இப்னு தைமிய்யாவைப் பற்றி மன்சூர் (நளீமி)
படிக்க வேண்டிய பாடங்கள்
இப்னு தைமிய்யாவும்
ஸஹாபாக்களும்
• பாதிமா நாயகியிடம் முனாபிக்களின் பண்பான கொடுத்தால் பொருந்திக்கொள்வது
கொடுக்காவிட்டால் கோபித்துக்கொள்வது என்ற பண்பு இருந்தது. (மின்;ஹாஜுஸ் ஸுன்னா: 4:244 – 246)
• ஹதீஜா நாயகயின் ஈமான் பூரணமானதல்ல. (மின்;ஹாஜுஸ் ஸுன்னா: 4:303 – 304)
• நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா நாயகியின் மீது
சந்தேகப்பட்டார்கள் (மின்;ஹாஜுஸ் ஸுன்னா: 7:80,81)
• அலி றழியல்லாஹு அன்ஹு அவர்கள் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய
ஆசைவைத்திருந்தால் பாத்திமா நாயகியை நோவினை செய்வதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால் அபூ
பக்கர் றழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அவ்வாறு ஏதும் இருக்கவில்லை. (மின்;ஹாஜுஸ் ஸுன்னா: 4:255)
• அலி றழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏனைய ஸஹாபாக்களைப் போல் இருக்கவில்லை.
இதனால் அதிகமான ஸஹாபாக்கள் தாபியீன்கள் இவர்களை கோபிக்கக் கூடியவர்களாகவும் ஏசக்கூடியவர்களாகவும் யுத்தம் செய்யக்கூடியவர்களாகவும் இருந்தார்கள். (மின்;ஹாஜுஸ் ஸுன்னா: 7:137)
அலியே உம்மை முஃமினானவரே
நேசிப்பார், நயவஞ்சகம் உள்ளவரே
உம்மை கோபிப்பார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை மறந்துவிட்டார்
போலும். முஸ்லிம் (1:86)
இப்னு தைமிய்யா இஸ்லாமிய
அறிஞர்களின் கருத்துக்கு மாற்றமாக அடிப்படை விடயங்களிலும் நுணுக்கப்பரிவுகளிலும் கூறிய
விடயங்கள்.
அவைகளில் சிலது ஏகோபித் முடிவு
(இஜ்மா) வுக்கு மாற்றமானவைகளகும். இன்னும் சிலது நான்கு மத்ஹபுகளிலும் மிகச்சரியான
கருத்துக்கு மாற்றமானதாகும்.
- இன்னது நடந்தால் நீ தலாக்காகி விட்டாய் என ஒரு கணவன் மனைவியிடம்
சொல்லி சத்தியம் செய்து அவ்விடயம் நடந்து விட்டால் அப்பெண் தலாக்காகி விடமாட்டாள்.
சத்தியத்தை முறித்தற்காக 'கப்பாரா' தென்றகுற்றப்பரிகாரம்
கொடுத்தால் போதுமானதாகும். இக்கருத்தை இஸ்லாமிய அறிஞர்கள் யாரும் கூறவில்லை.
- மாதவிடாய் ஏற்பட்ட நிலையில் இருக்கும் பெண்ணையோ, மனiவியுடன் சேர்ந்த பின்
சுத்தமான காலத்தில் இருக்கும் பெண்ணையோ தலாக் சொன்னால் அது நிறைவேறாது .
- ஒரே தடவையில் மூன்று தடவை தலாக் சொன்னால் ஒன்றாகவே கணக்கெடுக்கப்படும்.
- மாதவிடாய் ஏற்பட்ட பெண் கஃபதுல்லாவை தவாப் செய்ய முடியும். அதற்காக
தென்றகுற்றப்பரிகாரம் தேவையில்லை.
- வரி எடுப்பது ஹலாலாகும்.
- வியாபரிகளிடமடுத்து வரி அறவிடப்பட்டால் அது ஸகாத்தாக நிறைவேறும்.
அது ஸகாத் என்ற பெயரிலோ, அமைப்பிலோ இருக்க
வேண்டிய அவசியம் கிடையாது.
- நீர்த்தலானவற்றில் எலி போன்றது மரணித்தால் அவை நஜீஸாகமாட்டாது.
- தொழுகையை வேண்டுமென்று விட்டால் கலாசெய்யத் தேவையில்லை
- குளிப்பு கடமையானவர் தயம்மம் செய்து கொண்டு மேலதிக இரவு வணக்கத்தை
செய்யலாம். பஜ்ரின் போது குளிக்கும் வரை பிற்படுத்தத் தேவையில்லை.
