Monday, November 20, 2017

இப்னு தைமிய்யாவின் உண்மை முகம் - 04

2-      இப்னு தைமிய்யாவும் அல்லாஹு தஆலாவின் பண்புகளும்

 பண்புகள் சம்பந்தமாக வந்திருக்கக்கூடிய அனைத்து ஆயத்துக்களும், ஹதீஸ்களும் வெளிப்படையான எப்பொருளை தெளிவுபடுத்துமோ அதையே கருத்தில் கொள்ளவேண்டும் வேறு உபபொருட்கள் மூலம் வழிந்துரை செய்யக்கூடாது. 

அல்லாஹு தஆலா ஒரு திசையிலே இருக்கிறான் அதுதான் எமக்கு மேலால் வானத்திலே அர்ஷ் (சிம்மாசனம்) மீது அமர்ந்திருப்பதாகவும் அதில் நான்கு விரல்கள் அளவு இடமே மீதமிருப்பதாகவும், அல்லாஹு தஆலா அடிவானத்துக்கு இறங்கிவிட்டு பின்னர் திரும்புவதாகவும், அவனுக்கு கண்கள், கைகள், கால்கள் போன்ற உறுப்புக்கள் இருப்பதாகவும் கூறுவதோடு ஆனால் அவைகள் மனிதனுடையவோ ஏனைய மிருகங்களுடையவோ உறுப்புக்களுக்கு ஒப்பானவையல்ல என்றும் கூறுகிறார்.

அல்ஹமவிய்யதுல் குப்ரா பக்:15, அத்தப்ஸீருல் கபீர் பக்:2:249,250, மின்ஹாஜுஸ் ஸுன்னா பக்:250,260,261.

யார் இவைகளுக்கு உபபொருள்களை கொடுக்கிறார்களோ அவர்கள் அல்லாஹு தஆலாவை உண்மையாக அளவிடவும் இல்லை உண்மையான முறையில் அறியவும் இல்லை.
                                                          அத்தப்ஸீருல் கபீர் பக் :1:270 

இதற்கு அவர் முன்வைக்கும் ஆதாரம் ஸஹாபாக்களும் தாபியீன்களும் இந்த கொள்கையிலே இருந்தார்கள் என நினைத்தாகும்.

ஸஹாபாக்களின் கூற்றுக்களையும் அவர்கள் அறிவித்த ஹதீஸ்களையும் தப்ஸீர் நூற்களில் படித்துள்ளேன். அல்லாஹ்வின்  நாட்டப்படி சிறிய, பெரிய அனைத்து புத்தகங்களையும் படித்துள்ளேன், நூற்றுக்கும் மேட்பட்ட தப்ஸீர்களையும் படித்துள்ளேன். இதுவரையில் எந்த ஒரு ஸஹாபியோ பண்புகளுடைய ஆயத்துக்களுக்கு ஹதீஸ்களுக்கு அறிந்துவைத்திருக்கும் பொருளுக்கு, கருத்துக்கு மாற்றமாக உபபொருள் கொடுத்தாக நான் காணவில்லை.
                                                                   தப்ஸீர் சூரத்துன்னூர் பக் :178

இப்னு தைமிய்யாவை கண்மூடித்தனமாக பின்பற்றுபவர்கள், மோகம் கொண்டவர்கள் பண்புகள் சம்பந்தமான ஆயத்துக்களுக்கு ஸஹாபாக்கள் என்ன விளக்கம் கொடுத்துள்ளார்கள் என்பதை ஒரு தப்ஸீரைக்கூடப் பார்க்காமல் அதற்காக கஷ்டப்படாமல் இப்னு தைமிய்யாவின் கருத்தில் லயித்துப் போயுள்ளார்கள். இப்னு தைமிய்யாவால் புகழப்பட்ட ஒரு தப்ஸீரையாவது பார்க்காமளிருக்கிறார்கள். இத்தப்ஸீர்கள் ஸஹாபாக்கள், தாப்யீன்கள் 'ஸிபாத்' பண்புகளுடைய ஆயத்துக்களுக்கு நேரடிப் பொருள் கொடுக்காமல் உபபொருள்களைதத்தான் கொடுத்தார்கள் எனும் தகவல்களால் நிரம்பிக் காணப்படுகிறது. இவை அனைத்தும் இறைவனுக்கு  உருவம் கற்பிக்கும் இப்னு தைமிய்யாவின் நிலைப்பாட்டுக்கு மாற்றமானதாகும்.

