Saturday, November 25, 2017

இப்னு தைமிய்யாவின் உண்மை முகம் - 07


யஸீதைப்பற்றி அவர் சம்பந்தமாக அஹ்மத் இப்னு ஹன்பல் றஹ்மதுல்லாஹி அலைஹி சபிக்கும் படி கூறியதை நீக்கிவிட்டு அச்சம்பவத்தின் ஏனைய பகுதியை மாத்திரம் கூறியதை பார்த்தோம்.

இதற்காக வரலாற்று உண்மைகளை ஸலபுகளின் வார்த்தைகளை மூடி மறைத்து யஸீதை நியாயப்படுத்துவதற்காக அவர்கள் மிது இட்டுக்கட்டியுள்ளார்.
இப்னுதைமிய்யா கூறியிருப்பதாவது:

ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் கொள்ளப்பட்டதை யஸீத் பொருந்திக் கொண்டதாக வெளிப்படுத்தவில்லை, கொல்லப்பட்டதற்காக வருத்தத்தையே வெளிப்படுத்தினார்
ரஃஸுல் ஹுஸைன் பக் :200,201

இது ஸலபுகளின் ஏகோபித்த முடிவின் படி கூறப்பட்டதா? அல்லது அவரின் சுயகருத்தா என்பது தெரியவில்லை!!
இந்தவிடயத்தில் ஸலபுகளின் ஏகோபித்த முடிவை இமாம் தப்தாஸானி 'ஷர்குல் அகாயிதின் நஸபிய்யா' என்ற நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

யார் ஹூஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களை கொலை செய்தார்களோ அல்லது கொலை செய்ய ஏவினார்களோ அல்லது ஆகுமாக்கினார்களோ, அல்லது அதை பொருந்திக் கொண்டார்களோ அத்தகைய அனைவரையும் சபிக்கமுடியும் என்பது ஏகோபித்த முடிவாகும். ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கொள்ளப்பட்டதை யஸீத் பொருந்திக் கொண்டதும், சந்தோசமடைந்ததும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தினரை இழிவுபடுத்தியதும் அனைவராலும் ஒன்றுபட்டு கூறப்பட்ட முதவாதிரான செய்தியாகும். (விபரம் சிலரால் கூறப்பட்டதாகும்) எனவே நாங்கள் அவருடைய விடயத்திலும், அவர் காபிரா, முஃமினா என்ற விடயத்திலும் நாம் வாய்பொத்தியிருக்கமாட்டோம். அவரின் மீதும் அவருடைய உதவியாளர்கள் மீதும் அல்லாஹுதஆலாவின் சாபம் உண்டாவதக.

ஷதராதுத்தஹப் இப்னுல் இமாத் அல்ஹன்பலி  1: 68,69
அல்இத்ஹாப் பீ ஹுப்பில் அஷ்ராப், பக் : 62,63

இப்னுதைமிய்யா கூறியிருப்பதாவது:

யஸீதுடைய ஆட்சிக்காலத்தில் சிரியாவுக்கு ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தலை கொண்டு செல்லப்பட்டதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.
ரஃஸுல் ஹூஸைன் பக் :207, அல்வஸிய்யதுல் குப்ரா பக் :53

யஸீதிடம் (ஹுஸைன்) அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தலை கொண்டுசெல்லப்பட்டபோது ஒரு தடியால் குத்தினார் என்ற செய்தி பொய்யானதாகும்.
            ரஃஸுல் ஹூஸைன் 206

உண்மையாளர்களின் செய்திகளை இதற்கு ஆதாரமாக பெற்றாரா?

இப்னு தைமிய்யா கூறியிருக்கிறார்:

ஸுபைர் இப்னுபக்கார், முஹம்மத் இப்னு ஸஃத், இவர்கள் போன்றவர்கள் அறிவிலும், மார்க்கசட்டத்திலும், தகவல் அறிவதிலும் பிரபல்யமானவர்கள் என்பதும் இந்த (வரலாற்று) விடயத்தில் மிகவும் அறிந்தவர்கள், அவர்கள் தகவல்களை வெளியிடும் போது பெய்யானவர்கள், அறியப்படாதவர்களிடமிருந்து செய்திகளை பெறமாட்டார்கள் என்பதும் தெரிந்த விடயமகும்.
            ரஃஸுல் ஹுஸைன் பக் :198

அவர் மீண்டும் கூறியிருப்பதாவது:
ஹதீஸ் துரையச்சேர்ந்த இமாம் இப்னு அபித்துன்யா போன்றவர்கள் இந்த விடயங்களை நன்கு அறிந்தவர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கிடையாது.           
ரஃஸுல் ஹுஸைன் பக் :206

அப்படியானால் இந்த அறிஞர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள். ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் தலை சிரியவுக்கு கொண்டுசென்றதும் தடியினால் குத்தியதும் பொய்யான தகவல் என்று சொல்கிறார்களா?

