Thursday, October 19, 2017

ஆஹ், அஹ் என்று திக்ர் செய்யலாமா? தொடர் - 08


ஆஹ், அஹ் என்று திக்ர் செய்யலாமா? தொடர் - 08

ஹதீஸ் -04

04 . இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் ஒரு நாள் இரவு கப்ரடிக்கு ஒரு மய்யித்தை அடக்குவதற்காக இரங்கிய போது அங்கே விளக்கேற்றப்பட்டது. அவரகள் மய்யித்தை கிப்லா பக்கமாக இருந்து இழுத்து எடுத்ததோடு அல்லாஹ் உமக்கு றஹ்மத் செய்வானாக நீர் அதிகம் ஆஹ் என்று சொல்பவராகவும் அதிகம் குரஆன் ஓதுபவராகவும் இருந்தீர என்றார்கள். அதன் மீது நான்கு தக்பீரும் கட்டினார்கள்.
 திர்மிதி : 975 இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் இந்த ஹதீஸ் ஹஸனானதாகும் என திர்மிதி இமாம் கூறியுள்ளார்கள். இப்னு மாஜா (1520) துஹ்பதுல் அஷ்ராப் (5,81) (5889) அல் முஸ்னதுல் ஜாமிஃ (6172)

இதற்கு விரிவுரை எழுதும் போது துஹ்பதுல் அஹ்வதியில் முபாரக்பூரி றஹ்மதுல்லாஹி அலைஹி கூறியிறுப்பதாவது :
அவ்வாஹ் என்பது அல்லாஹ்வின் பயத்தின் காரணமாக ஆஹ் என்று சொல்வதாகும்.

ஹதீஸ் -05

05- கஃபுல் அஹ்பார் றழியல்லாஹு அன்ஹு கூறுவதாவது:
நிச்சயமாக இப்றாஹீம் மிகவும் ஆஹ் என்று சொல்பவராக இருந்தார்தள்;. அதாவது நரகத்தை ஞாபகப்படுத்தும் போது ஆஹ் என்று சொல்வார்கள்.
இப்னு அபீ ஹாதம் (888) 

இதற்கு அடிக்குறிப்பு எழுதியவர்கள் கூறியிறுப்பதாவது:
அதன் அறிவிப்பாளர்கள் நம்பிக்கையானவர்களாகும். அப்துல்லாஹ் இப்னு றபாஹ் அல் அன்ஸாரி என்பவர் அபூ ஹாலித் அல் மதனியாகும். இவர் மூன்றாவது படித்தரத்தில் உள்ள நம்பிக்கையானவராகும். இந்த ஹதீஸ் அஹ்மத் இமாமுடைய ஸூஹ்த் (78) யிலும் இப்னு ஜரீர் தப்ஸீர் தபறி (51,11)யிலும் அறிவித்துள்ளார்கள்.

ஹதீஸ் -06

06- ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்.
எங்களிடத்தில் ஒரு நோயாளி அனுங்கிக் கொண்டிருக்கும் போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  எம்மிடம் வந்தார்கள். நோயாளியிடம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் வந்திருக்கிறார்கள் வாய் மூடி இருந்துகொள் எனச்சொன்ன போது அவரை அவ்வாறே அனுங்கவிடுங்கள். அனுங்குவது அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றாகும். அதன் மூலம் நோயாளி ஓய்வு பெறுகிறார் என கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸை அப்துல் கரீம் இப்னு முஹம்மத் றாபியி றஹ்மதுல்லாஹி அலைஹி அத்தத்வீன் பீ அஹ்பாரி கஸ்வீன என்ற நூலில் 1499 இலக்க ஹதீஸாகவும். இமாம் தைலமி அல் பிர்தௌஸ் பி மஃஸூரில கிதாப் என்ற நூலில் 8647 வது ஹதீஸாகவும் பதிந்துள்ளார்கள்.

இவ்விரு நூல்களிலும் இந்த ஹதீஸ் ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா வழியாகவே அறிவிக்கப்பட்டுள்ளதாக இருந்தாலும் இரண்டும் வெவ்வேரான அறிவிப்புத் தொடர்களைக் கொண்டு அறிவிக்கப்பட்டதாகும்.

