குற்றச்சாட்டு - 02 ஆஹ் என்று திக்ர் செய்வது நபிகளாரின் ஹதீஸூக்கு
மாற்றமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா றழியல்லாஹு
அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். அல்லாஹு தஆலா தும்முவதை விரும்புகிறான். கொட்டாவி
விடுவதை வெறுக்கிறான். எனவே உங்களில் ஒருவர் கொட்டாவி வரும் போது ஆஹ், ஆஹ் என்று சொல்லவேண்டாம். ஏனெனில் ஷைத்தான் அதைப்பார்த்து
சிரிக்கிறான். (ஆதாரம் திர்மிதி, இப்னு ஹூஸைமா) எனவே
ஆஹ் என்பது அல்லாஹ்வின் திருநாமமாக இருக்குமானால் ஷைத்தான் அதைப்பார்த்து சிரிக்கவேண்டியதில்லை.
பதில் - எண்ணங்களைப்
பொறுத்தே அமல்களுக்கு கூலி வழங்கப்படுவதோடு, சரியானதா பிழையானதா என்றும் முடிவெடுக்கப்படுகிறது.
கவலை, அடைய வேண்டுமறை ஆசை மேலிடுவதால்.
பயத்தால் நெஞ்சிலிருந்து வெளிப்படும் ஆஹ் என்ற திக்ரும் ஷைத்தானின் தூண்டுதலால் ,
சோம்பேரித்தனத்தால் அல்லாஹ்
வெறுக்கும் கொட்டாவியால் வெளிப்படும் ஆஹ் என்பதும் வித்தியாசமானதாகும். அடைய வேண்டும்
என்ற ஆவல், பயத்தின் காரணமாக
ஆஹ் என்று சொல்ல முடியும் என்பதற்கான ஆதாரங்களை நாம் ஏற்கனவே தெளிவாக கூறியிருக்கிறோம்.
எனவே ஷைத்தானின் தூண்டுதலால், சோம்பேரித்தனத்தால்
கொட்டாவியால் வெளிப்படும் ஆஹ் என்ற வார்த்தையை இதனுடன் ஒப்பாக்க முடியாது என்பதை விளங்கிக்கொள்ள
வேண்டும்.
குற்றச்சாட்டு - 03 ஆஹ் என்று திக்ர் செய்வது மார்க்க சட்டவல்லுனர்களின்
தீர்ப்புக்கு முரணானதாகும். அதாவது அனுங்குவதன் மூலம் இரண்டு எழுத்துக்கள் வெளிப்பட்டால்
தொழுகை பாத்திலாகிவிடும் என்;பது ஷாபிஈ மத்ஹப்
சட்டமாகும். ஆஹ், அஹ் என்று சொல்வது
அதன் வகைகளில் உள்ளதாகும். அனுங்குவது அல்லாஹ்வின் திரு நாமமாக இருக்குமானால் தொழுகை
பாத்திலாகமாட்டாது என்பது அறிந்த விடயமாகும்.
பதில்: இரண்டாவது
குற்றச்சாட்டின் பதிலில் கூறியது போல் ஆஹ் என்று சொல்வதற்குறிய சட்டம் நிய்யத்தைப்
பொருத்தே அமைகிறது. மேலும் அனுங்குவது தன்னை மிகைத்து ஏற்படுமானால் அதை மன்னிக்கப்படுமென்றே
மார்க்க சட்ட வல்லுனர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள். ஷாபிஈ மத்ஹப் சட்டமும் இதுவாகும்.
நாம் ஏற்கனவே ஆஹ் என்று சொல்வது கவலை, அடைய வேண்டும் என்ற ஆவல், பயம் மிகைப்பதனாலையே
ஏற்படுகிறது என்பதை தெளிவுபடுத்தியுள்ளோம்.
குற்றச்சாட்டு - 4 ஷாதுலிய்யா தரீக்காவின் எல்லா பிரிவுகளிலும் இது
கிடையாது. பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா பிரிவில் மாத்திரம் தான் இது காணப்படுகிறது. இதனால் இதற்கும் ஷாதுலிய்யா தரீக்காவுக்கும் எவ்வித சம்பந்தமும்
கிடையாது.
பதில்: ஷாதுலிய்யா தரீக்காவின் அடிப்படை விதிகளுக்கு மாறுபடாமல்
மக்களின் இயல்பு நிலையை கவனித்து அவர்களுக்கு ஏற்றவாறு மார்க்கத்துக்கு முறன்படாமல்
திக்ர் அமைப்புகளை உருவாக்குவதில் எவ்வித பிழையும் கிடையாது. இது ஷாதுலிய்யா தரீக்காவில்
மாத்திரம் அல்லாமல் அனைத்து தரீக்காக்களிலும் காணப்படுகிறது. திக்ர் செய்யும் போது
அதன் உயர்ந்த நோக்கமாகிய மன நிம்மதியை அடைவதே இலக்காகும். அதை அடைவதற்கான அடிப்படை
முறைகளாகிய சப்தமிடுதல், கஸீதாக்களை கேட்டல்,
ஆடி அசைதல் போன்றவை மார்க்க
வரையரைகளுக்கு உற்பட்டு இருக்குமாயின் அதிலே எவ்வித தவறும் கிடையாது. ஒரு தரீக்காவின்
கிளைகளில் இவ்வாறான மாற்றங்கள் இயல்பானதாகும். ஒரு சில கிளைகளில் இல்லாமல் இருப்பதால்
அது ஷாதுலிய்யா தரீக்கத்துக்கு அப்பாற்பட்டது என்று சொல்ல முடியாது. அடிப்படை விதிமுறைகளுக்கு
உட்பட்டு இருந்து தோற்றம் வித்தியாசமாக இருந்தால் அதில் எவ்வித குற்றமும் கிடையாது.
சில அறிஞர்கள் அதை மறுத்திருப்பது அவர்களின் அறிவிக்கு எட்டியதன் அடிப்படையிலாகும்.
ஷாதுலிய்யா தரீகாவின் கலீபாக்களான அபுல் அப்பாஸ் அல் முர்ஸி, இப்னு அதாயில்லாஹ் அல் இஸ்கன்தரி, அஹ்மத் ஸரூக் அல் பாஸி போன்ற ஷைகுமார்கள் ஆகும்
என்று கூறியதையும் அவர்கள் அமுல்படுத்தியதையும் நாம் ஏற்கனவே கூறியிருக்கிறோம். இதற்கும்
ஷாதுலிய்யா தரீக்காவுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை எனக் கூறுவது மிகப் பிழையான கருத்தாகும்.
يا رب لك الحمد لجلال وجهك ولعظيم سلطانك ومجدك ، لا أحصي ثناء عليك أنت
كما أثنيت على نفسك، أسئلك يارب أن تجعل هذه الرسالة خالصة لوجهك الكريم ، ومن أسباب
الفوز والرضا لك ولرسولك الحبيب العظيم، أن تريني وجهك ووجه حبيبك في القيامة، وأن
ترزقني العافية في الدارين والمعافاة والسلامة، ما شاء الله لا قوة الا بالله، وسلام
على المرسلين، والحمد لله رب العالمين. وصلى الله على سيدنا محمد النبي الأمي وعلى
آله وصحبه أجمعين ، سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب
العالمين . وكان الفراغ من تأليف هذه الرسالة في يوم السبت التاسع عشر من صفر سنة
1436هـ
بالجامعة الفاسية الشاذلية بسريلانكا.وقد تم بحمد الله وعونه وحسن توفيقه ،
وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم
முற்றும்
No comments:
Post a Comment