அவர்கள் கூறியதாக எந்த ஒரு வார்த்தையையும் இப்னு தைமிய்யா கூறவில்லை. இப்னு தைமிய்யா எதை இல்லை என்று மறுத்தாரோ அவை இருப்பதாகவே அந்த அறிஞர்கள் கூறியுள்ளார்கள். அறிஞர்களுக்கு மத்தியில் மிகச்சரியானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லாதது என இப்னுதைமிய்யா வர்ணித்த அறிவிப்புத்தொடர்கள் மூலமாகவே அறிவித்துள்ளாகள்.

ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் செய்திகளையும், கொல்லப்பட்ட முறையையும் கூறும் இப்னு அபித்துன்யா, பகவி போன்ற இமாம்களில் யாரும் ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் தலையை அஸ்கலான் என்ற ஊருக்கோ கெய்ரோவுக்கோ கொண்டுபோனதாக எத்தகவலையும் கூறவில்லை.
            ரஃஸுல் ஹுஸைன் பக் :197

இது பரிகாசத்துக்குரிய விடயம் இல்லையா? இதுபோன்ற வார்த்தைகள் அறிவாளிகள் என்று சொல்லிக்கொள்பவர்களிடமிருந்து வெளியாக முடியுமா?

  இப்னு தைமிய்யா கூறியிருப்பதாவது: யஸீத் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் குடும்பத்தினரில் எவரையும் சிறைகைதிகளாக பிடிக்கவில்லை. அவர்களுடைய குடும்பத்தாரை கண்ணியப்படுத்தினார்.
மின்ஹாஜுஸ்ஸுன்னா  2:226

மற்றுமொறு இடத்தில் கூறியிருப்பதாவது:
 அஹ்லுபைத்தினரை யாரும் கைதியாக பிடிக்கவுமில்லை பெண்களில் எவரும் பிடிபடவுமில்லை
ரஃஸுல் ஹுஸைன,; பக்கம்:208  

அவர் கூறிய இக்கூற்றுக்கான சான்றை நம்பிக்கையானவர்களிடமிருந்தோ அவர்கள் அல்லாதவர்களிடமிருந்தோ கூறவில்லை. அவ்வாறு கூறவும் முடியாது. ஏனனில் இது யஸீதை பாதுகாப்பதற்காக கூறப்பட்ட வார்த்தையாகும்.

இப்னுதைமிய்யா பொய்யானது எனக்கூறிய விடயத்தை வரலாற்றாசிரியர்கள் அனைவரும் சரியானது ஆதாரபூர்வமானது எனக்கூறியுள்ளார்கள். ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கொள்ளப்பட்டது சம்பந்தமாக எந்த அறிஞர்களுடைய கருத்தை ஏற்கவேண்டும் எனக் கூறினாரோ அத்தகைய இமாம்களான இப்னு அபித்துன்யா, முஹம்மத் இப்னு ஸஃத் போன்ற அறிஞர்களின் கருத்தை தருகிறோம்

இமாம் இப்னு அபித்துன்யா இமாம் முஹம்மத் இப்னு ஸஃத் ஆகிய இருவரும் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தையும் அவார்களின் ஆடையையும், தலைப்பாகையையும் பறித்தெடுத்துக்கொண்ட சம்பவத்தையும் கூறிய பின் பின்வருமாரு கூறுகிறார்கள:

இன்னொருவர் பாதிமா பின்துல் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் போர்வையையும் இன்னொருவர் நகையையும் எடுத்துக்கொண்டனர்....

