Monday, November 20, 2017

மவ்லித் ஓதுவதின் பலன்கள் - மொளலவி அஸ்மிகான் முஅய்யிதி




1- நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாவை பின்பற்றல்

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஸஹாபாத் தோழர்களும் ஒன்றுகூடி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தின நிகழ்வுகளை ஞாபகமூட்டக்கூடியவர்களாக இருந்தார்கள்.
                                                      ஆதாரம் ஹாகிம், பைழுல் கதீர் (3:573)


2- நபிமார்களை நினைவுகூர்வது வணக்கமாகும்

நபிமார்களை நினைவுகூர்வது வணக்கமாகும் ஸாலிஹீன்களை நினைவுகூர்வது தென்றகுற்றப்பரிகாரமாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக முஆத் இப்னு ஜபல் றழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.
                                                                                                 ஆதாரம் தைலமி


3- நற்கூலி கிடைக்கிறது
4- நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சந்தோசப்படுகிறார்கள்

 ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களின் செருப்பை சரிசெய்துகொண்டிருக்கும் போது நான் நூல் திரித்துக்கொண்டிருந்தேன். அவர்களுடைய நெற்றி வியர்த்து வியர்வை ஒளியாக பிரகாசிக்கக்கண்டதும் நான் வாயடைத்துப் போய்விட்டேன். என்னை பார்த்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷாவே ஏன் வாயடைத்துப்போயிருக்கிறீர் எனக்கேட்டதும் உங்களுடைய நெற்றி வியர்த்து வியர்வை ஒளியாக பிரகாசிக்கக்கண்டேன் எனக்கூறிவிட்டு அபூ கபீர் அல் ஹுதலி என்ற புலவர் உங்களைக்கண்டால் அவர் பாடிய கவிதைக்கு நீங்கள் தான் பொருத்தமானவர் என அறிந்துகொள்வார் எனக்கூறினேன். அபூ கபீர் என்ன சொல்கிறார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டதும்



 எஞ்சிய மாதவிடாய்  உள்ள பெண்ணை விட்டும் செவிலித்தாயின் கெடுதியை விட்டும் பெரிய நோயை விட்டும் தூய்மையாக்கப்பட்டவர்கள்

அவர்களின் முகத்தின் வடிவைப்பார்த்தால் அது மின்னல் வெட்டுவது போல் பிரகாசித்துக் கொண்டிருக்கும் 

என்ற கவிதையை பாடினேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து வந்து எனது கண்களுக்கிடையில் முத்தமிட்டு ஆயிஷாவே நல்ல கூலியை அல்லாஹுத்தஆலா தருவானாக , நீங்கள் என்னைப்பார்த்து சந்தோசமடைந்ததை வி;ட நான் நிங்கள் சொல்வதை கேட்டு சந்தோசமடைந்தேன் எனக்கூறினார்கள்.

ஆதாரம் பைஹகி (4:422) இப்னு அஸாகிர் (1:265) இது 'ஹஸனுன் லிகைரிஹி' தரத்தைச்சேர்ந்த ஆதாரபூர்வமான ஹதீஸாகும்.

  தொழுகை, நோன்பு, தர்மம், குர்ஆன் ஓதுதல் மற்றும் பிறருக்கு ஓதுதல் போன்ற நற் செயல்கள் புரிந்தால் எவ்வாறு இறைவனிடம் இருந்து நன்மை கிடைக்குமோ அது போன்று மவ்லித் ஓதுகின்ற போது நன்மைகள இறைவன் நமக்கு அள்ளித்தருகிறான்.

5- அல்லாஹு  தஆலா றஹ்மத் செய்கிறான்
6- சுவர்க்கம் கிடைக்கிறது

 ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (றழி) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்ந்து (அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் கவிதை போன்ற கவிதையை) பாடிய போது ஹஸ்ஸானுக்கு அல்லாஹுத்தஆலா றஹ்மத் செய்யட்டும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். கஃபாவின் நாயன் மீது சத்தியமாக ஹஸ்ஸானுக்கு சுவர்க்கம் கட்டாயமாகிவிட்டது என அலி றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். இப்னு அஸாகிர் (ஸீறா பகுதி- 207)

7- நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்து கிடைக்கிறது

இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறக்கும் போது நடந்த நிகழ்வுகளை அவர்களுடைய கூட்டத்தாருக்கு சொல்லி;க் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களும் சுபசோபனம் பெற்றவர்களாக அல்லாஹுத் தஆலாவை புகழ்ந்துகொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்து சொல்லிக்கொண்டிருந்தார்கள். அங்கே வந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்கள் மீது எனது ஷபாஅத்து கட்டாயமாகிவிட்டது எனக்கூறினார்கள். (அத்தன்வீர் பீ மவ்லிதில் பஷீரின்னதீர்)

8- றஹ்மத்துடைய வாயல்கள் திறக்கப்படுகின்றன
9- மலக்குமார்கள் பாவமன்னிப்புத் தேடுகிறார்கள்

அபூ தர்தா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஆமிர் அல்; அன்ஸாரி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டுக்குச் சென்ற போது அவர்கள் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் குடும்பத்தினருக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறக்கும் போது நடந்த நிகழ்வுகளை சொல்லிக்கொண்டிருந்தார்கள். இதை கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹுத்தஆலா உங்களுக்கு றஹ்மத்துடைய வாசல்களை திறந்துவிட்டான். மலக்குமார்கள் உங்களுக்கு பாவமன்னிப்புத் தேடுகிறார்கள் எனக்கூறிவிட்டு நீங்கள் செய்வது போல் யார் செய்கிறார்களோ நீர் வெற்றிபெற்றது போல் அவரும் வெற்றிபெறுவார்எனக் கூறினார்கள். (அத்தன்வீர் பீ மவ்லிதில் பஷீரின்னதீர்)


10- மவ்லித் ஓதக்கூடியவர்களுக்கு மலக்குமார்களைக் கொண்டு பாதுகாப்பு அரணை இறைவன் ஏற்படுத்திக் கொடுக்கிறான்.