- பிரயாணத்தில் தலைவருக்கு ஒருவர் இரவில் உறங்குவதற்கு படுக்கையை
விரித்துக் கொடுத்த பின் அவர் குளிப்புக் கடமையானவராகிவிட்டார். விடியட் காலையில் குளித்தால்
ஆசிரியர் மாணவர்களுடன் தவராக நடந்து கொண்டார் என சந்தேகப்படுவார். இதற்கான பதில் என்ன
எனக்கேட்ட போது குளிக்க முடியுமாக இருந்தாலும் தயம்மம் செய்தால் போதும் எனத் தீர்ப்பு
வழங்கினார்.
- வக்ப் செய்தவரின் நிபந்தனை கருத்தில் கொள்ளப்பட வேண்டுமா எனக்கேட்ட
போது அறவே கவணிக்கத் தேவையில்லை என தீர்ப்பளித்ததோடு ஷாபிய்யாக்களுக்கு வக்ப் செய்ததை
ஹனபிகளுக்கும், புகஹாக்களுக்கு வக்ப்செய்ததை
சூபிய்யாக்களுக்கும் அதற்கு மாற்றமாகவும் கொடுக்கலாம் எனக்கூறியதோடு மத்ரஸாவுக்கு, வக்ப்செய்யப்பட்டதை
படை வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் கொடுக்க முடியும் எனவும் கூறயதோடு அவரும் அவ்வாறே
நடந்தும் காட்டினார்.
- எஜமானின் மூலம் பிள்ளை பெற்றெடுத்த அடிமைகளை விற்கலாமா எனக்கேட்கப்பட்ட
போது ஆம் என்று திர்ப்பளித்தார்.
(உஸுல்) அடிப்படைகள்
அல்லாஹு தஆலா நல்லது கெட்டது அடிப்படையியே நடந்துகொள்வான் என்ற முஃதஸிளாக்களுடைய
கோட்பாட்டை கொண்டவராக இருந்ததோடு அதற்காக வாதாடியதோடு நூல்களையும் எழுதினார்
(அகீதா) கொள்கை கோட்பாடு
- அல்லாஹு தஆலாவில்
புதிதுபுதிதாக மாற்றங்கள் ஏற்படலாம்.
- அல்லாஹு தஆலா பலதால்
இணைக்கப்பட்டவன், ஒரு முழுமையானது பகுதிகள்
அலவில் தேவை காண்பது போல் தேவை காணக்கூடியவன்.
- குர்ஆன் அல்லஹு தஆலாவில்
புதிதாக உண்டாக்கப்பட்டது.
- இவ்வுலகம் வகையில்
பூர்வீகமானது அல்லாஹு தஆலாவுடன் படைப்புகள் இருந்துகொண்டே இருந்தன.
- அல்லஹு தஆலாவுக்கு
உருவம் திசை, அசைவு இருக்கிறது.
அவரின் சில நூற்களில் அல்லஹு தஆலா அர்ஷின் அலவைக் கொண்டவன் அதைவிட பெரியவனுமல்ல சிறியவனுமல்ல
எனக் கூறியுள்ளார்.
- அல்லாஹு தஆலாவின்
அறிவு முடிவடையாத விடயங்களுடன் தொடர்புபடாது.
- நபிமார்கள் பாவங்களை
விட்டும் பாதுகாக்கப்பட்டவர்களல்லர்.
- நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்களுக்கு மதிப்பு கிடையாது அவர்களைக்கொண்டு வஸீலா தேடமுடியாது.
- நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்களின் கப்ரை தரிசிக்கச் செல்வதற்காக பிரயாணம் மேற்கொள்வது பாவமாகும். அப்பிரயாணத்தில்
தொழுகை சுருக்கித் தொழக்கூடாது.
- நரகவாசிகள் வேதனை
செய்யபடுவது முடிந்துவிடும் நிரந்தரமானதல்ல.
- தவ்ராத்தும் இன்ஜீலும்
மாற்றப்படாமல் இருப்பதோடு கியாமத் நாள் வரை மாற்றப்படாமல் இருக்கும். அதில் திரிவுபடுத்துதல்
கருத்துச்;சொல்வதிலே எற்பட்டுள்ளது.
இவை அனைத்தையும் அல்
ஹாபில் இராகி அவர்களின் ஆசிரியர் அல்ஹாபில் அபூ ஸயீத் அல் அலாயி (றஹ்) அவர்கள் கூறயிருப்பதை
பிரபல வரலாற்றாசிரியர் அல்ஹாபில் முஹத்திஸ் ஷம்ஷுத்தின் இப்னு தூலூன் அவர்கள் தஹாயிருல்கஸ்ர்
பக்கம் 69ல் கூறியிருக்கிறார்கள்.
தொடரும்
No comments:
Post a Comment