பின்னர் உமர் இப்னு ஸஃத் என்பவன் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தலையை உபைதுல்லாஹ் இப்னு ஸியாதுக்கு அனுப்பியதோடு பெண்களையும், சிறுவர்களையும் வாகனத்தில் ஏற்றினான். கொல்லப்பட்டவர்களுக்கு அருகில் சென்ற போது ஸைனப் பின்து அலி றழியல்லாஹு அன்ஹா அவர்கள் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே! எங்களுக்கு உதவ யாருமில்லையா! இதோ ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் இரத்தக்கரை படிந்து உறுப்புகள் வெட்டப்பட்டு வெட்டவெளியில் கிடக்கிறார். உங்களது பிள்ளைகள் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளார்கள். உங்களது குடும்பத்தினர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என அழுது புலம்பினார்கள்.

இருந்த நண்பர்களோ, எதிரிகளோ எல்லோருமே அழுதார்கள்....
பின்னர் இப்னு ஸியாத் ஸஹ்ர் இப்னு கைஸ் என்பவரிடம் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தலையையும் ஏனைய தோழர்களின் தலைகளையும் யஸீதிடம் கொண்டு  செல்லும்படி கொடுத்தனுப்பினான்...

யஸீதிடமிருந்து ஒரு தூதவர் வருகைதந்து ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களினதும் மீதமிருக்கும் அவர்களின் குடும்பத்தாரினதும் பொருட்களை அவனிடம் அனுப்பும்படி கட்டளை இடுவதாக கூரினார்.....

பின்னர் யஸீத் அலி இப்னுல் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் சிறுவர்களையும், பெண்களையும் அழைத்து வரும்படி கூறினான். அவர்கள் கையிறுகளினால் கட்டப்பட்டிருந்தார்கள். யஸீதிடம் சென்றதும் யஸீதே எம்மை கயிறுகளினால் கட்டப்பட்டிருப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கண்டால் என்ன செய்வீர் என அலி இப்னுல் ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம் கேட்டார்.!!

பெண்கள், சிறுவர்கள் அனைவரையும் அவனுக்கு முன்னால் உட்காரவைக்கப்பட்டார்கள். அப்பொழுது ஷாம் தேசத்தைச்சேர்ந்த ஒருவன் அமீருல் முஃமினீனே இந்த (பாதிமது பின்துல் ஹுஸைன் அலைஹஸ்ஸலாம் என்ற) பெண்ணை எனக்கு தாரும் எனக்கேட்டபோது அவர்கள் நடுங்கி அவர்களுடைய சாச்சியான ஸைனப் நாயகியின் ஆடையை பிடித்துக் கொண்டதோடு அவர்கள் அவ்வாறு செய்துவிடுவார்கள் என்றும் நினைத்தார்கள். அப்பொழுது ஸைனப் நாயகி 'நீ பொய் சொல்கிறாய்,நீ பழிக்கப்பட்டவன், அவள் உனக்கோ அவனுக்கோ கிடையாது' எனக்கூறியதும் யஸீத் கோபப்பட்டு நான் விரும்பினால் அவ்வாறு செய்வேன் எனக்கூறினான். அதற்கு ஸைனப் நாயகி இல்லை அல்லாஹ்வின் மிது சத்தியாமாக உன்னால் அதை செய்ய முடியாது. அப்படி செய்வதாக இருத்தால் நீ இந்த மார்கத்தை விட்டும் வெளியேறி வேறு மத்ததை பின்பற்ற வேண்டிவரும் எனச் சொன்னார்கள்.பின்னர் யஸீத் அவர்களை மதீனாவுக்கு அனுப்பிவைத்தான். வரலாற்றாசிரியர்கள் அனைவரும் இச்சம்பவத்தை ஏகோபித்து கூறியுள்ளார்கள். யாரும் இதை கூறாமலில்லை.

தாரீஹ் அத்தபறி, அல்காமில் பித்தாரீக், அல்பிதாயா வந்நிஹாயா.


ஹதீஸ்கலை அறிஞர்களும் வரலாற்றாசிரியர்களும் ஏகோபித்து அனைவராலும் கூறப்பட்ட வரலாற்று உண்மைகளை கூறுவதில் நம்பிக்கையற்றவராக காணப்படும் ஒருவரை மார்க்க விடயத்தில் நம்பிக்கைக்குறியவராக ஏற்க முடியுமா

தொடரும்.....

No comments:

Post a Comment