அல் பிர்தௌஸ்                          அத்தத்வீன்
ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா        ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா
அல் காஸிம்                            புஹைய்யா
நவ்பல் இப்னுல் புராத்                   லைஸ் இப்னு அபீஸினான்
அய்யூப் இப்னு ரஷீதின் தந்தை          இஸ்மாயீல் இப்னு அய்யாஷ்
அய்யூப் இப்னு ரஷீத்                    யஹ்யா இப்னு மயீன்
மஸ்ஊத் இப்னு முஹம்மத் ரமலி       அஹ்மத் இப்னு அல் ஷாபி
தபரானி                             முஹம்மத் இப்னு இப்றாஹீம் அஸ்மிரி
                                       அப்துல் மாலிக் இப்னு ஹிப்பாக்
                                         ஹிபதுல்லாஹ் இப்னு அலீ அல் முஆவி
                                      ஸஃத் இப்னு அலி ஸன்ஜானி

இந்த ஹதீஸ் ஹஸனுன் லிகைரிஹி தரத்தை சார்ந்தது என அல் ஜாமிஉஸ் ஸகீருக்கு விரிவுரை எழுதியுள்ள அல்லாமா அஸீஸி கூறியுள்ளார்கள்.
                    அஸ்ஸிராஜூல் முனீர் ஷர்குல் ஜாமிஉஸ்ஸகீர்

இந்த ஹதீஸ் குறைந்த பட்சம் லயீப் பலவினமானது என்ற வகையைச் சார்ந்தாகும். இது இட்டுக்கட்டப்பட்ட மவ்ளுஆன ஹதீஸ் என கூறுவதற்கு எந்த நியாயமான காரணங்களும் கிடையாது. இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது எனக்கூறுபவர்கள் அதன் அறிவிப்புத் தொடரிலே முஹம்மத் இப்னு ஐய்யூப் இப்னு ஸுவைத் அர்ரமலி இடம் பெற்றிருப்பதாக கூறுகிறார்கள். அவர் ஹதீஸ் கலையில் இட்டுக்கட்டுபவர் என்று சந்தேகிக்கப்பட்டவர் என்று கூறப்படுவதால் இது இட்டுகட்டபட்ட ஹதீஸாகும் என்று கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் 'அத்தத்வீன் பீ அஹ்பாரி கஸ்வீன்' என்று நூலை எடுத்துப்பார்க்கும் போது அதிலே முஹம்மத் இப்னு அய்யூப் இப்னு ஸுவைத் அர்ரமலி என்பவர் இடம்பெறாமல் முஹம்மத் இப்னு அய்யூப் இப்னு ரஷீத் என்பவரே இடம்பெற்றிருக்கிறார்.

இதை பற்றி முஹம்மத் அல் மதனி றஹ்மதுல்லாஹி அலைஹி கூறியிருப்பதாவது :

1930களில் 'மஜல்லதுல் இஸ்லாம் அல் மிஸ்ரிய்யா' என்ற சஞ்சிகையில் நெஞ்சியில் இருந்து வெளிப்படும் திக்ர் விடயமாக பல அறிஞர்களின் கருத்துக்கள் இச்சஞ்சிகையின் இதல்களில் தொடராக பிரசுரிக்கப்பட்டது. அதில் சிலர் அவ்வாரான ஒரு திக்ர் இருப்பதாகவும் வேரு சிலர் இல்லையென்றும் எழுதினார்கள். ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்களின் நோயாளி முனங்குவது என்ற ஹதீஸையே ஆதாரமாக முன்வைத்தார்கள். ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹதீஸ் அல்ல என மறுப்பவர்கள் கூறினார்கள். அதிலே மிக முக்கியமானவர் முஹம்மத் ஸஹ்ரான் அல் அஸ்ஹரி என்ற அறிஞராகும். அவரின் கூற்றில் 'நோயாளி முனங்குவது' என்ற ஹதீஸ் ஆதாரமானதாக இருக்குமானால் நெஞ்சில் இருந்து வெளிப்படும் திக்ர் கூடுமானது என்பதாகும். ஆனால் அந்த ஹதீஸில் இடம்பெறும் அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் இப்னு அய்யூப் இப்னு ஸுவைத் என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவராகும். எனவே இந்த ஹதீஸ் இட்டுகட்டபட்டதாகும் என்று எழுதினார். இவ்வாரு திக்ர் செய்வது கூடும் எனக் கூறிய அறிஞர்களில் ஒருவராகிய அஷ் ஷைக் முஹம்மத் இப்னு இம்ரான் அஷ் ஷாதுலி அல் அஸ்ஹரி அவர்கள் அதற்கு பதில் அளிக்கும் போது மாற்றுக்கருத்துடைய அறிஞருக்கு இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரை வேறொரு பொய்யான செய்திகளைக் கூறும் அறிவிப்பாளர்  என நினைத்து குழம்பிவிட்டார். இந்த ஹதீஸில் இடம்பெறுபவர் அய்யூப் இப்னு ரஷீதாகும். அதை அவர் பொய்யான ஹதீஸ்களை அறிவிக்கும் அய்யூப் இப்னு ஸுவைத் என நினைத்துவிட்டார்.

தொடரும்....


No comments:

Post a Comment