ஷேஹ் ஹஸன் பின் உஸ்மானுல்
மக்தூமி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தர்கா நிறுவப்பட்ட சரிதை -02
வலியுல்லாஹ் ஹஸன் பின் உஸ்மானுல்
மக்தூமி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் வஃபாதிற்கு இரண்டு நாட்களுக்கு முன் தனது மருமகனார்
முஹம்மத் லெவ்வே பின் ஹஸன் மீரா லெவ்வே அவர்களுக்கு கீழ் கானும் விடயங்கள் உட்பட ஒரு
வஸிய்யத்தை செய்ததாகவும் ஷேஹ் மாப்பிள்ளை ஆலிம் சாஹிப் தன்னுடைய குறிப்புகளில் பதிவு
செய்துள்ளார்.
அதாவது, தான் இறையடி சேரும்
பட்சத்தில், தனது அடக்கஸ்தலத்தை
தங்குமிடத்தை மக்கள் வந்து ஒன்றுகூடும் இடமாக அல்லாஹ் ஆக்கும் பொருட்டு, மக்கள் ஸியாரம் செய்வதற்கு
வசதியான ஒரு இடத்தில் அடக்கும் படியும், அப்போது அல்லாஹ்வின்
நல்லடியார்கள் அவனிடம் தமது தேவைகளை கேட்டுப் பெற்றுக் கொள்ளும் ஒரு இடமாகவும், தங்கள் பாவங்களை பொறுத்தருளுமாறு
அல்லாஹ்விடம் மன்றாட மக்கள் ஒன்று கூடும் ஒரு இடமாகவும் தனது அடக்கஸ்தலம் திகழும் என்றும்
அன்னார் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ஏழைகளுக்கும், தேவையுடையவர்களுக்கும், யாத்திரிகர்களுக்கும்
புகழிடமாகவும் அது இருக்கும் என்றும் வலியுல்லாஹ் ஹஸன் பின் உஸ்மானுல் மக்தூமி ரழியல்லாஹு
அன்ஹு அவர்கள் வஸிய்யத் செய்தார்கள்.
அத்துடன் தன்னை பொதுவான கப்ருஸ்தானில்
அடக்கம் செய்ய வேண்டாம் என்றும் வலியுல்லாஹ்
ஹஸன் பின் உஸ்மானுல் மக்தூமி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வலியுறுத்தினார்கள்.
ஏனெனில், தன்னை ஸியாரத் செய்ய
வரும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அம்மக்கள் ஏனைய நல்லடியார்களுடைய
கப்ருஸ்தான்களை மிதித்து அவற்றிற்கு சேதத்தை ஏற்படுத்தி விடுவார்களோ என வலியுல்லாஹ் ஹஸன் பின் உஸ்மானுல் மக்தூமி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்
கவலைப்பட்டார்கள்.
முஹம்மத் லெவ்வே பின் ஹஸன்
மீரா லெவ்வே அவர்களும் தனது மாமா வலியுல்லாஹ்
ஹஸன் பின் உஸ்மானுல் மக்தூமி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவுரைப் பிரகாரம்
வலியுல்லாஹ் ஹஸன் பின் உஸ்மானுல் மக்தூமி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மரணித்த ஹிஜ்ரி
1283 முஹர்ரம் மாதம் 07ம் பிறை அன்னாருடைய
ஜனாஸாவை முஹம்மத் லெவ்வையின் வீட்டின் முற்றத்தில்
ஒரு இடத்தில் அடக்கம் செய்தார்.
அதன் பின் வலியுல்லாஹ் ஹஸன்
பின் உஸ்மானுல் மக்தூமி ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் மருமகன் முஹம்மத் லெவ்வே பின்
ஹஸன் மீரா லெவ்வேயின் கனவிலும் மீரான் நஸ்ளு முஹம்மது, மீரா நஸ்ளு ஃபரீது, மற்றும் இஸ்மாயில்
நஸ்ளு முனஜ்ஜித் என்கின்ற அன்னாருடைய உறவினர்கள் மூன்று பேர்களின் கனவிலும் தோன்றி
தன்னுடைய கல்லறைக்கு மேலாக ஒரு தர்காவை எழுப்ப அனுமதி அளித்தார்கள்.
இந்த வகையில் தர்கா அமைக்கப்பட்டதோடு
முஹம்மத் லெவ்வே அவர்கள் வலியுல்லாஹ் ஹஸன் பின் உஸ்மானுல் மக்தூமி ரழியல்லாஹு அன்ஹு
அவர்களின் தர்காவின் முதன் முதலாவது நிர்வாகியாகவும் நம்பிக்கையாளராகவும் ஆனார்.
