இப்னு தைமிய்யாவைப்
பற்றி மன்சூர் (நளீமி) படிக்க வேண்டிய பாடங்கள்
இப்னு தைமிய்யாவும்
ஹதீஸும்
இப்னு தைமிய்யாவை கண் மூடித்தனமாக
பின்பற்றக்கூடியவர்கள் கூறுவது போல் ஹதீஸ் துரையில் இமாமாக இருந்தாரா அல்லது மற்றவர்கள்
கூறுவது போன்று தீவிர போக்குடையவராகவும் நிதானமற்றவராகவும் மனோ இச்சையை பின்பற்றுபவராகவும்
இருந்தாரா?
இதற்கான விடையை இவர்களிடமோ
அவர்களிடமோ எதிர்பார்ப்பதை விட அவருடைய நூற்களில்
எவ்வாரு ஹதீஸ் துறையில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை பார்ப்போம். அவருடைய நூல்களிலிருந்து
சில உதாரணங்களை தருகிறோம்.
தகுதியான ஆதாரமில்லாமல்
ஹதீஸ்களை இட்டுக்கட்டப்பட்டது எனக்கூறுதல்
மஜ்மூவுல் பதாவா (13:354)
இது முதவாதிர் எனக்கூறப்பட்ட
ஹதீஸாகும் இந்த ஹதீஸை இமாம்களான இப்னு ஹிப்பான், இப்னு ஹுஸைமா, தாரகுத்னி, பைஹகி, ஹாகிம், நவவி, போன்றவர்கள் ஸஹீஹானது எனக்கூறியிருக்கிறார்கள்.
ஷர்குல் முஹத்தப் (3:344)
2- 'அல்லாஹு தஆலா முதலாவது படைத்தது புத்தியாகும்' இந்த ஹதிஸைப்பற்றிக்
கூறும் போது ஹதீஸ்கலை அறிஞர்களால் இட்டுக்கட்டப்பட்டது என ஏகோபித்துக் கூறப்பட்ட ஹதீஸாகும்
எனக் கூறியுள்ளார். மஜ்மூவுல் பதாவா (18:122)
இந்த ஹதீஸ் பலவீனமானதே தவிர
இட்டுக்கட்டப்பட்டதல்ல என்றே ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். கஷ்புல் கபா
(1:275)
3- தஸ்பீஹ் தொழுகை சம்பந்தமான ஹதீஸைப் பற்றிக் கூறும் போது இரு
கருத்துக்களில் மிகச்சரியான கருத்தின் பிரகாரம் பொய்யான ஹதீஸாகும். (மின்ஹாஜுஸ் ஸுன்னா
(7:343)
இது 10 ஸஹாபாக்கள் வாயிலாகவும்
இன்னும் பல தாபியீன்கள் வாயிலாகவும் அறிவிக்கப்பட்ட ஹதீஸாகும். இது ஹஸன் என்ற தரத்தை
சார்ந்த ஹதீஸாகும் என இப்னு ஹஜர் அல்அஸ்கலானி (றஹ்) கூறியுள்ளார்கள்.
(அஜ்விபதுல் ஹாபிலி இப்னி ஹஜர் அல்அஸ்கலானி அலா
அஹாதீஸில் மஸாபீஹ);
இந்த ஹதீஸை இமாம்களான இப்னு
மன்தஹ,; அல்ஆஜுர்ரி, இப்னு ஸம்ஆன,; ஹதீப் அல் பக்தாதி, அபூ மூஸா அல்மதீனி, அபுல் ஹஸன் இப்னுல்
பழ்ல், முன்திரி, இப்னுஸ்ஸலாஹ், நவவி போன்ற அறிஞர்களும்
இன்னும் பலரும் ஸஹீஹானது எனக் கூறியுள்ளார்கள்.
அவ்னுல் மஃபூத் (4:1244)
ஹதீஸின் வாசகத்தை
கூறாமலிருத்தல்
அதிகமான இடங்களில் இப்னுதைமிய்யா
ஹதீஸின் வாசகத்தை கூறாமலிருப்பதோடு இங்கே ஹதீஸின் கருத்துத்தான் கூறப்பட்டுள்ளது என்றும்
கூறமாட்டார். இன்னும் சில இடங்களில் கருத்து மாறக்கூடிய வகையிலும் இரு ஹதீஸ்களை இணைத்து
ஒன்றாகவும் கூறியுள்ளதோடு ஹதீஸில் இல்லாத வசனங்களையும் அதிகரித்து கூறியிருப்பார்.
அதற்கான சில உதாரணங்களை தருகிறோம்:
1- இப்னுதைமிய்யா 'இஸ்திகாமா' (1:213) என்ற நூலில் பின்வரும் ஹதீஸை கூறியிருக்கிறார்:
عن جويرية أن النبي صلى الله عليه وسلم خرج من عندها بكرة
حين صلى الصبح وهي في مسجدها، ثم رجع (اليها) بعد أن أضحى وهي جالسة، فوجدها تسبح بحصى
، فقال ما زلت (منذ اليوم) على الحال التي فارقتك عليها، قالت نعم، قال النبي صلى الله
عليه وسلم: لقد قلت بعدك أربع كلمات ثلاث مرات لو وزنت بما قلت (قلتيهن) منذ اليوم
لوزنتهن(هم) سبحان الله وبحمده عدد خلقه ، و (سبحان الله) رضا نفسه و(سبحان الله) زنة
عرشه و(سبحان الله)مداد كلماته
இதிலே சில வாசகங்களை விட்டிருப்பதோடு
(நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளியேறிய, திரும்பி வந்த நேரத்தையும் ஜுவைரியா நாயகி இருந்த
இடத்தையும் கூறாமலும்) திக்ரின் வாசகத்தையும்
மாற்றியுமுள்ளார். விட்டவைகள் கோடிடப்பட்டும் மேலதிகமாக சேர்த்தவைகள் அடைப்புக்குறியிட்டும்
காட்டியுள்ளோம.;
2- பாங்கு துஆ பற்றிக்கூறும் ஹதீஸ்
புகாரியுடைய அறிவிப்பில் இடம்பெறாத
'வத்தரஜதர்ரபீஅத' என்பதையும் 'இன்னக லா துஹ்லிபுல்
மீஆத்' என்பதையும் மேலதிகமாக
சேர்த்து இடம்பெற்றதாக கூறியுள்ளார்.
عن جابر
بن عبد الله أن رسول الله صلى الله عليه وسلم قال من قال حين يسمع النداء اللهم رب
هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه
مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد حلت له شفاعتي يوم القيامة
இது பிரசுரம் என்ற காரணத்தினால்
இங்கு நாம் ஒரு சில உதாரணங்களை மாத்திரமே கூறியுள்ளோம.; இவைகள் மட்டும்தான்
குறைசொல்வதற்கு இருக்கிறது என நினைத்துவிட வேண்டாம்.
தொடரும்
No comments:
Post a Comment