ஸுர்யானி பாசையில்
'ஆஹ்' என்பது அல்லாஹ் என்று
பொருள்
ஆஹ் என்ற சொல் சுர்யானிப்
பாசையில் அல்லாஹ் என்பதை குறிக்கிறது. இதை சுர்யானிப் பாசையில் அதிகமாக காணமுடிகிறது.
எனவே உள்ளத்தில் இருந்து வரும் திக்ராகிய 'ஆஹ்' என்பது சுர்யானிப்
பாசையைக்கொண்டு அல்லாஹ்வை திக்ர்செய்தல் என்பதற்கு உட்பட்டதாகும். 'ஆஹ்' என்பதிலே உள்ள அலிபும் ஹாவும் சுர்யானிப்பாசையில் அல்லாஹ்வைக் குறிப்பது போல் 'யாஹ்', ஹஹ்' என்பதும் அல்லாஹ்வை
குறிக்கிறது. அதே போன்று அபராணிப்பாசையில் 'ஈல்' என்பது அல்லாஹ்வை குறிக்கிறது. இந்த திருநாமம் திருக்குர்ஆனில் 'இஸ்ராயீல்' என்று உபயோகிக்கப்பட்டுள்ளது. இஸ்ராயீல் என்பதன்
மூலம் நாடப்பட்டவர்கள் யஃகூப் அலைஹிஸ்ஸலாம் மாக இருந்தாலும் அதன் சொல் அர்த்தம் அல்லாஹ்வின்
அடிமை என்பதாகும். அதாவது 'இஸ்ரா' என்பது அடிமை என்ற பொருளையும் 'ஈல்' என்பது அல்லாஹ்வையும் குறிக்கிறது.
இதே போன்று தான் ஆங்கிலத்தில்
அல்லாஹ் என்பதற்கு 'பழன' என்று சொல்லப்படுவதோடு
தமிழில் 'இறைவன்' என்று சொல்லப்படுகிறது. 'அல்லாஹ்' என்ற மொழி இல்லாமல் வேறு மொழிகளைக் கொண்டு அதன்
கருத்துகளை மொழிந்தால் அதன் மூலம் ஈமானோ, இறை நிராகரிப்போ ஏற்படமாட்டாது. இவ்வாறு இருக்கும் போது ஏன் அவைகளைக் கொண்டு அல்லாஹ்வை
நினைவு கூற முடியாது? எண்ணத்தைக் கொண்டு
தான் அனைத்தும் கருதப்படுமாயின் ஏன் இதை மொழியும் போதும் அவ்வாறு எண்ணத்தை கருதமுடியாது?
மூஸா அலைஹிஸ்ஸலாம்
'ஆஹியா ஷராஹியா' என்று பிராத்திப்பவர்களாக இருந்தார்கள். அதாவது
அதன் அர்த்தம் யா ஹய்யு, யா கய்யூம் என்பதாகும்.
இந்த தகவலை இமாம் இப்னு கஸீர் றஹ்மதுல்லாஹி அலைஹி 'ஜய்யித்' என்ற தரத்தைச் சேர்ந்த அறிவிப்புத் தொடரைக்கொண்டு
பதிவு செய்துள்ளார்கள்.
எனவே அறபு மொழி அல்லாத
ஏனைய மொழிகளைக் கொண்டு அல்லாஹ்வை நினைவு கூற முடியுமாயின் 'ஆஹ்' என்பதைக் கொண்டும் திக்ர் செய்வது அங்கீகரிக்கப்பட்டதாகும்.
மேலும் இத்தகவலை இப்னு
அபீ ஹாதம் அப்துல்லாஹ் றழியல்லாஹு அன்ஹு வாயிலாக அறிவித்துள்ளார்கள். அல்லாஹு தஆலா
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பிர்அவ்னிடம் அனுப்பிய போது நாயனே! நான் என்ன சொல்ல வேண்டும்
என அல்லாஹ்விடம் கேட்ட நேரத்தில் 'ஹயா ஷராஹியா'
எனச் சொல்லும்படி அல்லாஹு
தஆலா கூறினான். அனைத்து வஸ்த்துக்களுக்கும் முன் உயிரோடு இருந்தவன், அனைத்து வஸ்துக்களுக்கும் பின்னரும் உயிரோடு இருப்பவன்
என்பது அதற்கு பொருளாகும் என அஃமஷ் றஹ்மதுல்லாஹி அலைஹி கூறியிருக்கிறார்கள்.
தப்ஸீர் இப்னு கஸீர்
(5/296), முஸன்னப் இப்னு அபீ ஷைபா (97,119), ஜூஸ்வு அபூ தாஹிர் அத்தாரகுத்னி (51), அத்துர்ருல் மன்ஸூர் (5/580), அல் மதாலிபுல் ஆலியா (10/109)
மற்றுமொறு அறிவிப்பில்
:
பனு இஸ்ரவேலர்கள்
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அல் இஸ்முல் அஃழம் எதுவெனக் கேட்டபோது அல்லாஹு தஆலா நீங்கள்
அவர்களிடம் 'ஆஹியா ஷராஹியா'
என்று பிராத்திக்கும்படி வஹி
அறிவித்தான். இதன் அர்த்தம் 'அல்ஹய்யுல் கய்யூமாகும்'.
பத்ஹூல் கதீர் - ஷவ்கானி
(1/510), பைலுல் கதீர்- (முனாவி 1/510)
மற்றுமொறு அறிவிப்பில்
'அயா ஹயா ஷராஹிய' என்று பிராத்திக்கும்படி கூறினான். அதாவது யா ஹய்யு
யா கய்யூம் என்பது அதன் அர்த்தமாகும்.
தப்ஸீருல் குர்துபி
(3/271) பஹ்ருல் உலூம் (ஸமர்கன்தி - 1/238) தப்ஸீருல் லுபாப் (இப்னு ஆதில் - 3/243)
தொடரும்......
No comments:
Post a Comment