடம் நெருக்கத்தை
பெற்றுக்கொள்வதற்காக அக்காலத்திலிருந்த பிரசங்கிகளும் பேசியிருக்கமாட்டார்கள்.
யஸீதுக்கு எதிராக ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் புறப்பட்டதைப்பற்றிக்
கூறும் போது:
இது தவரான முடிவாகும், இதில் ஏற்படும் நலவுகளைவிட தீமையே அதிகாமகும். ஆதிகாரம் மிக்க
அரசுகளுக்கெதிராக வெளிப்பட்ட அனைவரினதும் செயல்களினால் ஏறப்பட்ட நலவை விட தீமையே அதிகமாகும்.
மின்ஹாஜுஸ்ஸுன்னா (2:241)
அப்படியானால் சுதந்திரத்துக்காக
போராடுபவர்களே!, தனி நாட்டை விரும்புபவர்களே!
நீங்கள் அனைவரும் குழப்பம் விளைவிக்க கூடியவர்களாகும். அரசருக்கு கட்டுப்படுவதும் சாட்டைகளுக்கு
முதுகை நீட்டுவதும் வால்களுக்கு கழுதை;தை நீட்டுவதுமே உங்கள் மீதுள்ள கடைமயாகும். ஏனெனில் இப்னு தைமிய்யா
சுதந்திரத்துக்காக போராடுவது பிழையான செயல் என்றும் அதனால் ஏற்படும் நலவை விட தீமையயே
அதிகம் எனக் கூறியுள்ளார் அல்லவா!! மாலிக் இப்னு நபி என்ற பெரிய ஆய்வாளர் காலனியாதிக்கத்தின்
தன்மை என்ற நூலில் இதை கூறாமல் விட்டுவிட்டது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா !!!!
மீண்டும் இப்னு தைமிய்யா யஸீதை நியாயப்படுத்தி சொல்கிறார்.
யஸீத் பனு இஸ்ரவேலர்களை விட பாவம் செய்தவரல்ல. பனு இஸ்ரவேலர்கள்
நபிமார்களை கொல்பவர்களாக இருந்தார்கள். ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களை கொலை செய்தது நபிமார்களை
கொலைசெய்ததை விட பெரியகாரியமல்ல.
மின்ஹாஜுஸ்ஸுன்னா (2:247)
இதைவிட மேசமான ஒரு நியாயப்படுத்தலை காணமுடியுமா??
இப்புத்தகம் நீண்டுவிடும் என்பதை கருத்தில்கொண்டு இத்துடன் நிறைவு
செய்து ஏனயை விடயங்களைப் பார்ப்போம்
தொடரும்......
No comments:
Post a Comment