Monday, October 9, 2017

கஸீததுல் புர்தாவுடைய விசேட தன்மைகளும் சிறப்புக்களும்

கஸீததுல் புர்தாவுடைய விசேட தன்மைகளும் சிறப்புக்களும்
கஸீததுல் புர்தாவின் சிறப்புக்கள் சொல்லி முடிக்கவே முடியாத அளவு காணப்படுகிறது. பிரபல்யமான நூற்களில் கூறப்பட்ட சிலதை மாத்திரம் இங்கே தருகிறோம்.

1.            ஈடேற்றமான நீண்ட ஆயுலுக்கு 1001 முறை ஓதவேண்டும்.
2.            கஷ்டங்கள் நீங்க 71
3.            வறட்சி நீங்க 300
4.            செல்வம் கிடைக்க 700
5.            ஆண் பிள்ளை பெற்றெடுக்க 116
6.            அனைத்து கஷ்டமான காரியங்களும் இலேசாக 771
7.            யாராவது ஒவ்வொரு நாளும் ஓதினால் அல்லது ஓதி ஊதினால் அனைத்து கஷ்டங்களைவிட்டும் பாதுகாப்பு கிட்டும்.
8.            யாராவது ஒவ்வொரு நாளும் ஓதி பிள்ளைகளுக்கு ஊதினால் நீண்ட ஆயுளுடன் அவர்களுடைய வாழ்க்கையில் அபிவிருத்தி ஏற்படும்.
9.            யாராவது 17 விடுத்தம் ஒவ்வொரு வியாழக்கிழமை மாலையிலும் தொடர்ந்து ஓதி வந்தால் இறை பக்தியும் நிறைந்த செல்வமும் கிட்டும்.
10.          யாராவது படுக்கை அறையில் ஏதாவது தேவைக்காக நாட்டத்துக்காக ஓதினால் கனவில் அது தெண்படும்.
11.          யாராவது பழைய மைய்யவாடியில் 41 தடவை 40 நாற்களுக்கு ஓதி வந்தால் எதிரிகளை அழிக்க முடியும்.
12.          ஒரு நாளைக்கு ஒரு விடுத்தம் தொடர்ந்து 7 நாற்களுக்கு பன்னீரிலே ஓதி அதை யாருக்காவது குடிக்க கொடுத்தால் அவரின் மனன சக்தி எதிர் பாறாத விதமாக அதிகரிக்கும்.
13.          பெரிய கஷ்டங்கள் சிறமங்கள் ஏற்பட்டால் மூன்று நாளைக்கு நோன்பு நோற்று ஒவ்வொரு நாளும் 21 தடவை ஓதி வர வேண்டும்.
14.          வலிகள் கஷ்டங்கள் நீங்க கஸ்தூரியுடன் குங்குமத்தை கலந்து எழுதி தொங்கவிட்டுக்கொள்ள வேண்டும்.
15.          ஒவ்வொரு நாளும் 3 முறை ஓதப்படும் வீடு அனைத்து கஷ்டங்களை  விட்டும் பாதுகாக்கப்பட்ட இடமாகும்.
16.          எந்த ஒரு வீட்டிலாவது கஸீததுல் புர்தா கிதாபு வைக்கப்பட்டிருந்தால் அவ்வீடு திருடர்களைவிட்டும் பாதுகாக்கப்படும்.
17.          யாராவது அவரது வாழ் நாளில் 7000 தடவை ஓதினால் 100 வருடங்கள் உயிர் வாழக்கிடைக்கும்.
18.          பிரயாணத்தில் ஒரு விடுத்தம் ஓதப்பட்டால் அப்பிரயாணம் கஷ்டங்களைவிட்டும் பாதுகாக்கப்பட்டதாக இருக்கும்.
19.          யாராவது கடன் கொடுக்கவேண்டியிருந்து 1000 தடவைகள் ஓதினால் கடனை அடைப்பதற்கு வழி பிறக்கும்.
20.          இதை 41 தடவை ஓதினால் அல்லது வெள்ளிக்கிழமை இரவு ஓதினால் அவருடைய நாட்டம், தேவை நிறைவேறும்.

புர்தா ஓதப்படும் வீடு 7 விடயங்களை விட்டும் பாதுகாக்கப்படும்.
1.            ஜின்களுடைய கெடுதிகள்.
2.            வாந்திபேதி, கொள்ளை நோய். (பிளேக்)
3.            பெரிய அம்மை.
4.            கண் திருஷ்டி.
5.            கால் தடுக்கல்.
6.            பைத்தியம்.
7.            திடீர் மரணம்.

தினந்தோறும் ஓதும் வீடுகளுக்கு 7 நற்பாக்கியங்கள் கிடைக்கிறது.
1.            நீண்ட ஆயுள்.
2.            உணவு விஸ்தீரணம்.
3.            ஆரோக்கியம்.
4.            அல்லாஹூத் தஆலாவின் உதவி.
5.            நபி ஸல்ல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒளியைக் காணல்.
6.            செல்வம்
7.            சந்தோசம்.


No comments:

Post a Comment