Friday, November 24, 2017

இப்னு தைமிய்யாவின் உண்மை முகம் - 06

3-        இப்னு தைமிய்யாவும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தினரும்

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய அந்தஸ்தை அல்குர்ஆனும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அனைத்து முஸ்லிம்களும் வழங்கியுள்ளார்கள். யாருடைய உள்ளத்தில் நோய் இருக்கின்றதோ அவர்களைத் தவிர வேறு எவறும் கருத்துவேற்றுமை கொண்டதில்லை.

அஹ்லு பைத்தினருக்கு உயர்ந்த அந்தஸ்து இருப்பதாகவும் அனைத்து இமாம்களை விடவும் அவர்களை முற்படுத்த வேண்டும் என்றும் இப்னு தைமிய்யா சில இடங்களில் எழுதியுள்ளார். அவைகள் வருமாறு: 

பனூ ஹாஷிம்கள் குறைஷிகளில் மிகவும் சிறந்தவர்களாகும். குறைஷிகள் அறபிகளில் மிகவும் சிறந்தவர்களாகும். அறபுகள் அனைத்து ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிள்ளைகளில் சிறந்தவர்களாகும்.

இவ்விடயம் ஸஹீஹான ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பள்ளைகளை அல்லாஹு தஆலா தெரிவுசெய்தான். இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிள்ளைகளிலிருந்து கினானா கோத்திரத்தை தெரிவுசெய்தான். கினானா கோத்திரத்தலிருந்து குறைஷிகளை தெரிவுசெய்தான். குறைஷிகளிலிருந்து பனூ ஹாஷிம்களை தெரிவுசெய்தான்.

 எனது குடும்பத்தாருடைய விடயத்தில் அல்லாஹு தஆலவை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன் என மூன்று தடவை கதீர் கும்முடைய நாளில்  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஸஹீஹ் முஸ்லிமில் கூறப்பட்டுள்ளது. 

குறைஷிகளில் சிலர் தரக்குறைவாக பேசுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களிடம் அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் முறையிட்ட போது எனது உயிர் எவன் வசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக அல்லாஹ்வுக்காக என்னையும் எனது குடும்பத்தாரையும் நேசிக்காதவரை அவர்கள் சுவர்க்கத்தில் நுழையமாட்டார்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய செய்தி 'ஸுனன்' களிலே பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அவர்கள் படைப்புக்களில் மிகவும் சிறந்தவர்களாக இருந்தால் அவர்களின் அமல்களும் மிகச்சிறப்பானதாகும் என்பதில் சந்தேகம் கிடையாது என இப்னு தைமிய்யா தொடர்ந்து கூறியுள்ளார்.
ரஃஸுல் ஹுஸைன் பக்: 200,201

அஹ்லுபைத்துகள் பற்றிய இப்னு தைமிய்யாவின் நிலைப்பாடு எவ்வாறு இருந்தது என்பதே தற்போதுள்ள கேள்வியாகும். அவரின் நிலைப்பாட்டை ஒளிவு மறைவின்றி தெளிவாகவே கூறியுள்ளார். அதை பின்வரும் விடயங்களில் விளங்கிக்கொள்ளலாம்.

1.        தொடர்ச்சியாக அஹ்லுபைத்துகளின் எதிரிகளுக்கு சார்பாக நடந்துகொண்டது

அஹ்லுபைத்தினரின் எதிரிகளுக்கு சார்பாக இருப்பதில் தெளிவாக இருந்தார். அவர்களுக்காக முடியுமான அளவு தர்க்கரீதியாக குரல் கொடுப்பவராக இருந்தார். அவர்களுக்காக நியாயத்தை தேடுபவராகவும் அஹ்லுபைத்தினரை பகைத்திருப்பது சரியென்று நிறுவுபவராக இருந்தார். இதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்களையும் ஸஹாபாக்கள் தாபியீன்களான ஸலபுகளின் கருத்துக்களையும் பொய்யாக சொல்பவராக இருந்தார். அவர்களுக்காக காலாகாலம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்று உண்மைகளை பொய்யாக்குபவராகவும் அவர்களுக்காக உலமாக்காளோ பொதுமக்களோ கையாளாத முறைகளைக்கொண்டு சில விடயங்களை உண்மையானது எனக்காட்டினார். அவர் இதைப்பற்றி நிறைய எழுதியிருக்கிறார். ஆனால் இச்சிறு நூலில் அவை அனைத்தையும் கூறிவிட முடியாது ஆதாரத்துகாக சில விடயங்களை மாத்திரம் கூறுகிறோம்.
 இப்னுதைமிய்யா 'முஆவியா றழியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்புக்களும் யஸீதை ஏசக்கூடாது என்பதும்' என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதியுள்ளார்.

