ஷேஹ் ஹஸன் பின் உஸ்மானுல்
மக்தூமி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தர்கா நிறுவப்பட்ட சரிதை
சகல புகழும் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே. அவனுடைய
எல்லை காணா சாந்தியும் அருளும் எம்பெருமான் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்
மீதும் அன்னாருடைய கிளையார்கள், தோழர்கள் மீதும் இறுதித் தீர்ப்பு நாள் வரை அவர்களுடைய அடிச்
சுவட்டை பின்பற்றி வரும் நல்லோர் அனைவர் மீதும் உண்டாவதாக.
இறை நேசர் ஷேஹ் ஹஸன் பின்
உஸ்மானுல் மக்தூமி ரழியல்லாஹு அன்ஹு ஒரு இலங்கை சோனகராவதோடு இஸ்லாமிய உலகின் முதல்
கலீபா ஸையிதுனா அபூ பக்கர் சித்தீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய நேரடி வம்சாவளியைச்
சேர்ந்தவரும் ஆவார்.
இறை நேசர் ஷேஹ் ஹஸன் பின்
உஸ்மானுல் மக்தூமி ரழியல்லாஹு அன்ஹு காலி சோலை தலாபிடியைவில் ஹிஜ்ரி 1283 (கிபி 1755) ஆண்டு பிறந்தார்.
அன்னாருடைய தந்தையின் பெயர் உஸ்மான் பின் ஃபரீத் மக்தூமி ஆவதோடு தாய் ஃபாதிமா சித்தீகா
பின்தி ஷேஹ் முஹம்மத் மக்தூமி ஆவார்
வலியுல்லாஹ் ஷேஹ் ஹஸன் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அன்னாருடைய
இறுதி நாட்களில் அலுத்கமயில் இருந்த அன்னாருடைய தங்கையின் வீட்டில் தங்கியிருந்ததோடு
ஹிஜ்ரி 1283 முஹர்ரம் மாதம் 07ம் பிறை (22 மே 1866) அன்று இவ்வுலகை விட்டு
பிறிந்து சென்றார். அவருடன் இறுதி நாட்களில் அன்னாருடைய மருமகன் முஹம்மத் மீரா லெவ்வையும் அன்னாருக்கு துணையாக இருந்துள்ளார்.
இறை நேசர் ஷேஹ் ஹஸன் பின்
உஸ்மானுல் மக்தூமி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அன்னாருடைய மருமகனார் முஹம்மத் மீரா லெவ்வைக்கு
கூறியிருந்த வஸிய்யத்தின் பிரகாரம் அலுத்கமையில் (தற்போது தர்கா டவுன் என அழைக்கப்படும்
பகுதி) அடக்கம் செய்யப்பட்டதோடு 1866 அளவில் வலியுல்லாஹ் ஹஸன் பின் உஸ்மான் மக்தூமி ரழியல்லாஹு அன்ஹு
அவர்களுடைய 'தர்கா' எனும் மன்னறையின்
சரிதை ஆரம்பமாகியது.
வலியுல்லாஹ் ஹஸன் பின் உஸ்மானுல் மக்தூமி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின்
வாழ்க்கை தொடர்பான எழுத்து மூல சரிதையை 'மவாஹிபுர்ரஹ்மான் பிமனாகிபி ஹஸனிப்னு உஸ்மான்' என்ற தலைப்பில் கீலக்கறையைச்
சேர்ந்த இறை நேசர் மாப்பில்லை ஆலிம் சாஹிப் தொகுத்தார்.
ஜித்தா மற்றும் ஜாவா இடையே
பிரயாணம் செய்து கொண்டிருந்த வலியுல்லாஹ் ஷேஹ் ஜிஃப்ரி மௌலானா அவர்களின் விசேட மாணவராகிய
ஷேஹ் வலியுல்லாஹ் அஹ்மத் பாஃபகீஹ் பாஅலவி அவர்கள் ஹில்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்களை சந்தித்ததாகவும்
இலங்கையிலுள்ள காலிக்குச் சென்று கிலாபத்தை
இறை நேசர் ஹஸன் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு வழங்குமாறு வலியுல்லாஹ் ஷேஹ் பாஃபகீஹ்
பாஅலவி அவர்களுக்கு ஹிழ்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அறிவுறை பகன்றதாகவும் ஷேஹ் பாஃபகீஹ்
பாஅலவி ரழியல்லாஹு அன்ஹு ரிவாயத்துச் செய்ததாக 'மனாகிப் வலியுல்லாஹ் ஹஸன் பின் உஸ்மானுல் மக்தூமி
ரழியல்லாஹு அன்ஹு' நூலில் எழுதப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் ஐத்ரூஸிய்யத்துல்
காதிரிய்யா, அலவிய்யதுல் ஹத்தாதிய்யா, நக்ஷபந்திய்யா மற்றும்
ரிஃபாயிய்யா ஆகிய நான்கு தரீக்காக்களின் கிலாபத்து இறை நேசர் ஷேஹ் ஹஸன் பின் உஸ்மானுல்
மக்தூமி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு வழங்கப்பட்டதென குறிப்பிடப்பட்டுள்ளது.
வலியுல்லாஹ் ஹஸன் பின் உஸ்மானுல் மக்தூமி ரழியல்லாஹு
அன்ஹு அவர்கள் அன்னாருடைய வாழ்நாட்களில் 42 ஆண்டு காலத்தை பிறப்பிடமான காலியில் கழித்தன் பின் எஞ்சிய காலத்தை
அம்பாந்தோட்டை, திருகோணமலை, கண்டி மற்றும் கணேதன்ன
ஆகிய பகுதிகளில் கழித்தார். இங்கு வலியுல்லாஹ்
ஹஸன் பின் உஸ்மானுல் மக்தூமி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சுமார் 30 ஆண்டுகளை 'கழ்வத்' என்னும் தனிமையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிறகு மக்கூன் வந்த வலியுல்லாஹ்
ஹஸன் பின் உஸ்மானுல் மக்தூமி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அதைத் தொடர்ந்து தமது இறுதி
காலத்தை கழிக்க அலுத்கம தங்கை இல்லத்திற்த வந்தார். அதன் பின் அன்னாருடைய ஷேஹ் பாஃபகீஹ்
பாஅலவி ரழியல்லாஹு அன்ஹு வழங்கிய தரீக்காவின் கிலாபத்தை தன்னுடைய மாணாக்கர்களில் இருந்த
நான்கு இறையச்சமிக்க சிறப்பான ஆலிம்களுக்கு
கையளித்தார்.
தொடரும்....
No comments:
Post a Comment