இ-தப்ஸீரும் ஆயத்
இரங்கியதற்கான காரணங்களும்
தொழுது கொண்டிருக்கும் போது
அலி றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களுடைய மோதிரத்தை ஸதகா கொடுத்தார்கள் என்ற ஹதீஸ்
இட்டுக்கூடப்பட்டது என அனைத்து அறிஞர்களும் ஏகோபித்து கூறியிருக்கின்றார்கள் என இப்னு
தைமிய்யா கூறகிறார்
முகத்திமதுன் பீ உஸுலித்தப்ஸீர்
பக் :31.36
பின்னர் தப்ஸீர்கலை பற்றிக்
கூறும் போது
மக்களுடைய புழக்கத்திலுள்ள
தப்ஸீர்களில் முஹம்மத் இப்னு ஜரிர் அத்தபறி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் தப்ஸீர் மிகச்சரியானதாகும்.
ஏனெனில் அவர்கள் ஸலபுகளுடைய கருத்துக்களை நிலையான அறிவிப்புத்தொடர்களைக் கொன்டு கூறுவார்.
அதலே நூதனம் கிடையாது. சந்தேகிக்கப்பட்டவர்களின் தகவல்களை கூறமாட்டார். இது போன்ற கருத்தையே
'தப்ஸிர் அல்பகவி' யைப் பற்றியும் கூறியுள்ளார்.
முகத்திமதுன் பீ உஸுலித் தப்ஸீர்
பக் :51
இமாம் தபறி அவர்கள் 'உங்களுடைய பொறுப்பாளர்
அல்லாஹ்வும் அவனது ரஸுலும் தொழுகையை நிலைநாட்டுபவர்களும் ருகூவுடைய நிலையில் இருந்துகொண்டும்
ஸகாத்கொடுக்கக் கூடியவர்களான விசுவாசங் கொண்டவர்களுமாகும்' என்ற (மாயிதா:55)ம் வசனத்திற்கு விரிவுரையாக
உறுதியான 6 அறிவிப்புத் தொடர்களைக்
கொண்டு அலி றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழும் போது ஸதகா கொடுத்தார்கள் என்ற ஹதீஸை அறிவித்துள்ளார்கள்.
இவ்வாறே இமாம் பகவி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் கூறியிருப்பது மட்டுமல்லாமல் அனைத்து
தப்ஸீர்களிலும் இச்சம்பவம் கூறப்பட்டுள்ளது. மேலதிக விபரத்துக்காக தப்;ஸிர்தபறிஇ ஸமஹ்ஷரி, றாஸி, அபிஸ்ஸுஊத், பைலாவி, குர்துபி, ஸுயூதி, ஷவ்கானி, ஆலூஸி, வாஹிதி இமாமுடைய அஸ்பாபுன்
னுஸுல் போன்ற அனைத்து திருக்குர்ஆன் தப்ஸீர் நூல்களையும் பார்க்கலாம்.
ஈ- யஸீத் இப்னு முஆவியாவை
சபிப்பது கூடுமா அல்லது கூடாதா?
அஹ்மத் இப்னு ஹன்பல் றஹ்மதுல்லாஹி
அலைஹி அவர்களின் சம்பவத்தை பின்வருமாரு கூறுகிறார்:
யஸீதுடைய ஹதீஸை எழுதலாமா என
அஹ்மத் இப்னு ஹன்பல் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் கேட்கப்பட்டபோது வேண்டாம் நலவு
கிடையாது எனக்கூறிவிட்டு அவர் தானே மதீனாவாசிகளுடன் இவ்வாறு இவ்வாறெல்லாம் நடந்துகொண்டார்
எனக்கூறினார்கள்.
சில மக்கள் நாங்கள் யஸீதை
நேசிக்கிறோம் எனக்கூறுகிறார்களே எனக்கேட்கப்பட்ட போது அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகின்ற
ஒருவர் யஸீதை நேசிப்பாரா எனக்கேட்டார்கள்?
அப்போது அஹ்மத் இமாமுடைய மகன்
ஸாலிஹ் அவர்கள் ஏன் நீங்கள் அவரை சபிக்காமல்
இருக்கிறீர்கள் எனக் கேட்டபோது உமது தந்தையை யாரையாவது சபிப்பதை கண்டிருக்கிறீரா என
அஹ்மத் இமாம் கேட்டார்கள். இதனுடன் இச்சம்பவத்தை முடித்துக்கொண்டார்
ரஃஸுல் ஹுஸைன் பக்:205
ஆனால் உண்மை என்னவெனில் இச்சம்பவம்
இதனுடன் நிறைவுபெறவில்லை. மாறாக யஸீதை சபிப்பதாக தெளிவாக தொடர்ந்து கூறியிருக்கிறாகள்
அதாவது:
அஹ்மத் இமாமவர்கள் அல்லாஹு
தஆலா குர்ஆனில் சபித்தவனை ஏன் சபிக்க முடியாது எனச் சொன்னதும் குர்ஆனில் எங்கே யஸீதை
சபிக்கச் சொல்லிக்கூறப்பட்டுள்ளது எனக்கேட்ட போது பின்வரும் வசனத்தை ஒதிக்காட்டி
'(போருக்கு வராது) நீங்கள் பின் வாங்குவீர்களாயின், நீங்கள் பூமியில்
குழப்பம் உண்டாக்கி உங்கள் சுற்றத்தாரை (அவர்களுடன் கலந்து உறவாடுவதிலிருந்தும்) துண்டித்து
விடவும் முனைவீர்களோ?
இத்தகையோரைத் தாம் அல்லாஹ் சபித்து, இவர்களைச் செவிடாக்கி
இவர்கள் பார்வைகளையும் குருடாக்கி விட்டான்'. 47:22,23
கொலைசெய்வதை விடபெரிய குழப்பம்
எது இருக்கிறது எனக்கேட்டார்கள்.
அர்ரத்து அலல்முதஅஸ்ஸிபில்
அனீத் பக்.16
இவ்வாறுதான் நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்களிலும் ஸலபுகளின் வார்த்தைகளிலும் பொய்யானதை கூறியும்
மூடிமறைத்தும் ஒருவிதமான போக்கைத் கொண்டிருந்தார்.
அவரது சுயபுத்திக்கு எதிராக ஹதீஸ்கள வரும் போது இவ்வாறே நடந்து கொண்டார்.
பின்வரக்கூடிய விடயங்களிலும்
அவர் ஹதீஸ்களை எவ்வாறு கையாண்டார் என்பதை விளங்கிக்கொள்ள முடியும். இது தான் ஹதீஸ்களுடைய
விடயத்தில் இப்னுதைமிய்யாவின் உண்மையான நிலைப்பாடாகும்
தொடரும்.....
No comments:
Post a Comment