Friday, November 24, 2017

ஸுப்ஹான மவ்லித் துஆ


தமிழாக்கம்: மௌலவி  எம்.ஏ.எம் அஸ்மிகான் (முஅய்யிதி)
அதிபர்: றவ்லதுல் உலமா அறபுக் கல்லூரி - மடிகே மிதியால, குருனாகல, இலங்கை.


யா அல்லாஹ் உன்னுடைய தூதர் எங்கள் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார்கள் தோழர்கள் மீதும் ஸலாத்தும் ஸலாமும் சொல்வாயாக. சிறப்புமிக்க கிருபையாளராகிய திருமணியாய் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சிறப்பான மவ்லித் நிறைவுபெற்றுவிட்டது.  யா அல்லாஹ் எங்களையும் உங்களையும் அவர்களுடைய சிபாரிசை பெறத்தகுதியானவர்களாகவும் அவர்களின் மூலம் உனது கிருபையை ஆதரவு வைப்பவர்களாகவும் ஆக்குவாயாக.  இந்த உலகத்தை படைத்துப் பரிபாளிக்கும் உனக்கே எல்லாப் புகழும் சொந்தம்.

யா அல்லாஹ் சங்கை மிக்க இந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களினதும்நேரான பாதையில் நடந்து சென்ற அவர்களின் குடும்பத்தார்கள் தோழர்களினதும் கண்ணியத்தைக் கொண்டு எம்மை அன்னவர்களுடைய சிறந்த சமுதாயத்தில் ஆக்கிவிடுவாயாக. அவர்களின் மகிமையைக் கொண்டு எமது குற்றங்களை மறைத்துவிடுவாயாக. நாளை மறுமையில் அவர்களுடைய கூட்டத்தில் எம்மை எழுப்புவாயாக. அவர்களை புகழவும் அவர்களுக்கு உதவிசெய்யவும் எமது நாவுகளை பயன்படுத்துவாயாக. அவர்களுடைய கட்டளைகளை எடுத்து நடப்பவர்களாக எம்மை வாழவைப்பாயாக. ஸுன்னத் ஜமாத் கொள்கையிலே எம்மை மரணிக்கச்செய்வாயாக.

யா அல்லாஹ் அவர்கள் தான் முதன் முதலில் சுவர்க்கத்தில் நுழையக்கூடியவர்கள், அவர்களுடன் எங்களையும் நுழையவைத்துவிடுவாயாக. சுவர்க்கத்தின் மாளிகைகளுக்குள் அவர்கள் தான் முதன் முதலில் செல்லக்கூடியவர்கள், அவர்களுடன் எங்களையும் தங்கவைப்பாயாக. படைப்புக்கள் அவர்களைக்கொண்டு சிபாரிசு செய்யத்தேடும் நாளையில் அவர்களைக்கொண்டு எங்களுக்கும் கிருபை செய்வாயாக.
யா அல்லாஹ் உனது சங்கைமிக்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மவ்லிதை ஒன்று கூடி ஓதியிருக்கிறோம். அவர்களின் பரக்கத்தைக்கொண்டு எம்மை கண்ணியப்படுத்திவிடுவாயாக. சுவர்க்கத்தில் அவர்களுக்கு அருகாமையில் குடியிருத்தாட்டுவாயாக. நிரந்தரமான இன்பத்தை சுவர்க்கத்தில் தந்தருள்வாயாக.

யா அல்லாஹ் நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டாளும்; உண்மையாளர்களான நிறைவேற்றுபவர்களான அவர்களின் குடும்பத்தார் பொருட்டாளும் கேட்கிறோம். நீ எங்களுக்கு உதவி செய்யக்கூடியவனாக இருப்பாயாக. அவர்களின் பரக்கத்தைக்கொண்டு சுவர்க்கத்தில் அறைகளை எங்களுக்கு ஒதுக்கித்தருவாயாக. அவர்களின் பொருட்டைக்கொண்டு உன்னிடத்தில் அங்கீகாரத்தையும் அந்தஸ்தையும் சிறப்பையும் தருவாயாக.

தேர்ந்தெடுக்கப்பட்ட உனது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் தூய்மையான குடும்பத்தார்களையும் சிறப்புமிக்கத் தோழர்களையும் நல்ல தலைவர்களையும் வஸீலாவாக்கிக் கேட்கிறோம். எங்களுடைய பாவங்களையும் மன்னித்துவிடுவாயாக. அனைத்து பயங்கள் சங்கடங்களை விட்டும் பாதுகாப்பாயாக. எங்களையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் சுவர்க்கத்தில் ஒன்று சேர்த்துவைப்பாயாக. நாங்கள் இரகசியமாகவும் பரகசியமாகவும் செய்த சிறிய அமல்களை ஏற்றுக்கொள்வாயாக. உனது கிருபையைக்கொண்டு கிருபைசெய்வாயாக. உனது பாவமன்னிப்பைக்கொண்டு பாவங்களை மன்னிப்பாயாக. நீதான் மிகவும் மன்னிப்பவன் பொருப்பவன். நீதான் மிகவும் இரக்கம் காட்டுபவன் மிகவும் மறைப்பவன். நீதான் கண்ணியமானவன் நிறப்பமாக்கி கொடுப்பவன். நீதான் அடக்கியாள்பவன் தனித்தவன்

யா அல்லாஹ் நீ எங்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் அருட்கொடைகளை நிறப்பமாக தந்தருள்வாயாக.
நாம் வாழும் காலமெல்லாம் உனக்கு நன்றிசெலுத்துவதற்கு உதவிசெய்வாயாக

உனது மன்னிப்பையும் ஆரோக்கியத்தையும் எமக்கு வழங்குவாயாக
எமது அனைத்து நாட்டங்களையும் இலேசுபடுத்திவைப்பாயாக
எமக்கு ஏற்பட்ட நாம் முகம் கொடுக்க வேண்டிய அனைத்து விடயங்களிலும் உன்னைத் தவிர வேறு யாரிடமோ வேறு காரண காரியங்களையோ நாம் நம்புபவர்களாக இல்லை. எனவே நீ எமக்கு நெருக்கடி ஏற்படும் போது நீ உதவியாளனாக ஆகிவிடு

எல்லா நேரத்திலும் உனது தூதர் பரிசுத்தமானவரான நம்பிக்கையாளராகிய நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின்  சங்கையான குடும்பத்தார்கள் தோழர்கள் மீதும் அவர்களை பின்பற்றிய அனைத்து நல்லடியார்கள் மீதும் ஸலாத்தும் ஸலாமும் சொல்வாயாக.

யா அல்லாஹ் யா அல்லாஹ் முஃமீன்களுக்கு இரக்கம்காட்டுவாயாக

அகிலத்தின் ஒளி ரஸுல்மார்களின் தலைவர் அஹ்மதுல் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார்கள் தோழர்கள் மீதும் ஸலாத்தும் ஸலாமும் சொல்வாயாக.

No comments:

Post a Comment