ஆனால் ஸலபுகள் முஆவிய றழியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்புக்களை பற்றி (ஏகோபித்து கூறப்பட்ட) எந்த ஒரு ஸஹீஹான ஹதீஸும் கிடையாது எனக்கூறியுள்ளார்கள்.
இத்தகவலை இமாம் தஹபி அவர்கள் அஹ்மத் இமாமின் தரத்தைச்சார்ந்தவர் எனக் கூறப்படும் இஸ்மாயீல் இப்னு றாஹவைகி அவர்களைத்தொட்டும் கூறியுள்ளார்கள்.
            ஸியறு அஃலாமின்னுபலா  3: 132

ஸுனனுன் நஸாயியை எமுதிய இமாம் நஸாயி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் டமஷ்கஸ் வாசிகள் முஆவியா றழியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்புக்களை பற்றி ஒரு நூலை எமுதுங்கள் எனக்கேட்டபோது அவர்களுக்கு எந்தச்சிறப்பும் கூறப்பட்டதாக நான் அறியவில்லை. 'அல்லாஹு தஆலா அவர்களின் வயிற்றை நிரப்பாமல் இருப்பானாக' என்று கூறியதை தவிர எனக் கூறினார்கள்.    

ஸியறு அஃலாமின் னுபலா 14:125, வபிய்யாதுல் அஃயான் 1: 77

இமாம் ஹஸன் அல்பஸறி றஹ்மதுல்லாஹி அலைஹி இதைவிட அதிகமாக கூறியுள்ளார்கள்: நான்கு விடயங்கள் முஆவியா றழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் காணப்பட்டன. அதில் ஒன்றிருந்தாலும் அவர் பெரும் பாவம் செய்தவராகும். ஸஹாபாக்களும் சிறப்புள்ளவர்களும் இருந்தபோது எந்தவித ஆலோசனையும் இல்லாமல் தலைவர் பதவியை வாலை உறுவிபெற்றுக்கொண்டது. மதுபோதையில் மூழ்கிக்கிடந்த பட்டாடைகளை அணிந்த மேளம் அடித்து பாட்டுப் பாடிய அவர்களது மகன் யஸீதை கலீபாவாக நியமித்தது.  ஸியாதை மகன் என்று கூறியது.
'(தாய்) யாருடைய ஆதிக்கத்தில் இருக்கும்போது குழந்தை பிறக்கிறதோ அவருக்கே அக்குழந்தை உரியது! விபச்சாரம் செய்தவருக்கு இழப்புதான் உரியது! என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியிருக்கிறார்கள். ஹுஜ்ர் றழியல்லாஹு அன்ஹு அவர்களையும் அவர்களது தோழர்களையும் கொலைசெய்தது. ஹுஜ்ரின் மூலமாக ஏற்பட்ட கைசேதமே!

 ஹுஜ்ர் றழியல்லாஹு அன்ஹு அவர்களுக்காக ஹின்து பின்து ஸைத் அல்அன்ஸாரிய்யா என்ற பெண்மணி பின்வருமாறு இரங்கலுரை பாடினாள்: பிரகாசமளிக்கும் சந்திரனே நீ உயர்ந்து செல் ஹுஜ்ர் போவதை நீ பார்
அல்காமிலு பித்தாரீக் 3: 487 (51 வருடம் நிகழ்ந்த சம்பவம்) 

ஹுஜ்ர் இப்னு அதி றழியல்லாஹு அன்ஹு கொள்ளப்பட்ட சம்பவம் தஹ்தீபு தாரீக் அத்திமஷ்க்  2: 384 கூறப்பட்டுள்ளது.
முஆவியா றழியல்லாஹு அன்ஹு அவர்களின் நண்பரான அம்ர் இப்னுல் ஆஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர் பெரும் பாவங்கள் செய்யக்கூடியவர், மர்க்கத்தையும், மார்க்க விடையங்ககளை விட்டும் தூரமானவர் என்று கூறியிருப்பதே தகுந்த சான்றாகும்.


குறிப்பு. ஸஹாபாக்கள் அனைவரும் நீதமானவர்களும் முஜ்தஹித்களுமாகும். அவர்களுக்கு மத்தியில் நடைபெற்றதாக கூறப்படும் சண்டை சச்சரவுகள் பற்றி நாம் எதுவும் பேசக்கூடாது என்பதே அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாத்தினரது நிலைப்பாடாகும். அவர்கள் முஜ்தஹித்களாக இருப்பதால் சரியாக செய்ததற்கு இரு நன்மைகளும் தவறுக்கு ஒரு நன்மையும் வழங்கப்படுகிறது. மொழிபெயர்ப்பின் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளுக்கு அமைய இங்கே கூறப்பட்து என்பதை கருத்தில் கொள்ளவும்.  

தொடரும்....

No comments:

Post a Comment