இப்னு தைமிய்யாவின்
உண்மை முகம்
அறபியில்
பேராசிரியர் : ஸாயிப் அப்துல் ஹமீத்
தமிழில்
அல் உஸ்தாத் அஸ்மிகான் (முஅய்யிதி)
பின்வரும் விடயங்களின் மூலமாக இப்னு தைமிய்யாவின் சுயரூபத்தை விளங்கிக்கொள்ளலாம்:
1- இப்னுதைமிய்யாவும் ஹதீஸும்
2- இப்னுதைமிய்யாவும் அல்லாஹு
தஆலாவின் பண்புகளும்
3- இப்னுதைமிய்யாவும் நபிஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தினரும்
4- இப்னுதைமிய்யாவும் இஸ்லாமிய
அறிஞர்களும்
5- இப்னுதைமிய்யாவும் யஸீதிய்யாக்களும்
6- இப்னுதைமிய்யா பற்றிய உலமாக்களின்
கருத்தக்கள்
இவைகளுக்கு முன்னால் இப்னு
தைமிய்யாவின் வாழ்கை குறிப்பை சுருக்கமாகப் பார்ப்போம்
அஹ்மத் இப்னு அப்துல் ஹலீம்
இப்னு அப்துஸ்ஸலாம் இப்னு அப்துல்லாஹ் இப்னுல் ஹிழ்ர் இப்னு தைமிய்யா என்பது அவரின்
முழுப்பெயராகும்.
சிரியாவிலே உள்ள ஹர்ரான் என்ற
நகரத்தில் ஹிஜ்ரி 661ல் பிறந்து ஹ்ஜ்ரி
728ம் ஆண்டு சிரியாவின்
டமஸ்கஸ் நகரிலுள்ள சிறைச் சாலையில் மரணித்தார். அவர் சீரிய புத்தியுள்ளவராகவும் இயல்புடையவராகவும்
இருந்தார். அவரின் சில கொள்கை கோட்பாடுகள் காரணமாகவும் மார்க்கத் தீர்ப்புகள் காரணமாகவும்
மூன்று முறை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் அடிப்படை அறியப்படாதவராகவே இருந்தார்.
67 வருடங்கள் வாழ்ந்தும்
அவர் திருமணம் முடிக்கவில்லை. அவரோ வேறு யாருமோ திருமணம் முடிக்காததற்கான இரகசியத்தை
கூறவில்லை. அகீதா பிக்ஹ் சம்பந்தப்பட்ட பல நூல்களை எழுதியுள்ளார். வஹ்ஹாபி இயக்கம்
அதன் இஸ்தாபகருக்கு அடுத்தபடியாக இவரையே தலைவராக
கருதுகின்றனர். இவ்வியக்கமே அவரின் கருத்துக்களையும் சிந்தனைகளையும் புதிப்பித்ததோடு
மெருகூட்டியது.
அவரின் மிக முக்கியமான சிந்தனைகளையும்
கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்வரும் தலையங்கங்களில் பார்க்கலாம்.
1- இப்னுதைமிய்யாவும்
ஹதீஸும்
இப்னு தைமிய்யாவை கண்மூடித்தனமாக
பின்பற்றக்கூடியவர்கள் கூறுவது போல் ஹதீஸ் துரையில் இமாமாக இருந்தாரா அல்லது மற்றவர்கள்
கூறுவது போன்று தீவிர போக்குடையவராகவும் நிதானமற்றவராகவும் மனோ இச்சையை பின்பற்றுபவராகவும்
இருந்தாரா?
இதற்கான விடையை இவர்களிடமோ
அவர்களிடமோ எதிர்பார்ப்தை விட அவருடைய நூற்களில்
எவ்வாறு ஹதீஸ் துறையில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை பார்ப்போம். அவருடைய நூல்களிலிருந்து
சில உதாரணங்களை தருகிறோம்.
No comments:
Post a Comment