உதாரணத்துக்காக ஆயத்துல் குர்ஷியின் தப்ஸீரை பார்க்கும் போது குர்ஸி என்பது அல்லாஹ்வின் அறிவாகும் என இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதை இமாம் தபறி றஹ்மதுல்லாஹி அலைஹி கூறியுள்ளார்கள். இதற்காக அறபிகளின் பேச்சை ஆதாரமாக கூறியுள்ளார்கள். இக்கருத்தை இமாம் பகவி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும், இப்னு அதிய்யா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களைத் தொட்டும் ஷவ்கானி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும், இமாம் குர்துபி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் கூறியுள்ளார்கள்.

இதே போன்று முகம் என்று கூறப்பட்ட ஆயத்துக்களின் விளக்கத்தை பார்க்கும் போது எந்த தப்ஸீரிலும் இப்னு தைமிய்யாவின் கொள்கையை குறிக்கும் எந்த ஒரு வார்த்தையும் கூறப்பட வில்லை. மாறாக ஸலபுகளைத் தொட்டும் கூறப்பட்ட அனைத்தும் அவரின் கருத்துக்கு மாற்றமாகவே காணப்படுகிறது.

'அவனின் முகத்தை தவிர அனைத்து வஸ்துக்களும் அழிந்துபோகக்கூடியது' (சூரா கஸஸ்) என்ற வசனத்தில் முகத்தை தவிர என்பதற்கு அல்லாஹ்வைத் தவிர என அனைத்து திருக்குர்ஆன் விரிவுரையாளர்களும் கூறியுள்ளார்கள்.

இவ்வாரே 'மகத்துவமும் கண்ணியமுமிக்க உமது நாயனின் முகம் மாத்திரமே தரிபடும'; (அர்ரஹ்மான்: 27) என்ற வசனத்திலும் கூறியுள்ளார்கள்.

நீங்கள் அல்லாஹ்வின் முகத்தை நாடியே தவிர செலவளிக்க மாட்டீர்கள் (பகரா :272)

அவர்களடைய நாயனின் முகத்தை நாடியவர்களாக பொறுமையாக இருந்த சிலர்கள் (அர்ரஃது :22)

அல்லாஹ்வின் முகத்தை நாடியவர்களுக்கு அது மிகவும் சிறந்ததாகும் (அர்ரூம் :39) 

அல்லாஹ்வின் முகத்தை நாடி கொடுத்த ஸகாத்தாகிறது (அர்ரூம் :39)

அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம் (தஹ்ர் :9)

மிக உயர்த்தியான அல்லாஹ்வின் முகத்தை நாடியே தவிர (அல்லைல் :20)

போன்ற அனைத்து வசனங்களிலும் முகம் என்பதை நற்கூலி என்றே அனவைரும் விளக்கம் கூறியுள்ளார்கள்.

எந்த ஒரு அறிஞரும் இப்னு தைமிய்யா கூறுவது போல் வெளிப்பொருளைத்தான் கருத்தில் கொள்ள வேண்டும் என ஒரு வார்த்தையாவது கூறவில்லை. வெளிப்பொருள் என்பது இங்கே எமது உறுப்புக்களில் ஒன்றான முகத்தை குறிப்பதாகும்.

'நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கு அல்லாஹ்வின் முகம் இருக்கிறது' என்ற வசனத்துக்கு ஸலபுகள் உபபொருள் கொடுத்ததை இப்னு தைமிய்யா ஏற்றுக் கொள்கிறார். அதாவது இவ்வசனத்துக்கு எங்கு திரும்பினாலும் அல்லாஹ்வை முன்னோக்க முடியும் என உபபொருள் கொடுத்துள்ளார். ஆனால் இப்னு தைமிய்யா இது ஸிபாத் சம்பந்தப்பட்ட ஆயத்தல்ல எனக்கூறியுள்ளார்.

                                           அல்உகூதுத் துர்ரிய்யா பக் (248)


கண்,  கைகளை குறித்துவரும் ஆயுத்துக்களும் இவ்வாறுதான் எனக் கூறியுள்ளார். ஸஹாபக்களும் ஸலபுகளும் கூறாததை தனது போக்கை நிறுவுவதற்காக கூறியதாக கூறுகிறார். எப்படி இருந்தும் அவருடைய கருத்துக்கு சார்பாக ஸஹாபாக்களைத் தொட்டும் ஒரு தகவலைக்கூட சொல்லவில்லை.

தொடரும்......

No comments:

Post a Comment