ஸகாத் பெறும் பீஸபீலில்லாஹ் கூட்டத்தவர் பற்றிய தெளிவு - தொடர் -04
முற்றும்
நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம்
அவர்களின் ஹதீஸ்களுக்கு மாற்றம் செய்யும் கர்ளாவி
நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஆத்
றழியல்லாஹு அன்ஹு அவர்களை எமன் தேசத்திற்கு அனுப்பிய போது முஆதே றழியல்லாஹு அன்ஹு
வேதக்காரர்களான ஒரு கூட்டத்திடமே நீங்கள் செல்கிறீர்கள். முதலாவதாக
அல்லாஹுத்தஅலாவை ஓர்மைப்படுத்துவதின் பால் அவர்களை அழையுங்கள். அதை அவர்கள்
அறிந்துகொண்டால் அல்லாஹுத்தஆலா அவர்கள் மீது ஐவேலைத் தொழுகையை பகலிலும் இரவிலும்
கடமையாக்கியுள்ளான் என அறிவித்துக்கொடுங்கள். அவர்கள் தொழுதால் அல்லாஹுத்தஆலா
அவர்கள் மீது அவர்களுடைய சொத்துக்களுக்கு ஸகாத்தை கடமையாக்கியுள்ளான். அவர்களில்
பணக்காரரிடமிருந்து எடுத்து ஏழைக்கு கொடுக்கப்படும் எனக்கூறுங்கள். அதை அவர்கள்
ஏற்றுக்கொண்டால் அவர்களிடமிருந்து (ஸகாத்தை) எடுங்கள். மக்களின் சொத்துக்களில்
நல்லதை தவிர்ந்து கொள்ளுங்கள் எனக் கூறியதாக இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு
அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்
ஸகாத் பணக்காரர்களிடமிருந்து எடுத்து
ஏழைகளுக்கு கொடுக்கப்படும் என நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவாக
கூறியுள்ளார்கள். ஆனால் கர்ளாவியும் அவரின் போக்கில் போகக்கூடியவாகளும் இதை
முதுகுக்குப்பின்னால் தூக்கி எறிந்துவிட்டு நாங்கள் கண்காட்சி நடத்துவதற்கும், பாடசாலை கட்டுவதற்கும், இடங்கள் வாங்குவதற்கும் பாவிப்போம் எனக்
கூறுகிறார்கள். இதனால் ஏழைகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். சிந்தனை
ஏகாதிபத்தியத்திக்கு எதிரான போராட்டம் என்ற திறைக்குப்பின்னால் இருந்து கொண்டு
சம்பாதிக்க முடியுமானவரும் வசதியுள்ளவரும் நன்மையடைகிறார்கள். இந்த வாதத்தின்
அடிப்படையில் எத்தனையோ விடயங்களை உள்ளடக்க முடியுமாவதோடு ஒவ்வொருவருக்கும் அவருடைய
தேவையை நிறைவேற்றிக்கொள்ள முடியுமாக இருக்கிறது. இந்த வாதத்தின் அடிப்படையில்
கர்ளாவிக்கும் ஒரு பங்கு கொடுக்க முடியுமாவதோடு ஆ.யு.லு.யு என்ற அமைப்பின்
நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும், மஸ்ஜிதுஸ்ஸுன்னதின் நபவிய்யா நிர்வாகத்திற்கும்
கொடுக்கமுடியுமாகிறது. இது ஏழைகளின் பங்குகளை இல்லாதொழிக்கச்செய்யும் சதி
வலையாகும். இது முஸ்லிம்களுக்கு மத்தியில் வறுமையை கஷ்டத்தை தோற்றுவிப்பதற்கு
வழிகோலுவதோடு மார்க்கத்தின் எதிரிகளால் பணத்தை பயன்படுத்தி அவர்களை
ஆட்டிப்படைக்கவும் மோசமான கொள்கை கோட்பாடுகளை வளர்க்கவும் உதவுகிறது. இதுதான்
இந்தோநேசியாவிலும், இந்தியாவிலும்
சோமாலியாவிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சமுதாயத்தில் தெரிந்தோ
தெரியாமலோ எதிரிகளுக்கு எதிராக பேராடுகிறோம் என நினைத்துக்கொண்டு இவ்வாறு
ஈடுபடுபவர்களுக்கு இவ்விடயத்தை தெரிவிக்க விரும்புகிறோம்.
மேற்கூறப்பட்ட ஹதீஸைப்போன்றுதான் நபி ஸல்லல்லஹு
அலைஹி வஸல்லம் அவர்களிடம் திடகாத்திரமான பலசாலிகளான இரண்டு மனிதர்கள் ஸகாத்தை
கேட்டு வந்தபோது அவர்களை மேலும்கீழுமாக பார்த்துவிட்டு நான் உங்கள் இருவருக்கும்
தருகிறேன். ஆனால் பணக்காரர்களுக்கோ சம்பாதிக்கத்தெரிந்த பலசாலிகளுக்கோ எவ்வித
பங்கும் கிடையாது எனக்கூறியது. ஆதாரம்; புஹாரி.