சில காலங்களுக்குப் பின் முஹம்மத்
லெவ்வே காலம் சென்றதோடு வலியுல்லாஹ் ஹஸன் பின் உஸ்மானுல் மக்தூமி ரழியல்லாஹு அன்ஹு
அவர்களும் அன்னாருடைய மருமகனார் முஹம்மத் லெவ்வே பின் ஹஸன் மீராலெவ்வே அவர்களும் நிர்ணயித்து
விட்டுச் சென்றிருந்த சம்பிரதாயங்கள் அடிப்படையில் அப்பரம்பரையின் ஆண் வாரிசுகள் தர்கா
தொடர்பான தலைமைத்தவ மற்றும் நிர்வாகக் கடமைகளை செவ்வனே செய்து வந்தனர்.
1956 ஆண்டு மஸ்ஜிதுகள் மற்றும் தர்காக்கள் தொடர்பாக இயற்றப்பட்ட
வக்ஃபு சட்டத்தின் பிறகாரம் ஹஸன் பின் உஸ்மானுல்
மக்தூமி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தர்கா முறையாக பதிவு செய்யப்பட்டு 1972 வரை ஹஸன் பின் உஸ்மானுல் மக்தூமி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின்
பரம்பரையின் ஆண் வாரிசுக்கள் தொடர்ச்சியாக மேற்படி கடமையை சிரமேற்கொண்டு நிறைவேற்றி
வந்தனர்.
அதன் பின் 1990 வரை வலியுல்லாஹ் ஹஸன் பின் உஸ்மானுல் மக்தூமி ரழியல்லாஹு அன்ஹு தர்கா
தொடர்பான பாரம்பரிய வழக்கத்தைப் பொருட்படுத்தாமல் வக்ஃபு சபை அதன் அங்கத்தவர்களின்
முடிவுகளின் படி வலியுல்லாஹ் ஹஸன் பின் உஸ்மானுல் மக்தூமி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின்
பரம்பரையைச் சேராத, பல்வேறுபட்டவர்களை
நம்பிக்கையாளர் சபைக்கு நியமித்தது.
இது தொடர்பாக முறையீடு செய்யப்பட்டடு
விசாரனை ஆரம்பிக்கப்பட்டதோடு, 1991 ஆண்டு அவ்விசாரனை தொடர்பில் எடுக்கப்பட்ட றுடீஃ1226ஃ90 எண் கொண்ட தீர்ப்பின்
பிரகாரமும் வலியுல்லாஹ் ஹஸன் பின் உஸ்மானுல் மக்தூமி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தர்கா
நிர்வாகம் தொடர்பான பாரம்பரியத்தின் அடிப்படையிலும், தரீக்கா சங்கத்தின்
மாற்றமான கோரிக்கைகள் அனைத்தம் நிராகரிக்கப்பட்டு, முஹம்மத் லெவ்வே பின் ஹஸன் மீரா லெவ்வே அவர்களின்
பரம்பரையின் ஆண் வாரிசுகளுக்கே இந்த கடமையை மேற்கொள்ளும் உரிமை மீண்டும் வழங்கப்பட்டமையும,; தொடர்ந்து பதவிக்கு
வந்த வக்ஃபு சபைகள் அனைத்தும் இந்த முடிவின் படியே செயல் பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
أَفَاضَ
اللّٰهُ تَعَالَى عَلَيْهِ فَوَاضِلَ الرَّحْمَة
وَأَسْكَنَهُ
مَعَ أَحْبَابِهِ فَسِيْحَ دَارِ النِّعْمَة
اَلّٰلهُمَّ
ارْضَ عَنْهُ وَارْحَمْهُ وَبَارِكْ عَلَيْهِ
வலியுல்லாஹ் ஹஸன் பின் உஸ்மானுல்
மக்தூமி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மீதும் அவர்களுடைய இறுதித் தங்குமிடத்தின் மீதும்
அல்லாஹ் தன்னுடைய அருளைப் பொழிவானாக. யா அல்லாஹ் உன்னுடைய பொருத்தம் காரணமாக உன்னுடைய
கருணையையும் தயாளத்தையும் அன்னார் மீது வருஷிப்பாயாக! ஆமீன்.
('மனாகிப் வலியுல்லாஹ் ஹஸன் பின் உஸ்மானுல் மக்தூமி ரழியல்லாஹு
அன்ஹு') என்ற தலைப்பில் கீலக்கறையைச்
சேர்ந்த இறை நேசர் மாப்பில்லை ஆலிம் சாஹிப் தெகுத்த குறிப்புகளில் இருந்து எடுக்கப்பட்ட
ஒரு துஆப் பிரார்த்தனை)
முற்றும்...
No comments:
Post a Comment