2. அஹ்லுபைத்துகளின்
அந்தஸ்த்துக்களை பொய்யாக்குவது
இப்னு தைமிய்யா அவரின் எல்லையற்ற பிடிவாதத்தை வெளிப்படுத்தகூடிய
பல கூற்றுக்களை கூறியுள்ளார். அதிலிருந்து சில விடயங்களை தருகிறோம்.
ரஸுல்மார்களின் குடும்பத்தினர் சம்பந்தமாகவும் எமது நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தினர் சம்பந்தமாகவும் கூறப்பட்டிருக்கும் அந்தஸ்த்துகளைப்
பார்ப்போம்.
இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் குடும்பத்தை பற்றி அல்லாஹு
தஆலா கூறும் போது :
அல்லாஹ்வுடைய அருளும், அவனுடைய பாக்கியங்களும் (இப்றாஹிமுடைய) இவ்வீட்டிலுள்ள உங்கள்
மீதுள்ளன. நிச்சயமாக அவன் மிக்க புகழுடையவனாகவும், மகிமை உடையவனாகவும் இருக்கிறான்.(ஹுத்: 73)
12 நபிமார்களின் பெயர்களை
கூறிவிட்டு 'இவர்கள் அனைவரையும்
உலகத்திலுள்ள அனைவரை விடவும் மேன்மையாக்கி வைத்தோம். இவர்களுடைய மூதாதைகளிலும் இவர்களுடைய
சந்ததிகளிலும் இவர்களுடைய சகோதரர்களிலும் (பலரை) மேன்மையாக்கி வைத்ததுடன் இவர்கள் அனைவரையும்
தேர்ந்தெடுத்து நேரான வழியிலும் செலுத்தினோம்'. (அன்ஆம்: 86,87)
நிச்சயாமாக அல்லாஹ், ஆதமையும், நூஹையும், இப்ராஹீமுடைய குடும்பத்தினரையும், இம்ரானுடைய குடும்பத்தினரையும்
அகிலத்தாரை விட மேலாகத் தேர்ந்தெடுத்தான்.
அவற்றில் சில, சிலரிலுள்ள சந்ததிதான், அல்லாஹ் (யாவற்றையும்)
செவியுறுகிறவன், நன்கறிகிறவன்.ஆல இம்ரான்
: (33.34)
மற்றுமொரு இடத்தில் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றி
அல்லாஹு தஆலா கூறும போது: இன்னும் அவர்களுடைய
சந்ததிகளுக்கே நபிப்பட்டத்தையும் வேதத்தையும் சொந்தமாக்கினோம் (அன்கபூத்:27) என கூறியுள்ளாள்.
அன்றியும், நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், கூடுதலாக யஃகூபையும் அன்பளிப்புச் செய்தோம், (இவர்களில்) ஒவ்வொருவரையும்
நல்லோர்களாகவும் நாம் ஆக்கினோம். இன்னும், நம்முடைய கட்டளையின்படி
நேர்வழி காட்டுகின்ற தலைவர்களாகவும் அவர்களை நாம் ஆக்கினோம், அன்றியும், நன்மையான காரியங்களைச்
செய்யுமாறும், தெழுகையை நிறைவேற்றுமாறும், ஜகாத்தைக் கொடுத்து
வருமாறும் இவர்களுக்கு (வஹீ மூலம்) நாம் அறிவித்தோம், இவர்கள் அனைவரும்
நம்மையேவணங்குபவர்களாக இருந்தார்கள். (அன்பியா: 72,73)
எங்களுடைய நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
குடும்பத்தாரைப்பற்றிக் கூறும்போது:
(நபியுடைய) வீட்டுடையார்களே!
உங்களை விட்டு எல்லா அசுத்தங்களையும் நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் விரும்புகிறான்.
(அஹ்ஸாப் :33)
(நபியே) நீங்கள் கூறுங்கள்:
இதற்காக நான் உறவினர்களை நேசிப்பதை தவிர யாதொரு கூலியும் கேட்கவில்லை. (சூரா:23 )
அலி அலைஹிஸ்ஸலாம் பாதிமா அலைஹஸ்ஸலாம், ஹஸன் அலைஹிஸ்ஸலாம், ஹூஸைன் அலைஹிஸ்ஸலாம்
ஆகிய நாள்வரையும் பார்த்து இறiவா இவர்கள் எனது குடும்பத்தினர்கள். அவர்களை விட்டும் அசுத்தத்தை
நீக்கி அவர்களை பரிசுத்தப்படுத்துவாயாக என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரார்த்தித்தார்கள்.