எனவே நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
ஸகாத் ஏழைகளின் கஷ்டத்தை நீக்கவும், துயர் துடைக்கவுமே பயன்படுத்தவேண்டும் எனத்தெளிவாக
கூறியுள்ளார்கள். மாறாக வசதியுள்ளவர்களின் கனவுகளை நிறைவேற்றவும், சம்பாதித்து தேடிக்கொள்ள முடியுமானவர்களின்
ஆசைகளை நிறைவேற்றவும் கொடுக்கப்படும் நிதியல்ல. ஆனால் ஸகாத் நிறுவனங்களை
நடாத்துபவர்கள் ஏழைகளுக்கும், எளியவர்களுக்கும் கொடுக்காமல் எங்களுக்கு தாருங்கள் நாங்கள்
சிந்தனைப் போராட்டம் நடாத்துகிறோம் எனக் கூறுகிறார்கள். யார் பின்பற்றத்
தகுதியானவாகள்!! நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்களா? அல்லது யூசுப் கர்ளாவியும் ; M.A.Y.A நிறுவனமா!!? நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம்
அவர்களே பின்பற்றத் தகுதியானவர்கள் என அல்லாஹுத்தஆலா திருமறையில் கூறியுள்ளான்.
நீங்கள் அல்லாஹுத்தஆலாவை நேசிப்பவர்களாயின்
என்னைப் பின்பற்றுங்கள் அல்லாஹுத்தஆலா உங்களை நேசிப்பான் ஆலஇம்ரான் : 31
உண்மை என்னவென்றால் இவ்வாறு
செயல்படக்கூடியவர்கள் சில திட்டங்களை நிறைவேற்ற எண்ணி நிருவனங்களை
அமைக்கின்றார்கள். பின்னர் திட்டங்களை நிறைவேற்ற மக்களின் பணங்களை பெறமுடியாது
போனபோது ஸகாத்தின் பால் விரைகிறார்கள். ஏனெனில் மக்கள் ஸகாத் கடமையை நிறைவேற்ற
வேண்டும் என்ற பேரவாவில் இருப்பதால் அதை சாதகமாக பயன்படுத்தி தமது திட்டங்களை
நிறைவேற்றுகிறார்கள். இவர்களுக்கு மார்க்கத்தீர்ப்பு வழங்குவதற்காக
மடமைத்தனத்துடனும்,கெட்ட எண்ணத்துடனும்
செயல்படும் கர்ளாவி,அவர் போன்றவர்களை
நாடுகின்றார்கள். அப்படி இல்லை என்றால் ஏழை எளியவர்களுக்கும் ஏனைய
தகுதியுள்ளவர்களுக்கும் போய்ச்சேர வேண்டிய ஸகாத் பங்கை அவர்கள் கொடுக்காமல்
வியாபார நோக்கத்துடன் செயல்படும் நிர்வனங்களுக்கு கொடுக்கும்படி யாராவது ஒரு ஆலிம்
கூறுவாரா? இந்த ஸகாத் பணத்தில்
புத்தகங்கள் அச்சிட்டு பின்னர் அவைகள் விலைக்கு விற்கப்படுகின்றன அல்லது ஒரு பகுதி
இடத்தை வாங்கி அதை கூலிக்கு கொடுக்கப்படுகிறது. இவ்வாறுதான் கர்ளாவி
செய்துகொண்டிருக்கிறார்.
நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
வசதியுள்ளவர்களில் யாருக்கு ஸகாத் கொடுக்கப்படவேண்டும் என்பதை தெளிவாக
கூறிவிட்டார்கள்.
பணக்காரர்களில் ஐவருக்கே தவிர ஸகாத் கொடுக்க
முடியாது. அல்லாஹுத்தஆலாவின் பாதையில் யுத்தம் செய்பவர். அல்லது ஸகாத் சேகரிப்பவர், அல்லது கடன்காரர் அல்லது தனது சொத்தைக்கொண்டு
ஸகாத்தை வாங்கியவர் அல்லது ஏழையான மிஸ்கீன் ஸகாத்தைப் பெற்று
பக்கத்துவீட்டுக்காரான பணக்காரனுக்கு கொடுப்பது என நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் கூறியதாக அபூ ஸயித் அல்குத்ரி றழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். ஆதாரம்
: அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், பைஹகி
இது ஏழைகளுக்கும், எளியவர்களுக்கும் சொந்தமாக்கி வைக்கப்பட
வேண்டும் என்பதை பணக்காரர் அவருடைய பணத்தைக்கொண்டு ஸகாத்தை வாங்கினார் என்றும் ஏழை
பணக்காரருக்கு ஸகாத்தை நன்கொடையாக கொடுத்தார் என்றும் நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் தெளிவாக கூறியுள்ளார்கள். இது கர்ளாவியின் கூற்றை முற்றுமுழுதாக
தவிடுபொடியாக்குகிறது. நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வசதியுள்ளவர்களில்
இவர்களை மாத்திரம் விதிவிலக்களித்திருப்பதை கவனித்துப்பாருங்கள். இவ்வாரு
இருந்தும் வசதியுள்ளவர்களுக்கு கொடுக்க முடியும் என கர்ளாவி எவ்வாறு கூறுவார்?
நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
ஸகாத்துடைய ஆயத்தில் கூறப்பட்ட 'பீஸபீலில்லாஹ்' எனப்படுபவர் அல்லாஹூத்தஆலவின் பாதையில் யுத்தம் புரிபவர்கள்
தான் எனக் குறிப்பிட்டு தெளிவாக கூறியிருப்பதை அவதானித்துப்பாரும். இவ்வளவு
விளக்கத்துக்குப் பிறகும் 'பீஸபீலில்லாஹ்' என்பது சிந்தனை,கலாச்சார போராட்டத்தை குறிக்கும் எனச்சொல்லமுடியுமா? நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
விளக்கத்துக்கு மேல் ஒரு விளக்கம் உண்டா? நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்திய பின்
இன்னொருவருடைய ஊகங்களுக்கும், பூச்சான்டிகளுக்கும் செவிசாய்க்க வேண்டுமா? நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான்
திருக்குர்ஆனுக்கு நன்கு விளக்கம் சொல்லக்கூடியவாகள். அதன் கருத்துக்களை நன்கு
தெரிந்தவர்கள். நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தீர்ப்புச் செய்ததை விட தனது
கருத்துத்தான் சிறந்தது என ஒருவன் கருதுவானானால் அவனுடைய உள்ளத்தில் அணுவளவும்
ஈமான் இருக்கமாட்டாது.
நாங்கள் கர்ளாவியிடம் கேட்கிறோம் நீர் ஒரு
முஜ்தஹிதா அல்லது முஜ்தஹிதை பின்பற்றுபவரா? நான் ஒரு முஜ்தஹித் எனக்கூறினால் நீர் இஜ்திஹாதுடைய தரத்தை
அடைந்ததற்கான தகுதிகளை தராதரங்களை வெளிப்படுத்துமாறு கேட்கிறோம். இமாம் அபூஹனீபா,இமாம் ஷாபிஈ,இமாம் மாலிக்,இமாம் லைஸ்,இமாம் ஸுப்யான் போன்றவர்கள் தரத்தை
அடைந்துவிட்டீர் என்றோ அல்லது இமாம் தகிய்யுத்தீன் அஸ்ஸுப்கி,இமாம் இப்னு தகீக் அல்ஈத் போன்றவர்களின் தரத்தை
அடைந்ததற்கான அல்லது அஸ்ஹாபுல் வுஜூஹ் எனப்படும் மத்ஹபுகளின்
சட்டவிதிகளுக்கமைய
சட்டம் இயற்றும் இமாம் ஹுலைமி இமாம் ஜுவைனி இமாம் முதவல்லி, இமாம் புல்கீனி போன்றவர்களின் தரத்தையாவது
அடைந்துவிட்டீர் என்பதற்கான சான்றுகளை, தராதரங்களை வெளிப்படுத்துமாறு கேட்கிறோம். அவ்வாறு எந்த
தராதரமும் கிடையாது. எவ்வாறிருப்பினும் ஒரு முஜ்தஹித் ஏகோபித்த முடிவுக்கு
மாற்றமாக செயல்படமாட்டார் என்பதே உண்மையாகும்.
இந்த தரத்தை அடையவில்லை (உண்மையும் அதுதான்)
எனக்கூறினால் அறிஞர்களிடம் கேட்டு அவர்களுடைய பத்வாக்களை பின்தொடர்வதே உமக்கு
பொறுத்தமாகும். அறிஞர்கள் அனைவரும் ஏகோபித்து 'பீஸபீலில்லாஹ்' என்றால் யுத்தம் செய்வதுதான்
எனக்கூறியிருக்கும் போது நீர் மாத்திரம் தனித்து சஞ்சிகைகள்,பிரசுரங்கள் வெளியிட ஸகாத்தை கொடுக்கமுடியும்
எனக்கூறுவது எவ்வாறு நியாயமாகும்? ஏகோபித்த முடிவுக்கு மாற்றமாக எடுக்கப்பட்ட உமது கருத்து
மார்க்கத்தில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை கவனிக்கவில்லையா?
மனிதர்கள் சிலர் அல்லாஹுத்தஆலாவின் செல்வத்தை
நியாயமாக பங்கிடாமல் (அநியாயமாக பங்கீடு செய்து)கையால்கிறார்கள். அவர்களுக்கு
மறுமை நாளில் நரகமே உரியதாகும் என நபி ஸல்லல்லஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக
ஹவ்லா அல்அன்ஸாரிய்யா (றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் புஹாரி 3118
குறிப்பு: இது النقض الكاوي لدعاوي يوسف
القرضاوي என்ற நூலின் 1-13 ம் பக்கங்களில் உள்ள
விடயங்களே கூறப்பட்டுள்ளன. மேலதிக விபரங்பளுக்கு www.soufia.org என்ற இணைய தளத்தை
பார்வையிடவும்.
No comments:
Post a Comment