ஆஹ், அஹ் என்று திக்ர் செய்யலாமா? தொடர் - 04
'ஆஹ்' என்பது அல்லாஹூ தஆலாவுடைய
திருநாமங்களில் ஒன்று எனக்கூறிய அறிஞர்கள்.
01- இமாம் பஹ்ருத்தீன்
றாஸி றஹ்மதுல்லாஹி அலைஹி
இமாம் பஹ்ருத்தீன் அர்ராஸி றஹ்மதுல்லாஹி அலைஹி
அவர்கள் பிஸ்மிலுக்கு விரிவுரை எழுதும் போது பின்வரும் கருத்தை முன்வைக்கிறார்கள்.
இஸ்முல் அஃலம் எது
என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேருபாடு நிலவுகிறது. 'ஆஹ்' என்பதுவே அல்லஹ்வின் இஸ்முல் அஃலமாகிய திருநாமம் என்பதே மிகச்சரியான கருத்து என
நான் கருதுகிறேன். ஏனெனில் அதுவே சைக்கினையின் இரகசியத்தையும், சிருஷ்டிகளின் உருவாக்கத்தையும், தெளிவுகள் உண்டாகுவதையும்; உள்ளடக்கியதாகும்.
(இக்கருத்தை அர்ரவ்ழதுஷ்
ஷாதுலிய்யா 84ம் பக்க்தில் கூறியுள்ளார்கள்)
02- அல்லமா ஹப்னி றஹ்மதுல்லாஹி
அலைஹி
ஆஹ் என்ற திருநாமமே
இஸ்முல் அஃலமாகும். அதை கொண்டு யார் பிரார்த்திக்கின்றாரோ அவருக்கு விடையளிக்கப்படும்.
யார் அதை கொண்டு கேற்கின்றாரோ அவருக்கு கொடுக்கப்படும்.
இதை அல்லாமா ஹப்னி
றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஸுயூதி இமாமுடைய அல் ஜாமியுஸ்ஸகீருக்கு அவர்கள் எழுதிய
ஓரக்குரிப்பில் இஸ்முல் அஃலம் எது என்பதைப் பற்றி பேசும் போது கூறியுள்ளார்கள்.
03- அல்லாமா அஸீஸி றஹ்மதுல்லாஹி
அலைஹி
'ஆஹ்' என்ற அல்லாஹ்வின் திருநாமத்தை அல்லஹு தஆலா ஒரு அடியானுக்கு
உள்ளத்தில் உதிப்புக்களை ஏற்படுத்தும் போது தோண்றச் செய்யும் திரு நாமமாகும். அப்பொழுது
அல்லாஹ்வின் மகத்துவங்கள் தெரிய வர ஆரம்பிக்கிரது. இதை அல்லாமா அஸீஸி (ரஹ்) ஜாமிஉஸ்ஸகீருடைய
விரிவுரையில் கூறியுள்ளார்கள்.
04- அஷ் ஷைக் அல் அமீர்
றஹ்மதுல்லாஹி அலைஹி
நிச்சயமாக 'ஆஹ்' என்பது அல்லாஹு தஆலாவின் திரு நாமங்களில் ஒன்றாகும். அதை சரிபடுத்தியும் பேசியுள்ளார்கள்.
இதை மதன் கராமி ஸஹீஹின் ஓரக்குறிப்பில் கூறியுள்ளார்கள்.
05- அல் உஸ்தாத் பாஜூரி
றஹ்மதுல்லாஹி அலைஹி
நோயாளி ('ஆஹ்') என்று சொல்வது அவசியமாகும். அது அல்லாஹ்வின் திருநாமங்களில் ஒன்றாகும். 'அக்' என்று சொல்லக்கூடாது அது சைத்தானின் பெயராகும்.
06- இப்னுஷ் ஷாமாத் றஹ்மதுல்லாஹி
அலைஹி
'ஆஹ்' என்பது அல்லாஹ்வின் திரு நாமமாகும். இது
அல்லாஹ் என்ற திருநாமத்தைப் போன்ற சொல்லாகும் .
ஷர்ஹு ஸ்ஸலாதில் மஷீஷிய்யா
'ஆஹ்' என்று திக்ர் செய்வது
ஆகுமானது எனக்கூறிய அறிஞர்கள்
01- இமாம் ஙஸ்ஸாலி றஹ்மதுல்லாஹி
அலைஹி
இமாம் ஙஸ்ஸாலி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஆஹ்
என்று திக்ர் செய்ய முடியும் எனக் கூறியிருப்பதாக அஹ்மத் ஷிஹாபுத்தீனில் பக்ரி றஹ்மதுல்லாஹி
அலைஹி கூறியிருக்கும் தகவலை அப்துல் கனி நாபுலுஸி றஹ்மதுல்லாஹி அலைஹி அவாகள் அவர்களது
ஜம்வுல் அஸ்றார் (பக்கம் 180) ல் கூறியுள்ளார்கள்.
02- அப்துல்லாஹ் ஜீலானி றஹ்மதுல்லாஹி
அலைஹி
மலக்குமார்கள் அல்லாஹு
தஆலாவின் மகத்துவம் மிகைக்கும் போது ஆஹ் ஆஹ் ஆஹ் என்றே திக்ர் செய்வார்கள்
ஜம்வுல் அஸ்றார் (பக்கம்
104)
03- ஷைகுல் அக்பர் இப்னு
அறபி றஹ்மதுல்லாஹி அலைஹி
அவ்வாஹ் என்பதன் பொருள் அல்லாஹு தஆலாவுடைய ஜலாலிய்யத்தை
காணும் போது அதிகம் ஆஹ் என்று சொல்பவராகும். அல் புதூஹாதுல் மக்கிய்யா, மனாகிபுஷ் ஷைக் முஹ்யித்தீன், அந்நூருல் அப்ஹர் பித்திபாயி அனிஷ் ஷைகில் அக்பர்,பக்கம் : 277
04- அபுல் அப்பாஸ் அல்
முர்ஸி றஹ்மதுல்லாஹி அலைஹி
அபுல் அப்பாஸ் அல்முர்ஸி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின்
சம்பவத்தை முன்னர் கூறியிருக்கிறோம்.
05- இப்னு அதாயில்லாஹ்
அல் இஸ்கன்தரி றஹ்மதுல்லாஹி அலைஹி
தன்னிலை மறக்கும்
போது தோன்றக்கூடிய அத்கார்கள், இரகசியங்களின் போது
அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் என்றோ ஹூ ஹூ ஹூ ஹூ என்றோ லா லா லா லா என்றோ அ அ அ அ என்றோ
அஹ் அஹ் அஹ் அஹ் என்றோ எழுத்தில்லாத சப்தங்களோ நாவினால் வெளிப்படும். இதன் போது அதை
ஏற்றுக்கொள்வதே ஒழுக்கமாகும். (மிப்தாஹுல் பலாஹ் வமிஸ்பாஹுல் அர்வாஹ் (பக்கம்: 23)
06- அஹ்மத் ஸரூக் அல்
பாஸி றஹ்மதுல்லாஹி அலைஹி
அபுல் அப்பாஸ் அல்முர்ஸி றஹ்மதுல்லாஹி அலைஹி
அவர்களின் சம்பவத்தை கூறுவதன் மூலம் அங்கீகரித்திருக்கிறார்கள்.
தொடரும்
No comments:
Post a Comment