முஸ்லிம் 2424, திர்மிதி 3205, 3787,3871
அல்லாஹு தஆலாவும் மலக்குமார்களும் நபியின் மீது ஸலவாத் சொல்கிறார்கள்.
விசுவாசிகளே நீங்களும் அவர்கள் மீது ஸாலத்தும் ஸலாமும் சொல்வீர்களாக (அஹ்ஸாப்: 56) என்ற வசனம் இறங்கிய
போது ஸஹாபக்கள் அல்லாஹ்வின் துதரே உங்கள் மீது எப்படி ஸலவாத் சொல்வது எனக்கேட்ட போது
اللهم صل على محمد
وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما
باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
எனச்சொல்லும் படி கூறினார்கள்.
பொருள். இறiவா இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தார்
மீதும் ஸலவாத் சொன்னது போல் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும்
அவர்களுடைய குடும்பத்தார் மீதும் ஸலவாத் சொல்வாயாக. இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்
மீதும் அவர்கள் குடும்பத்தார் மீதும் பரக்கத் செய்ததுபோல் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தார் மீதும் பரக்கத் சொய்வாயாக, நீ மிகவும் புகழுக்குரியவனும்
கீர்த்தி உள்ளவனுமாகும்.
ஆதாரம் புகாரி, முஸ்லிம்.
நான் உங்களுக்கு மிகப்பெரிய இரண்டு விடயங்களை விட்டுச்செல்கிறேன்
அவை அல்லாஹு தஆலாவின் வேதமும் எனது குடும்பமுமாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் 2408, திர்மிதி 3788
குர்ஆனிலும் ஹதீஸிலும் இவ்வாறு கூறப்பட்டிருக்கும் இவ்விடயத்தில்
இப்னு தைமிய்யாவின் நிலைப்பாடு என்னவென்று பார்ப்போம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தினரை முற்படுத்த
வேண்டும் என்ற கருத்து ஜாஹிலிய்யா காலத்தில் தலைவர்களின் குடும்பத்தினரை முற்படுத்த
வேண்டும் என்றிருந்த நிலையின் வெளிப்பாடாகும் என ஒரே வர்த்தையில் கூறியிருக்கிறார்.
மின்ஹாஜுஸ் ஸுன்னா
(3:269)
அப்படியானால் அல்லாஹு
தஆலா நபிமார்கள் ரஸுல்மார்கள் அவர்களுடைய குடும்பத்தினர்களை தெரிவுசெய்து அவர்களை இமாம்களாகவும்
தளபதிகளாகவும் ஆக்கி அவர்களை உயர்ந்த அந்தஸ்த்துக்களில் வைத்திருப்பது, அவர்களுக்கு செய்யப்பட
வேண்டிய கடமைகள் பற்றி சுன்னாவில் எடுத்துக்சொல்லப்பட்டதெல்லாம் ஜாஹிலிய்யா காலத்தின்
வெளிப்பாடு என்றே சொல்ல நேரிடும்!!
இது அல்லாஹு தஆலாவுடைய குர்ஆனையும் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாவையும் பொய்ப்பிக்கும் பரிகாசம்
செய்யும் வார்த்தைகள் என்று இதற்கு சொல்லாவிட்டால் வேறெதற்குச் சொல்வது?
அஹ்லுபைத்தினரே உங்களை விட்டும் அல்லாஹுதஆலா அசுத்தத்தை நீக்கி
உங்களை பரிசுத்தப்படுத்த விரும்புகறான் என்ற திருவசனம் இரங்கிய போது நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் அலிஅலைஹிஸ்ஸலாம் பாதிமா அலைஹஸ்ஸலாம் ஹஸன் அலைஹிஸ்ஸலாம் ஹுஸைன்
அலைஹிஸ்ஸலாம் ஆகிய நால்வரையும் அழைத்து போர்வையினால் அவர்களை போர்த்தி மேற்சொன்ன வசனத்தின்
கருத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதாவது இறiவா இவர்கள் தான் எனது
குடும்பத்தினர்கள் இவர்களை விட்டும் அசுத்தத்தை நீக்கி பரிசுத்தப்படுத்துவாயாக எனப்பிரார்த்தித்தார்கள்.
