இப்னு தைமிய்யாவும் மன்சூர் நளீமியும் தொடர் -1
இப்னு தைமிய்யாவைப் பற்றி மன்சூர் (நளீமி)
படிக்க வேண்டிய பாடங்கள்
வெளியீடு: ஜம்யிய்யது
இஹ்யாயில் இஸ்லாம் - அக்குரணை.
'இப்னு தைமிய்யாவும் வாழ்வும் சிந்தனைகள்' என்ற தலைப்பில் மௌலவி
மன்சூர் (நளீமி) ஆற்றிய உரை பற்றி மக்களுக்கு உண்மையை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
அஹ்மத் இப்னு தைமிய்யா என்ற ஒருவர் ஹிஜ்ரி 7ம் நூற்றாண்டு காலப் பகுதியில் வாழ்ந்ததாக நாம் அறிந்துவைத்திருக்கின்றோம்.
இவர் உண்மையிலே இமாமாக போராளியாக இருந்தாரா அல்லது ஒரு வழிகேடராக வழிகெடுப்பவராக இருந்தாரா
என்பதே எமது தேடலாகும். இவரை இமாம், ஷைகுல் இஸ்லாம், முஹத்திஸ் என்றெல்லாம் சில அறிஞர்கள் கூறும் போது பெரும்பான்மையான
அறிஞர்கள் அவர் ஒரு வழிகேடர், முனாபிக், ஸின்தீக் என்றெல்லாம் வர்ணித்துள்ளார்கள். இச்சந்தர்ப்பத்தில்
நடுநிலையாக இருந்து பக்கச்சார்பற்று உண்மையை அறிந்துகௌ;வது எமது கடமையாகும்.
உஸ்தாத் மன்சூர் பக்கச்சார்பான முறையிலே உரையை நிகழ்த்தியுள்ளார். அவருக்கு தெரிந்த
உலமாக்களும், நூல்களும் மாத்திரமே
உலகத்தில் இருக்கிறது என்ற குறுகிய மனப்பான்மையின் அடிப்படையில் குண்டுச்சட்டிக்குள்
குதிரை ஓட்டுவது போல் குறுகிய வட்டத்துக்குள்ளே அவரின் ஆய்வுகள் காணப்படுகிறது. அவரின்
எல்லா உரைகளும், எழுத்துக்களும், ஆய்வுகளும் அவ்வாறே
காணப்படுகிறது. உஸ்தாத் மன்சூர் வெளி உலகத்துக்கு வந்து திறந்த ஆய்வை மேற்கௌ;ளுமாறு வேண்டுகிறோம்.
உஸ்தாத் மன்சூர் இப்னு தைமிய்யாவை பல்கலைகளிலும் தேர்ச்சிபெற்ற ஒரு பண்டிதராக போராளியாக
வர்ணிக்கிறார். அவரின் அறிவுத் திறமையை எல்லோரும் ஏற்றுக்கொண்டாலும் அதை பிரயோகிக்கும்; முறையில் பல தவறுகளை
செய்திருக்கிறார். இதனால் அவரை அல்ஹாபில் இராகி (றஹ்) அவர்கள் 'அவரின் புத்தியை விட
அறிவு அதிகமானது' என வர்ணித்திருக்கிறார்கள்.
(அல் அஜ்விபதுல் மர்லிய்யா
அலல் அஸ்யிலதில் மக்கிய்யா)
இதே கருத்ததை இப்னு
தைமிய்யாவின் மாணவர் ஸலாஹ் அஸ்ஸபதி (றஹ்) பின்வருமாறு கூறியிருக்கிறார்:
'அவர் ஷைகாக, தலைவராக, அறிந்தவராக, மிகவும் கற்றுத்தேர்ந்தவராக
இருந்தார். அவரின் அறிவு மிகமிக விசாலமானது. ஆனால் புத்தி குறைவானவர். இதனால் அழிவுகளிலும்
நெருக்கடிகளும் சிக்கிக்கொள்வார்'.
