ஆஹ், அஹ் என்று திக்ர் செய்யலாமா? தொடர் - 07
ஹதீஸ் -02
02. உக்பத் இப்னு ஆமிர்
றழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் .
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துல்பிஜாதைன் றழியல்லாஹு அன்ஹு அவர்களை
பார்த்து இவர் மிகவும் ஆஹ், ஆஹ் என்று சொல்லக்கூடியவர்
எனச் சொன்னார்கள். ஏனெனில் அவர் குர்ஆன் ஓதி அதிகம் அல்லாஹு தஆலாவை திக்ரு செய்யக்கூடியவராக
இருந்ததோடு துஆ கேட்கும் போதும் சப்தமிடுவார்.
முஸ்னத் அஹ்மத் (17453)
இதற்கு அடிக்குறிப்பு எழுதிய
அறிஞர்கள் கூறியிருப்பதாவது :
இது ஹஸனுன் லிகைரிஹி
தரத்தைச் சார்ந்த ஆதாரபூர்வமான ஹதீஸாகும். இந்த அறிவிப்பத் தொடர் பலவீனமானதாகும். இப்னு
லஹீஆ மனன சக்தி குறைந்தவர். இந்த அறிவிப்புத் தொடரின் ஏனைய அறிவிப்பாளர்கள் அனைவரும்
நம்பகமானவர்கள். இதில் இடம் பெரும் மூஸா என்பவர் தாவூத் அல்லப்பியுவின் மகனாகும். ஹாரிஸ்
இப்னு யஸீத் என்பவர் ஹழ்ரமூத்தைச் சேரந்;த அபூ அப்தில் கரீம் அல் மிஸ்ரியாகும்.
இதே ஹதீஸை இமாம் தபரி
அவர்கள் அவர்களுடைய தப்ஸீரிலே (17418) உஸ்மான் இப்னு ஸாலிஹ் அஸ்;ஸஹ்மி வாயிலாகவும்
இமாம் தப்ரானி (17/813) கபீரிலும் இமாம் பைஹகி
(580) ஷுஅபுல் ஈமானிலும் ஸஈத் இப்னு
அபூ மர்யம் வாயிலாகவும் அறிவித்துள்ளார்கள். இவ்விருவரும் இப்னு லஹீஆவின் வலியாகவே
அறிவித்துள்ளார்கள்.
இதற்கு மற்றுமொறு
சான்று இப்னுல் அத்ராஹ் றழியல்லாஹு அன்ஹு வழியாக இந்த முஸ்னத் அஹ்மதில் (18971)
பின்னர் கூறப்பட இருக்கிறது.
அதிலே சம்பவம் ஒன்று கூறப்பட்டுள்ளதோடு 'இன்னஹூ அவ்வாப்' அவர் மிகவும் அல்லாஹத{
ஆலாவின் பக்கம் மீளக்கூடியவர்
எனக்கூறப்பட்டுள்ளது. அதன் அறிவிப்புத் தொடர் இடையில் துண்டிக்கப்பட்தாக இருக்கின்றது.
இப்னு அப்பாஸ் றழியல்லாஹு
அன்ஹுமா அவர்கள் மூலமாக மற்றுமொறு சான்று தப்ரானியிலும் (2/11295) அபூ நுஅய்ம் ஹில்யாவிலும் (1/122); கூறப்பட்டுள்ளது. இதன் அறிவிப்புத் தொடரும் பலவீனமானதாகும்.
மூன்றாவது ஒரு சான்று
முஹம்மத் இப்னு இப்றாஹீம் இப்னுல் ஹாரிஸ் அத்தைய்மி வாயிலாக முர்ஸலாக காணப்படுகிறது.
இதை இப்னுல் அஸீர் றஹ்மதுல்லாஹி அலைஹி உஸ்துல் ஙாபா (3/228)ல் இப்னு இஸ்ஹாக் என்பவரைத் தொட்டும் அறிவித்துள்ளார்கள்.
இப்னு இஸ்ஹாக் ஹஸனான ஹதீஸை அறிவிக்கும் தரத்தை சார்ந்தவர். முஹம்மத் இப்னு இப்றாஹீம்
நம்பிக்கையானவரும், புகாரி, முஸ்லிமுடைய அறிவிப்பாளர்களில் ஒருவருமாகும்.
ஹாபில் இப்னு ஹஜர்
றஹ்மதுல்லாஹி அலைஹி அல் மதாலிபுல் ஆலியாவில் (29311) ம் இலக்க ஹதீஸாக கூறியிருப்பதாவது:
இப்னுல் அத்ராஹ் றழியல்லாஹு
அன்ஹு அறிவிக்கிறார்கள்.
