Wednesday, November 22, 2017

இப்னு தைமிய்யாவின் உண்மை முகம் - 05

இறவைனுக்கு உருவம் கற்பிப்பது சம்பந்தமாக அவரின் நிலைப்படு:

இறைவனுக்கு உருவம் உண்டு என்று தெளிவாகவே அவரது பிரசங்கங்களில் கூறியுள்ளதோடு அவர் எழுதிய நூட்களில் தெளிவான வார்த்தையாக கூறவில்லை.

1.        ஒரு முறை மின்பரிலே இருக்கும் போது நான் இறங்குவது போல் தான் அல்லஹு தஆலா அடிவானத்துக்கு இரங்குகிறான் எனக்கூறிய செய்தியை இப்னு பதூதாவும் இப்னு ஹஜர் அல்அஸ்கலானி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் கூறியுள்ளார்கள். 

   றிஹ்லது இப்னுபதூதா பக் :95 அத்துரருல்காமினா 1:154

2.        இமாம் அபூ ஹய்யான் அவர்களுடைய திரு குர்ஆன் விரிவுரையான அல்பஹ்ருல் முஹீத் என்ற நூலிலும் 'அந்நஹ்ர்' என்ற நூலிலும் இப்னுதைமிய்யாவின் 'கிதாபுல் அர்ஷ்' என்ற நூலிலிருந்து வாசிதத்தாக கூறும் செய்தியாகும். அதாவது:

அல்லாஹுதஆலா 'குர்ஸி' கதிரை மீது உட்கார்ந்திருக்கிறான். அவனுடன் அதில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உட்காரவைப்பதற்காக ஒரு பகுதியை ஒதுக்கி வைத்திருக்கிறான்.

இக்கருத்தை யூசுப் அன்னப்ஹானி றஹ்மதுல்லாஹி அலைஹி அலைஹி அபூ ஹய்யான் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் 'அந்நஹ்ர்' என்ற நூலிலிருந்து பெற்றதாக கூறியிருப்பதோடு, (ஷவாஹிதுல் கக் பக் :130) 'கஷ்புல்லுனூன்' என்ற நூலின் ஆசிரியரும் குறிப்பட்டிருக்கிறார்கள். கஷ்புல்லுனூன் (1:1438)

ஆனால் தற்பொழுது அச்சிலே உள்ள 'அந்நஹ்ர்' என்ற நூலில் அவை நீக்கப்பட்டுள்ளது. இது போன்றே இப்னுதைமிய்யாவின் கொள்கைகளை குறிக்கும் வேறு வார்த்தைகளும் நீக்கப்பட்டுள்ளன.

என்றாலும் அர்ஷின் மீது அவனுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உட்காருவார்கள் என்ற வார்தையை கூறாவிட்டாலும் மின்ஹாஜுஸ்ஸுன்னா (1:260,261) என்ற நூலில் இக்கருத்தை நிறுவுவதற்டு கடும் பிரயத்தனம் மேற்கொண்டுள்ளார்.

3.        துஆவின் போது கையை உயர்த்துவது அல்லாஹ் மேல் திசையில் இருக்கிறான் என்பதற்கு ஆதாரமாகும்.

அல்ஹமவிய்யதுல் குப்ரா பக் :94, ஷர்கு ஹதீஸின்னுஸூல் பக் :59

ஒரு மனிதன் கிப்லாவை முன்னோக்கி வானங்களையும் பூமியையும் படைத்த நாயனுக்காக முகத்தை திருப்புகிறேன் எனச் சொன்னால் அல்லாஹுதஆலா கிப்லா திசையில் தான் இருக்கிறான் என முடிவெடுக்கலாமா? இவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹு தஆலா தூய்மையானவன். முதல் தடவையே விளங்கும் வெளிப்பொருள் தான் சரியானது என முடிவெடுப்பது மிகப்பெரிய தவறாகும். இது குர்ஆன் எந்தப்பாசையைக் கொண்டு இரங்கியதோ அதன் உண்மையான நிலமையல்ல.

அல்லாஹு தஆலா திருமறையில் 'அனைவரும் அல்லாஹ்வின் கயிற்றை பற்றிப்படித்துக் கொள்ளுங்கள்' என்ற வசனத்தில் கூறப்படும் கயிறு என்பது நாம் உபயோகிக்கும் கயிறுதான் என யாராவது சொல்வாரேயானால் மேலே இருந்து இரங்கும் தனிச்சிறப்புக்களைக்கொண்ட கயிறை பின்பற்றுவதற்காக எதிர்பார்த்திருக்கவேண்டும்!.
ஆனால் அனைத்து அறிஞர்களும் அல்லாஹ்வின் கயிறு என்பது இஸ்லாம், அல்லது குர்ஆன் என்றோ அல்லது பின்பற்றுமாறு கட்டளையிடப்பட்ட குர்ஆனும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பமும் எனவும் கூறியுள்ளார்கள்.

யார் இது போன்ற வசனங்களுக்கு உபபொருள் கொடுக்க முடியது எனக்கூறுகிறார்ளோ அவர் பெரிய தவறிலைப்பதோடு மடமையலே இருக்கிறார்.  
பண்புகள் சம்பந்தப்பட்ட ஆயத்துக்களுக்கு ஸலபுகள் உபபொருள் கொடுக்கவில்லை என யாரவது கூறினால் அவர்கள் மிது இட்டுக்கட்டியவராவார்.


யார் தப்ஸீர் நூற்களில் அவ்வாரான ஸலபுகளின் வார்த்தைகள் கூறப்படவில்லை எனச் சொல்கிறாரோ அவர் பிறர் விழுவதற்காக குழியைத்தோண்டி தான் விழுந்தது போலாகும். இதோ தப்ஸீர் நூல்கள் ஸஹாபாக்களும் பெரும் பெரும் தாபியீன்களும் உபபொருள்களை கொடுத்தற்கான தகவல்கள் நிரம்பிக்கிடக்கின்றன. யாருக்கு நல்லமுறையில் வாசிக்க தெரியுமோ அவர் பார்த்துக் கொள்ளட்டும்.

தொடரும்.....

No comments:

Post a Comment