(ஷவாஹிதுல் ஹக் :பக்:189)
பிரபல வரலாற்றாசிரியர் இப்னு பதூதா கூறும் போது அவர் (இப்னுதைமிய்யா)
பல கலைகளிலும் பேசுவராக இருந்தார் என்றாலும் அவருடைய புத்தியில் குழப்பம் இருந்தது.
றிஹ்லது இப்னு பதூதா (1:109)
அவரின் புத்தியை விட அறிவு அதிகமானது எனச் சொன்னவர்கள் சரியாகத்தான்
சொல்லியிருகக்கிறார்கள் என இமாம் கஸ்தல்லானி (றஹ்), இமாம் ஸுர்கானி (றஹ்) ஆகியோர் கூறியிருக்கிறார்கள்.
ஷர்குஸ்ஸுர்கானி
அலல் மவாஹிபுல் லதுன்னிய்யா (8:305)
அவரின் சிலதவறுகள் மன்னிக்க
முடியாதவையாகும். ஈமானையே பரித்துவிடக்கூடியதாகும். அல்லாஹ் எம்மை பாதுகாப்பானாக. இதனாலே
பல தடைவ அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டதைப் பற்றி மன்சூர்
(நளீமி) கூறும் போது அவர் எதிரிகளை சம்பாதித்துக் கொண்டதே காரணம் எனச்சொல்கிறார். அநியாயமாக
சிறையில் அடைக்கப்பட்டது போல் வர்ணிக்கிறார். ஆனால் எதிரிகளை உருவாக்கிக்கொண்டதற்கான
காரணத்தையோ சிறைக்கு சென்றதற்கான காரணத்iயோ அவர் கூறவில்லை.
மாறாக ஒவ்வொறு தடவையும் அவர் வழங்கிய பத்வாக்களே சிறைக்கு
செல்வதற்கு காரணமாக இருந்தன. இப்னு தைமிய்யாவுடன் சம காலத்தில் வாழ்ந்த அரசர்கள் பெரும்
பெரும் அறிஞர்களின் ஆலோசனைக்கு அமைவாக செயல்படுபவர்களாகவே இருந்தார்கள் என்பது வரலாற்று
உண்மையாகும். ஒவ்வொரு தடவையும் அவர் வழங்கிய பத்வாக்களை உலமாக்கள், நீதிபதிகள்
முன்னிலையில் விசாரிக்கப்பட்டு சாட்சிகளால் நிரூபிக்கப்ட்டு மன்னரின் உத்தரவின் பின்னரே
சிறையில் அடைக்கப்பட்டார். சில தடவைகளில் தவ்பா செய்து வாபஸ் வாங்கிய போதும் சபை முடிந்து
சென்றதன் பின்னால் மீண்டும் அதை பரப்புபவராக இருந்தார்.
சிறையில் அடைக்கப்பட்ட வரலாற்றை
முழுமையாக கூறுவதற்கு இப்பிரசுரம் இடங்கொடுக்காத காரணத்தால் சிறைக்கு சென்றதற்கான காரணத்தை
இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி அத்துரருல் காமினா (1:144 )என்ற நூலில் கூறியதன் சுருக்கத்தை தருகிறோம்.
இப்னு தைமிய்யாவின் மீது முதலாவது முன்வைக்கப்பட்ட
குற்றச்சாட்டு அவர் 'ஹமவிய்யா' என்ற பத்வா தொகுப்பை
வெளியிட்டதாகும். இது ஹிஜ்ரி 698ம் ஆண்டு ரபீஉனில் அவ்வல் மாதம் நடைபெற்றது. அக்காலத்தில் இருந்த
உலமாக்கள் அவருடன் ஆய்வில் ஈடுபட்டு அதிலே ஈமானை பரிக்கக்கூடிய பல விடயங்கள் கூறப்பட்டிருந்ததால்
பேசுவதற்கு தடைசெய்யப்பட்டார்.