ஒரு நாள் இரவு நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களுக்கு காவளாலியாக இருக்கும்
போது நின்று கொண்டிருந்த எனது கையைப்பிடித்து ஊண்டி நின்றார்கள். பின்னர் பள்ளிவாயலுக்குள்ளே
சப்தத்தை உயர்த்தி தொழுது கொண்டிருக்கும் ஒரு மனிதருக்கு அருகாமையில் போன போது அல்லாஹ்வின்
தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இவர் ஒரு முகஸ்தூதிக்காரராக
இருக்கட்டும் என்றார்கள். அதற்கு நான் அவர் தொழுது பிரார்த்தித்துக் கொண்டு இருக்கிறார்கள்
எனக் கூறிய போது எனது கையை உதரி விட்டு மிகைப்பது கொண்டோ அல்லது கஷ்டப்படுவது கொண்டோ
இந்த விடயத்தை அடைய முடியாது என்றார்கள். பின்னர் ஒரு நாள் சப்தத்தை உயர்த்தி தொழுது
கொண்டிருக்கும் மனிதனுக்கு அருகாமையில் சென்ற போது அல்லாஹ்வின் தூரே இவர் முகஸ்தூதிக்காரராக
இருக்கட்டும் என்று நான் சொன்ன போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இல்லை. அவர் மிகவும் 'ஆஹ் ஆஹ்' என்று சொல்லக்கூடியவர் என்றார்கள். அந்த மனிதரைப்பார்த்த
போது அவர்கள் அப்துல்லாஹ் துல்பிஜாதைன் றழியல்லாஹு அன்ஹு அவர்களாகவும் மற்றவர் நாட்டுப்புற
அரபியாகவும் இருந்தார்.
இது ஹஸனான ஹதீஸாகும்
என இப்னு ஹஜர் இமாம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
(2/372)
அல் மதாலிபுல் ஆலியாவுக்கு
அடிக்குறிப்பு எழுதிய அறிஞர்கள் கூறியிருப்பதாவது :
அப்துல்லாஹ் துல் பிஜாதைன் இப்னு அப்து நஹ்ம் இப்னு
அபீப் அல் மிஸ்ரி என்பது அவர்களின் முழுப்பெயராகும். இவர்கள் அனாதையாக அவர்களின் தகப்பனின்
சகோதரர்களில் ஒருவரிடம் வளர்ந்து வந்தார்கள். அவர்கள் அதிகமாக ஆஹ் என்று சொல்பவர்களாகவும்
இருந்தார்கள். தபூக் யுத்தத்தின் போது வபாத்தான பின் அவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்களே அடக்கம் செய்தார்கள்.
அல் இஸ்தீஆப் (2/292), இஸாபா (2/338)
இந்த ஹதீஸை புஸீரி
இமாம் இத்ஹாப் என்ற நூலில் கூறியுள்ளார்கள். இமாம் ஹைஸமி அவர்கள் மஜ்மஉஸ் ஸவாயித்
(9/372)ல் அஹ்மத் இமாம் அவர்கள் அறிவித்திருப்பதாக கூறிவிட்டு
இதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் ஸஹீஹூடைய அறிவிப்பாளர்கள் எனக்கூறியுள்ளார்கள்.
இதை அஹ்மத் அவர்கள்
முஸ்னதில் (4/337)ல் கூறியிருக்கிறார்கள். அதிலே 'மற்றவர் ஒரு நாட்டுப்புர அரபியாகும்' என்ற வாசகம் இடம்பெறவில்லை.
ஹதீஸின் தரம்
இந்த அறிவிப்புத் தொடரின் அடிப்படையில் இந்த ஹதீஸ்
ஹஸனானதாகும். இதன் அறிவிப்பாளர்களில் ஹிஷாம் இப்னு ஸஹ்தைத் தவிர மற்ற அனைவரும் புகாரி
முஸ்லிமுடைய அறிவிப்பாளர்களாகும். இவர் மிக உண்மையானவராக இருப்பினும் ஊகங்கள் உள்ளவர்.
எனினும் ஸைத் இப்னு அஸ்லமைத் தொட்டும் அpவிப்பளர்களில் மிக இஸ்திரமானவராகும். இவர் இந்த ஹதீஸின் அவரின் ஆசிரியராகும்.
இங்கே இந்த ஹதீஸை
இப்னு ஹஜர் இமாம் ஹஸனானது எக்கூறியிருப்பதோடு அல்பானியும் ஹஸன் என்று கூறியுள்ளார்.
இதை விட மேலாக பூஸிரி இமாமவர்கள் இதன் அறிவிப்புத்தொடர் முஸ்லிம் இமாமின் நிபந்தனைப்
படி உள்ளது என்று கூறியுள்ளார்கள்.