இச்சம்பவத்தை இப்னு தைமிய்யா ஏற்றுக் கொண்டாலும் அவர் சொல்லியிருப்பதை
கவனியுங்கள்
அல்லாஹு தஆலா அவர்களை பரிசுத்தப்படுத்தவதாக வெறுமனே நாடியது
மாத்திரமாகும், அவ்வாறே நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களும் அதைக்கொண்டு துஆகேட்டது மாத்திரமாகும். ஆனால் இதனால் அல்லாஹுதஆலா
அவர்களை உண்மையாகவே பரிசுத்தப்படுத்தினான் என்பது அர்த்தமல்ல.
மின்ஹாஜுஸ்ஸுன்னா 2: 117
அல்லாஹு தஆலாவும் அவனது ரஸுலும் எதை நாடினார்களோ அதை இப்னுதைமிய்யா
நாடவில்லை. அதனால் தான் அதை அவர் நம்பவில்லை போலும்.
அல்குர்ஆனில் அவர்களைப்பற்றி என்னென்ன திருவசனங்கள் இடம்பெற்றிருக்கின்றனவோ
அதை பொய் எனக்கூறுகிறார்.
அவர்கள் நேசத்துடன் ஏழைக்கும், அனாதைக்கும், சிறைக்கைதிக்கும்
உணவளிப்பார்கள் என்ற ஸுரத்துத்; தஹ்ரில் இடம்பெற்றிருக்கும் வசனம் அஹ்லுபைத்தினர் சம்பந்தமாகவே
இரங்கியது என அனைத்து திருக்குர்ஆன் விரிவுரையாளர்களும் கூறியிருக்கும் போது அவ்வசனம்
அவர்கள் விடயத்தில் இரங்கவில்லை எனக்கூறுகிறார்.
உங்களுடைய பொறுப்பாளர் அல்லாஹ்வும் அவனது ரஸுலும் தொமுகையை நிலைநாட்டுபவர்களும்
ருகூவுடைய நிலையில் இருந்துகொண்டும் ஸகாத்கொடுக்கக் கூடியவர்களான விசுவாசங் கொண்டவர்களுமாகும்
என்ற வசனம் அலி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ருகூவில் இருக்கும் போது அவர்களுடைய மோதிரத்தை
ஸதகாவாக கொடுத்தர்கள் என்ற காரணத்துக்காகவே இவ்வசமை; அருளப்பட்டது என அனைத்து திருக்குர்ஆன் விரிவுரையாளர்களும்
ஏகோபித்து கூறியிருக்கும் போது அது பொய்யென மறுக்கிறார்.
அதிலும் குறிப்பாக அலி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சம்பந்தமாக ஸஹீஹான
அறிவிப்புத்தொடர்கள் மூலம் கூறப்பட்ட ஹதீஸ்களை பொய்யானவை எனக் கூறுகிறார்.
உதாரணமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலி அலைஹிஸ்ஸலாம்
அவர்களை சகோதரராக இணைத்துக் கொண்டார்கள் என்ற ஹதீஸை பொய்யெனக் கூறுகிறார். ஆனால் இது
'முதவாதிர்' என்ற பலாராலும் அறிவிக்கபட்ட
நம்பகரமான செய்தியாகும். அனைத்து வரலாற்றாசிரியர்களும் இதை கூறியுள்ளர்கள்
தபகாத் இப்னு ஸஃத் (3: 22), ஸீரத்து இப்னிஹிஷாம் (2: 109), அஸ்ஸீறதுன்னபவிய்யா (பக் :149), அல்இஸ்தீஆப் (3: 35), உஸ்துல்காபா (2 : 221), உயூனுல்அஸர் (6 :167), பிதாயா வந்நிஹாயா (7 :348), திர்மிதி(372), ஹாகிம்
(3 :14).
ஆனால் இப்னு தைமிய்யா சகோதரனாக இணைத்துக்கொண்ட ஹதீஸ் பாதிலானது
பிழையானது எனக் கூறுகிறார்.
மின்ஹாஜுஸ்ஸுன்னா
4:75
இவ்வாறுதான் ஏனயை அஹ்லுபைத்தினர்
விடயத்திலும் எந்த ஒரு ஆதாரமுமில்லாமலும் இமாம்களுடைய சன்றுகள் இல்லாமலும் பிடிவாதத்தையும்
மனோ இச்சையையும் அடிப்படையாக வைத்து எழுதுகிறார்.
தொடரும்...