பின்னர் ஈமானை பரிக்கக்கூடிய
விடயங்களை திரும்பவும் பேசுவதாக கேள்விப்படவும் 705ம் வருடம் ரஜப் மாதம் 8ம் நாள்; இரண்டாவது முறை விசாரணைக்கு
அழைக்கப்பட்டார். அச்சபையில் அவரின் 'வாஸிதிய்யா' என்ற அகீதா தொகுப்பை முன்வைக்கப்பட்டு ஆய்வுக்கு எடுக்கப்பட்டது.
பின்னர் இப்னு தைமிய்யாவுடன் அல்கமால் அஸ்ஸம்லகானி வாதாடி வாயடைத்துப் போகும் நிலை
ஏற்பட்டவுடன் பயந்து நான் ஷாபி மத்ஹபை பின்பற்றுகிறேன் என்றும் ஷாபி இமாம் எதை நம்பிக்கையாக
எடுத்திருக்கின்றார்களோ அதையே நானும் நம்பிக்கை கொள்கிறேன் எனக்கூறினார்.
அகீததுல் வாஸிதீய்யாவை விட்டும்
இவர் வாபஸ் வாங்கிய போதும் அவரின் கருத்துக்களை பரப்புகிறவர்கள் இன்றும் இப்புத்தகத்தை
ஏனைய மொழிகளிலும் மொழி பெயர்த்து இலவசமாக வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
பின்னர் அதேவருடம் ரஜப் மாதம்
காழில் குழாத் நஜ்முத்தீன் இப்னு ஸஸ்ரா என்பவருக்கும் இப்னு தைமிய்யாவுக்குமிடையில்
698ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வைப்பற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறு
மன்னரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் இருவரையும் எகிப்துக்கு அழைக்கப்பட்டு
அதே வருடம் ரமழான் மாதம் நீதிபதிகள், மார்க்க சட்ட வள்ளுனர்கள், உலமாக்கள் தலைவர்கள் முன்னிலையில் விசாரணை ஆரம்பமாகியது.
ஷம்சுத்தீன் இப்னு அத்னான் அஷ்ஷாபியி (றஹ்) அவர்கள் இப்னு தைமிய்யாவின் மீது அகீதா கொள்கைகோட்பாடு சம்பந்தமான
சில விடயங்களை முன்வைத்தார். இதற்கு பதில் சொல்ல முற்பட்ட இப்னு தைமிய்யா பிரசங்கம் நிகழ்த்த ஆரம்பித்த போது
அங்கிருந்தவர்கள் உங்களுடைய பிரசங்கம் எமக்கு தேவையில்லை நீங்கள் கேள்விகளுக்கு பதிலளியுங்கள்
என்றார்கள். திரும்பவும் பிரசங்கம் நிகழ்த்த முற்பட்ட போது கேள்விகளுக்கு பதிலளியுங்கள்
என்றார்கள். இவ்வாறே இவரும் பல தடைவ கேட்டபோது அவரும் பதிலளிக்காததால் நீதிபதி சிறையில்
அடைக்கும் படி உத்தரவிட்டார். பின்னர் யாரெல்லாம் இப்னு தைய்யாவின் கொள்கையை பின்பற்றி
நடக்கிறார்களோ அவர்களின் இரத்தமும் சொத்தும் ஹலாலானதனகும் என எல்லாப் பள்ளிவாயல்களிலும்
அறிவிப்புச்செய்யப்பட்டது.
பின்னர் 707ம் ஆண்டு தலைவரின்
சிபாரசின் பேரில் விடுதலை செய்ய நீதிபதியிடம் கேட்டபோது அவர்கள் நிபந்தனையுடன் விடுதலைசெய்ய
அனுமதித்தார்கள். அவரின் கொள்கையை விட்டும் வாபஸ் பெறவேண்டும் என்பது நிபந்தனையாகும்.