அல் மதாலிபுல் ஆலியா (2/372,373)
ஹதீஸ் -03
03. அபூ தர் றழியல்லாஹு
அன்ஹு அறிவிக்கிறார்கள்
ஒரு மனிதர் கஃபதுள்ளாவை
தவாப் செய்து கொண்டு இருந்தார். அவர் துஆ கேற்கும் போது அவ்வஹ் அவ்வஹ் என்று சொல்லிக்
கொண்டு இருந்தார.; ஒரு நாள் நான் இரவு
வெளியே சென்ற போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த மனிதரை விளக்கு வெளிச்சத்தில் அடக்கம்
செய்து கொண்டிருந்தார்கள்.
அபூ தர் றழியல்லாஹு
அன்ஹு அவர்களை தொட்டும் அறிவிப்பவர் நிலை அறியப்படாததால் இது பலவீனமான ஹதீஸாகும். இதை
பூஸீரி இமாமவர்கள் இத்காபுல் மகராவில் கூறிவிட்டு அபூ யஃலா இதை அறிவித்து இருப்பதாக
கூறியுள்ளதோடு இதன் அறிவி;ப்பாளர்களில் ஒருவர்
அறியப்படாமல் இருப்பதால் இது பலவீனமான ஹதீஸாகும்.
இதை இப்னு அபீ ஷைபா
(முஸன்னப் – 3/346) யிலும் ஹாகிம் இமாம்
முஸ்தத்ரக் (1/368)யிலும் அறிவித்துவிட்டு
முஃலலான ஹதீஸ் என கூறியிருப்பதை இமாம் தஹபி அவர்களும் ஏற்றுள்ளார்கள். இதற்கு சான்றாக
ஹாகிமில் (1/368) இடம்பெறும் பின்வரும்
ஹதீஸ் சான்றாக உள்ளது. இது சான்றாக உள்ள ஹதீஸ் என இமாம் ஹாகிம் (1/368) கூறியதை தஹிப இமாமும் ஏற்றுள்ளளார்கள்.
ஜாபிர் றழியல்லாஹு
அன்ஹு அறிவிக்கிறார்கள்
ஒரு மனிதர் சப்தமிட்டு
திக்ர் செய்பவராக இருந்தார். அவரை பாரத்;த ஒரு மனிதர் இவர் சப்தத்தை குறைத்தால் நன்றாக இருக்குமே எனக்கூறிய போது நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் அவர் ஆஹ் என்று அதிகம்
திக்ர் செய்யக்கூடியவர் எனக்கூறினார்கள். அந்த மனிதர் மரணித்த போது கப்ரடியில் வெளிச்சம்
தெரிவதை ஒரு மனிதர் கண்டார். அங்கே சென்று பார்த்த போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களுடை தோழரை நீங்கள்
எடுங்கள் எனச்சொல்லிக் கொண்டு இருந்தாரகள்;. அவர் தான் சப்தமிட்டு திக்ர் செய்த மனிதராகும்.
இந்த அறிவிப்புத்
தொடரில் இடம் பெரும் முஹம்மத் இப்னு முஸ்லிம் அத்தாயிபியிடம் இருந்து இஸஹாக் இப்னு
மன்சூர் அஸ்ஸலூலி அறிவித்து இருப்பது போல முஸ்தத்ரக் ஹாகிமில் இடம்பெறும் மற்றுமொரு
அறிவிப்பில் அவரிடம் இருந்து அபூ அஹ்மத் அஸ்ஸுபைரி அறிவித்துள்ளார்கள். ஹாகிம் (முஸ்தத்ரக்) (1/368)
இது முஸ்லிம் இமாமுடைய
நிபந்தனை படியுள்ள ஸஹீஹான ஹதீஸாகும் எனக்கூறியதை தஹபி இமாமும் ஏற்றுள்ளார்கள்.
(முஹம்மத் இப்னு அத்தாயிபி
வாயிலாக இமாம் முஸ்லிம் அவர்கள் நேரடியாக இல்லாமல் துயர்ந்து வந்ததையே அறிவித்துள்ளார்கள்
என்பதும் புகாரி இமாமும் 'முஅல்லக்'
ஆக அறிவித்துள்ளார்கள் என்பதும்
கவனிக்கத்தக்கதாகும் ஹத்யுஸ்ஸாரி (பக்:485))
எனவே அபூ தர் றழியல்லாஹு
அன்ஹு அவர்களின் இந்த ஹதீஸ் ஹஸனுன் லிகைறிஹி தரத்தைச் சார்ந்த ஹதீஸாகும்.
தொடரும்
No comments:
Post a Comment