Monday, October 23, 2017

அத்துர்ரதுல் பஹிய்யா நல்மு ஸில்ஸிலதில் அக்தாபிஸ் ஸாததிஷ் ஷாதுலிய்யா



ஷாதுலிய்யா தரீக்காவின் நாயகங்களான ஷேக்மார்களின் பெயர்கள் அடங்கிய அழகிய இரத்தின முத்துக்களாள புகழ்மிக்க கவிதை தொகுப்பு

இயற்றியவர்:
பெரும் இலக்கியவாதியும், மார்க்க மாமேதையும் ஸைய்யிதுஸ் ஸாதாத் அவர்களின் புதல்வருமாகிய அஸ்ஸெய்யித் அஹ்மத் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஷைக் பாபகீஹ் அஷ்ஷாதுலி ரஹ்மதுல்லாஹி அலைஹி

 பலன்கள்:
·        ஷைக்மார்களின் திருநாமங்கள் அடங்கிய இந்த வஸீலா கவிதை தொகுப்பை வழமையாக நீங்கள் ஓதிவந்தால் இந்த குத்புமார்களின் மததுகளையும், அருள்களையும், பாதுகாப்பையும் நிச்சயம் பெற்றுக் கொள்வீர்கள்.

·      யாராவது பிரச்சினைகளில், சோதனைகளில், நோய்களில் சிக்கி அதை விட்டும் மீண்டு வரமுடியாத சூழ்நிலையில் இருந்தால் இதைதொடர்ந்து ஓதி வருவதன் மூலம் விரைவில் பிரச்சினைகள், சோதனைகள் நீங்கி நோய்களைவிட்டும் குணமடைந்துவிடுவார்.

·      வான் மார்க்கமாக, கடல் மார்க்கமாக பிரயாணம் மேற்கொள்ளும் போது ஏற்படும் பிரச்சினைகள் தீரவும் சிறையில் அடைக்கப்பட்டவரை விடுதலை செய்யவும், இவ்வுலக மறுஉலக தேவைகள் நிறைவேறவும் இது சிறந்த மருந்தாகும்.

·      இக்கவிதை தொகுப்பை சாம்பிராணி பிடித்து வீட்டில் வைப்பதன் மூலமும் மிகுந்த பரக்கத்தையும், மததையும் பெற்றுக் கொள்வீர்கள்.

ஓதும் முறை:

Ø  ஓதும் முன் வுழூ செய்துகொள்ளல்.
Ø  வாசனைத் திரவியங்களை பூசிக்கொள்ளல்.
Ø  சாம்பிராணிப் புகை போடுதல்.
Ø  மனஓர்மையுடன் ஓத வேண்டும்.
Ø   இதை தனிமையாகவும் கூட்டாகவும் ஓதலாம்.
Ø  இதை ஓதுவதற்கு முன் அனைவரின் பெயரிலும் பாதிஹா சொல்லவும்.
Ø  சூரத்துல் பாதிஹாவை ஓதவும்.
Ø  பின்னர் குல் குவல்லாஹூ அஹதை ஓதவும்.
Ø  பின்னர் குல் அஊது பிரப்பில் பலக், மற்றும் குல் அஊது பிரப்பின்னாஸை ஓதவும்.
Ø  பின்னர் இதன் நன்மைகளை இந்த குத்புமார்களுக்கு ஹத்யா செய்துவிட்டு இந்தகவிதை தொகுப்பை ஓதவும்.

குத்புமார்களான ஷேக்மார்களின் அறிவுரைகள்

நோய்கள் கஷ்டங்கள் ஏற்படும் போது இந்த குத்புமார்களின் பெயர்களை ஓதி வஸீலா தேடி உதவிக்கு அழைத்தால் நிச்சயமாக அவர்கள் பதிலளிப்பார்கள்.

மபாகிருல் அலிய்யா என்ற நூலில் கூறப்பட்டுள்ளதாவது:

இமாம் அபுல் அஸாயிம் மாழீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் அவர்களுடைய தோழர்களும் ஹஜ்ஜூக்காக சென்றிருந்த போது அவர்களுக்கும் சில மக்கா வாசிகளுக்குமிடையில் குழப்பம் ஏற்பட்டு ஹாஜிமார்களின் சொத்துக்களை கொள்ளையிட முயற்சித்தார்கள். அப்பொழுது இமாம் அபுல் அஸாயிம் அவர்கள் 'ஷாதுலி ஆண்டவரே எம்மை காப்பாற்றுங்கள்' என உதவிக்கு அழைத்தார்கள். உடனே ஷாதுலி நாயகமவர்கள் குதிரை வீரணைப்போல் குதிரையில் 'தாருன்னத்வா' என்ற இடத்திற்கு வந்து காப்பாற்றினார்கள்.

இமாம் அபுல் ஹஸன் ஷாதுலி நாயகத்தின் முதலாவது சிஷ்யரும், குத்புமாகிய இமாம் அபுல் அப்பாஸ் அல் முர்ஸி ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறியிருப்பதாவது:

அன்புள்ளம் கொண்ட சகோதரனே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஏதாவது ஒரு துன்பம் ஏற்படும் போது நீ ஷாதுலி நாயகத்தை நினைத்தால் அத்துன்பம் நீங்கிவிடும். ஏதாவது நோய் ஏற்படும் போது நீ அவர்களை நினைத்தால் அந்நோய் குணமடைந்துவிடும்.
மேலும் உனக்கு ஒரு துன்பம் ஏற்படும் போது சத்திம் செய்து அவர்களை அழைத்துக் கேள். நிச்சியம் உனக்கு பதில் கிடைக்கும் என அவர்கள் புத்திமதி கூறினார்கள்.

இதே போன்றே பிரபல்யமான குத்பாகிய ஷம்சுத்தின் முஹம்மத் அல் ஹனபி அஷ்ஷாதுலி (ரஹ்) அவர்களும் கூறியுள்ளார்கள். அத்தோடு இந்த ஸில்ஸிலாவில் உள்ள ஏனைய குத்புமார்களை அழைத்து உதவிதேடும்படியும் கூறியிருக்கிறார்கள்.

எங்களுடைய ஷேக் நாயகமாகிய அல்குதுபுல் கபீர் வல் கௌஸுஷ் ஷஹீர் அஷ்ஷைக் முஹம்மத் இப்னு முஹம்மத் அல்பாஸி அஷ்ஷாதுலி நாயகம் அவர்களுடைய 'அய்னிய்யா' என்ற கவிதை தொகுப்பில் கூறியிருப்பதாவது:

'என்னை அழைத்து உதவிதேடுங்கள். நிச்சயம் நான் விடையளிப்பேன்'

اَلدُّرَّةُ الْبَهِيَّةُ نَظْمُ سِلْسِلَةِ الْأَقْطَابِ السَّادَةِ الشَّاذُلِيَّةِ

No comments:

Post a Comment