பின்னர் இப்னு தைமிய்யா அவரது கையினாலேயே தௌபா செய்து மீளுவதாக எழுதிக்கொடுத்து சாட்சிகளையும்
நியமித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
'எனது நம்பிக்கை என்னவெனில் குர்ஆன் அல்லாஹ்வுடைய மெய்ப்பொருளிலே
உள்ள ஒரு பண்பாகும். அது மெய்ப் பொருளிலே உள்ள ஆரம்பமற்ற பண்பாகும். அது படைக்கப்படாதது, அதற்கு எழுத்தோ சப்தமோ
கிடையாது. 'அர்ரஹ்மான் அலல் அர்ஷிஸ்தவா' என்ற வசனத்தின் வெளிப்பொருள்
நாட்டம் கொள்ளக்கூடாது. அதன் யதார்த்தத்தை நான் அறியமாட்டேன். அல்லாஹு தஆலாவே அறிந்தவன்.
இரங்குவதாக கூறப்படும் செய்தியும் இதைப் போன்று வெளிப்பொருள் சொல்லப்படாததாகும். இதை
அஹ்மத் இப்னு தைமிய்யா எழுதினார். சுயவிருப்பத்துடன் தௌபா செய்ததாக சாட்சிகள் ஏற்படுத்தப்பட்டு
707ம் வருடம் ரபீஉனில்
அவ்வல் மாதம் 15ம் நாள் சிறையில்
இருந்துவிடுவிக்கப்பட்டார்.
பின்னர் தரீக்காக்களுடைய ஷைகுமார்கள்
பற்றி குறை பேசியதாலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் அவர்களைக்கொண்டு உதவி தேடக்கூடாது எனக் கூறியதாலும் அதற்காக விசாரிக்கப்பட்டு
அது உண்மையானது என சாட்சிகளால் நிறுவப்பட்டபின் 709ம் வருடம் சிறையில் அடைக்கப்பட்டு 709ம் வருடம் தௌபா செய்ய வைத்து இதன் பிறகு இவ்வாறு செய்யக்கூடாது என நிபந்தனை விதித்து
விடுவிக்கப்பட்டார்.
பின்னர் ஹிஜ்ரி 719ம் வருடம் ரமழான்
மாதம் தலாக் சம்பந்தமான பத்வாவை வெளியிட்டதும்
பத்வா கொடுக்கவேண்டாம் என தடைசெய்யப்பட்டதோடு பின்னர் 720ம் ஆண்டு ரஜப் மாதம்
விசாரிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு 721ம் வருடம் விடுவிக்கப்பட்டார்.
பின்னர் ஹிஜ்ரி 726ம் வருடம் நபி ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களை தரிசிக்கச் செல்லக்கூடாது எனக் கூறியதால் சிறையில் அடைக்கப்பட்டு
728ம் வருடம் துல்கஃதா
20ம் நாள் திங்கட் கிழமை
மரணிக்கும் வரை சிறையிலே இருந்தார்.
மேலே கூறப்பட்ட விடயங்களை
பார்க்கும் போது இப்னு தைமிய்யா அவர் வழங்கிய பத்வாக்களே சிறைக்குச்செல்ல காரணமாக இருந்ததே
தவிர யாரையும் பகைத்துக்கொண்டதல்ல. இப்னு தைமிய்யாவை அக்காலத்து உலமாக்கல் பகைத்துக்கொண்டார்கள்
என்றால் அது மார்க்கத்துக்காகவே அன்றியில்லாமல் மன்சூர் (நளீமி) கூறுவது போல் சுய நலத்துக்காகவல்ல
என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்
தொடரும்
உஸ்தாத் மன்ஸூர் அவர்களின் எந்த ஒரு உரையை எடுத்தாலும் அவர் தனது முடிவுகளை வரையறுத்துக் கூறமாட்டார் அப்படிபார்த்தால் அப்படி இருக்கலாம் இப்படிப் பார்த்தால் இப்படி இருக்கலாம், அதுவும் ஒருவகையில் சரியாக இருக்கலாம்.இல்லாவிட்டால் இதுவும் சரியாக இருக்கலாம் அதாவது அவர் பெரும்ப்பலும் ஊகத்தின் அடிப்படையிலேயே கருத்துககளைக் கூறுவார் மேலும் இங்கு குறிப்பிட்டபடி யாராவது அவர் வாசித்த புத்தகத்தின் ஆசிரியர் கூறிய கருத்துக்களை அப்படியே ஒப்புவிப்பார்
ReplyDelete