அ- துஆ கேட்கும் போது
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொண்டு வஸீலா தேடலாமா?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களைக் கொண்டு வஸீலா தேடுவது சம்பந்தமாக அவர் ஸஹீஹானது எனக்கூறிய பல ஹதீஸ்களையும்
ஸஹாபாக்கள் தாபியீன்கள் வாயிலாக அறிவிக்கப்பட்ட பல தகவல்களையும் கூறியுள்ளார். யா அல்லாஹ்
அருட்கொடையான உனது நபியைக்கொண்டு உன்னை முன்னோக்குகிறேன் முஹம்மதே உங்களைக்கொண்டு உங்களது
நாயனும் எனது நாயனுமாகிய அல்லாஹ்வை முன்னோக்குகிறேன். எனக்கு ஏற்பட்டுள்ள விடயங்களுக்காக
எனக்கு இரக்கம் காட்டுவாயாக என்ற துஆவையும்; இது போன்ற துஆக்களையும் கூறிவிட்டு ஸலபுகள் இதைக்கொண்டு அமல்
செய்ததாக இமாம் பைஹகி, இப்னுஸ்ஸுன்னி, தபறானி போன்றவர்கள்
அறிவித்ததாகவும் கூறியுள்ளார்
அதைத் தொடர்ந்து கூறியிருப்பதாவது:
சில ஸலபுகள் (முன்னோர்கள்)
இதை செய்ததாக அறிவிக்கப்படடுள்ளது. இப்னு அபித்துன்யா 'முஜாபித்துஆ' என்ற நூலில் அறிவித்ததை
உதாரணமாக சொல்லலாம். இந்த துஆவும் இது போன்ற துஆக்களும் ஸலபுகள் ஓதியதாக அறிவிக்கபடடுள்ளது. அஹ்மத் இப்னு ஹன்பல் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்
துஆவிலே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக்
கொண்டு வஸீலா தேடியதாக 'மன்ஸகுல் மர்வஸி' என்ற நூலில் கூறப்பட்டுள்ளது
அத்தவஸ்ஸுல் வல்வஸீலா
பக்:105,106
இதே நூலின் ஆரம்பப் பக்கங்களில்
பின்வருமாரு கூறுகிறார்.
ஸஹாபாக்கள், அவர்களை நல்ல முறையில்
பின்பற்றிய தாபியீன்கள்;;;,
ஏiயை முஸ்லிம்கள் என
யாரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்த பின் அவர்களைக் கொண்டு சிபாரிசு
செய்யும்படியோ வேறெதையுமோ கேட்கவில்லை. இஸ்லாமிய அறிஞர்களில் யாரும் இதைப்பற்றி நூற்களில்
கூறவும் இல்லை
அத்தவஸ்ஸுல் வல்வஸீலா
பக்:18
எனவே இந்நூலில் இப்னு அபித்துன்யா, அஹ்மத் இப்னு ஹன்பல், இப்னுஸ் ஸுன்னி, பைஹகி, தபறானி போன்றவர்கள்
கூறியதாக உள்ள தகவல்கள் எங்கே போய்விட்டன?. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கொண்டு வஸீலா தேடுவது
ஸலபுகளின் செயலாக இருந்தது என தெட்டத்தெளிவாக கூறியது எங்ககே போய் விட்டது?.
ஆ- நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களினதும் ஏனைய நபிமார்கள், ஸாலிஹீன்களின் கப்றுகளை தரிசிக்கச்செல்லல்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களின் கப்ரை தரிசிப்பது சம்பந்தமாகவோ, இப்றாஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரை தரிசிப்பது சம்மபந்தமாகவோ
எவ்வித அடிப்படையான, நிலையான ஆதாரமும்
கிடையாது
கிதாபுஸ் ஸியாரா பக்:12,13
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களின் கப்ரை ஸியாரத் செய்யும் படி வந்திருக்கும் ஹதீஸ்கள் யாவும் பலவீனமானவையும்
இட்டுக்கட்டப்பட்டவைகளுமாகும். இவைகளை பின்பற்றத் தகுந்த இமாம்களோ ஸுனன்களை கோர்வை
செய்த இமாம்களோ அறிவிப்புச் செய்யவில்லை.
கிதாபுஸ் ஸியாரா பக்:22,38
இவ்வாறு கூறியிருந்தும் அவரே
மேற்கூறப்பட்ட இரண்டு இடங்களுக்கு இடையில் இப்னு மாஜாவும் இப்னு ஹுஸைமாவும் அவர்களது
'ஸுனன்' என்ற நூலில் கூறியுள்ள
ஸஹீஹான பின்வரும் ஹதீஸை எழுதியுள்ளார்.
நான் மரணித்ததன் பின் என்னை
யார் தரிசிக்கிறாரோ அவர் நான் உயிருடன் இருக்கும்போது தரிசித்தது போன்றுதான் என நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்
அவரே இந்த ஹதீஸை கூறிவிட்டு
பின்னர் மறுத்துவிட்டு இமாம்கள் யாரும் அறிவிக்கவில்லை என்றும் ஸுனன்களில் வரவில்லை
என்றும் கூறுகிறார்.
தொடரும்......
No comments:
Post a Comment