இறைத்தூதர் ஸல்லல்லாhஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஸ்ஸான் றழியல்லாஹூ அன்ஹூ அவர்களுக்கு கூறினார்கள் (ஹஸ்ஸானே) நீங்கள் இறைவனுக்காகவும், இறைத்தூதர் ஸல்லல்லாhஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்காகவும் கவி பாடும்காலமெல்லாம் பரிசுத்த ஆண்மாவான ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் உங்களை பலப்படுத்திக்கெண்டே இருப்பார்கள்.
அறிவிப்பாளர்: ஆயிஷா  றழியல்லாஹூ அன்ஹா நூல்: முஸ்லிம்.

11- இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் நேசத்தை பெற்றுத்தரும்

 இறைத்தூதர் ஸல்லல்லாhஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் ஒரு பகுதிக்கு சென்றார்கள். அங்கே சில சிறுமிகள் 'தப்' (றப்பான்) அடித்து பாட்டுப்பாடிக் கொண்டிருந்தார்கள்.
 (அவற்றில் ஒன்று:)

  நாங்கள் பனூ நஜ்ஜார் குடும்பத்தை சார்ந்த சிறுமிகள்
முஹம்மத் ஸல்லல்லாhஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சிறந்த அண்டை வீட்டுக்காரர் ஆவார்கள்.

(இதைக்கேட்ட) நபி  ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் திண்ணமாக நான் உங்களை நேசிக்கிறேன். (இதை அல்லாஹ் அறிகிறான்.
அறிவிப்பாளர்: அனஸ் றழியல்லாஹூ அன்ஹூ நூல்: இப்னு மாஜா.

இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நேசத்தை பெற்றுத்தரும் என்று கருத்தை மேற்கண்ட ஹதீஸ் அறிவிக்கிறது. இந்த ஆதாரத்தின் அடிப்படையில் இறைநேசர்களைப் புகழ்ந்தால் அவர்களின் அன்பும் நேசமும் நிச்சயமாக கிட்டுமென்று நம்மால் அறிந்துகொள்ளமுடியும்.

12- ஸலவாத்தும் ஸலாமும் கூறி இறைவனது கட்டளையை நிறைவேற்றுகின்ற நல்வாய்ப்பு கிடைக்கிறது.

இறைவன் கூறினான்:
    திண்ணமாக இறைவனும் அவனுடைய  மலக்குகளும் நபி மீது ஸலவவாத் சொல்கிறார்கள். முஃமின்களே நீங்களும் அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் கூறுங்கள்.                     (அல் குர்ஆன்)

நம் உயிரிலும் மேலான கண்மணி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின்  மீது ஸலவாக்தும் ஸலாமும் கூறி இறைவனது கட்டளையை நிறைவேற்றுகின்ற நல் வாய்ப்பு மவ்லித் ஓதுவதன் மூலம் கிட்டுகிறது.

13- மவ்லித் ஓதப்படும் இடத்திற்கு மலக்குகளின் வருகையும் ஓதுவோரின் பெயர்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்தில் தெரிவிக்கப்படும் நற்பேறும் கிடைக்கிறது.

 இறைத்தூதர் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வுக்கு மண்ணுலகில் சுற்றி வரும் மலக்குகள் இருக்கின்றார்கள். என் உம்மத்தினர் கூறும் ஸலாமை அவர்கள் என்னிடம் தெரிவிக்கிறார்கள். அறிவிப்பாளர்: இப்னு மஸ்வூத் றழியல்லாஹூ அன்ஹூ நூல் : நஸாஈ

14- அனைத்து நலவுகளும் கிடைக்கும்

 மவ்லித் ஓதுவதின் பறக்கத்தினால் அனைத்து நலவுகளும் கிடைக்கும் என இமாம் ஸகாவி றஹ்மதுல்லாஹி அலைஹி கூறியுள்ளார்கள்.

15- அந்த வருடம் முழுவதும் பாதுகாப்பு கிடைக்கும்

 மவ்லித் ஓதவதினால் அந்த வருடம் முழுவதும் பாதுகாப்பு கிடைப்பதோடு மிக விரைவாக தேவைகள் அனைத்தும் நிறைவேறும் இமாம் இப்னுல் ஜவ்ஸி றஹ்மதுல்லாஹி அலைஹி கூறியுள்ளார்கள்.

16- எந்த வீட்டிலாவது, இடத்திலாவது, பள்ளியிலாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பேரில் மவ்லித் ஓதப்பட்டால் அந்த இடத்தை மலக்குமார்கள் சூழ்ந்துகொள்கிறார்கள். அல்லாஹு தஆலா அவர்களுக்கு அருளையும் திருப்பொருத்தத்தையும் வழங்குகிறான் என இமாம் ஸுயூதி றஹ்மதுல்லாஹி அலைஹி கூறியுள்ளார்கள். 

No comments:

Post a Comment