Tuesday, October 3, 2017

ஸகாத் பெறும் பீஸபீலில்லாஹ் கூட்டத்தவர் தெளிவு - தொடர் -03

ஸகாத் பெறும்  பீஸபீலில்லாஹ் கூட்டத்தவர் பற்றிய தெளிவு - தொடர் -03


கர்ளாவி 'பீஸபீலில்லாஹ்' என்ற வசனத்துக்கு இமாம்களின் கருத்துக்கு மாற்றமான கருத்தை தெரிவித்துள்ளார்
 யாராவது தனது ஸகாத் பணத்தை புத்தகம் அச்சிடுவதற்காவோ, மாநாடுகள் ஏற்பாடு செய்வதற்காகவோ, பள்ளிவாயல்கள், வைத்திய சாலைகள் கட்டுவதற்கோ, பிரச்சார நிலயங்களை அமைப்பதற்காகவோ கொடுத்தால் அது ஸகாத்தாக நிறைவேரமாட்டாது. இவ்வாறுதான் எகிப்து நாட்டின் பிரபல முப்தியும் ஹனபி மத்ஹபு மார்க்க சட்ட ஞானியுமான முஹம்மத் பகீத் அல்முதீயி அல்அஸ்ஹரி அவர்களும். உஸ்மானிய பேரரசின் இஸ்லாமிய தலைவர்களின் பிரதினிதியுமான முஹம்மத் ஸாஹித் அல்கவ்ஸரி அவர்களும் கூறியுள்ளார்கள். இதற்கு முன்பதாக இப்னு ஹுபைறா அல்ஹன்பலி இது ஏகோபித்த முடிவு 'இஜ்மாஃ' என இப்ஸாஹ் என்ற நூலில் கூறியுள்ளார்கள். இவ்வாறு யாராவது ஸகாத் கொடுத்தால் அவர் மறுமை நாளில் ஸகாத் கொடுக்காதவராகவே வருவார்.
(நபியே!) தானங்கள் விஷயத்தில் (பாரபட்சம் உடையவர்) என்று உம்மைக் குறை கூறுபவரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆனால் அவற்றிலிருந்து அவர்களுக்கும் ஒரு பங்கு கொடுக்கப்பட்டால் திருப்தியடைகின்றார்கள் - அப்படி அவற்றிலிருந்து கொடுக்கப்படவில்லையானால் அவர்கள் ஆத்திரம் கொள்கிறார்கள். 9:58.
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவர்களுக்குக் கொடுத்ததைக் கொண்டு திருப்தியடைந்து 'அல்லாஹ் நமக்குப் போதுமானவன்! அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவன் அருட்கொடையிலிருந்து நமக்கு மேலும் அளிப்பார்கள்; நிச்சயமாக நாம் அல்லாஹ்வையே விரும்பக்கூடியவர்கள்' என்று கூறியிருப்பார்களானால் (அது அவர்களுக்கு நன்மையாக இருக்கும்). 9:59
ஸகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும் ஏழைகளுக்கும் தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும் இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும் அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும் கடன் பட்டிருப்பவர்களுக்கும் அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்) வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன் மிக்க ஞானமுடையோன். 9:60
 ஸதகாத் என்பது 'ஸதகா' என்ற சொல்லின் பன்மைச் சொல்லாகும். இவ்வாறு 'ஸதகா' எனக்கூறப்பட்டிருப்பது கடமையான ஸகாத்தைத்தான் குறிக்கும் என அந்த வசனத்தில் இடம் பெறும் 'அல்லாஹூத்தஆலாவிடமிருந்து வரும் கடமை' என்ற வார்த்தை தெளிவுபடுத்துகிறது. ஸகாத் செல்லுபடியாக வேண்டுமானால் யாருக்கு ஸகாத் கொடுக்கப்பட வேண்டுமோ அவருக்கு சொந்தமாக்கிவைப்பது அவசியமாகும். கர்ளாவியும் அவர் போன்றவர்களும் குறிப்பிடுவது போல் பார்ப்போமேயானால் அங்கே சொந்தமாக்கிக்கொடுப்பது நிகழவில்லை. ஏனெனில் அச்சங்கத்தில் பொறுப்பாளர்களாக இருப்பவர்களிடம் ஒப்படைக்கும் போது அவர்கள் சொந்தமாக்கிக்கொள்ளமாட்டார்கள். மாறாக விநியோகிப்பதில் பொறுப்பாளர்களகவே இருக்கிறார்கள். மேலும் அவர்கள் எட்டு கூட்டத்தில் யாருக்கும் சொந்தமாக்கிகொடுக்காமல் அதற்கு ஒரு பகுதி நிலத்தை கூலிக்கு எடுக்கிறார்கள் அல்லது பேப்பர்களை வாங்குகிறார்கள். அல்லது வியாபாரத்தில் முதலீடு செய்கிறார்கள் அல்லது சுத்த ஹராத்துடன் கலக்கும் வங்கிகளில் வைப்புச்செய்கிறர்கள். இதன் மூலம் சொந்தமாக்கிகொள்வது நிகழவில்லை என்பது தெளிவாகுவதோடு கடமையான ஸகாத்தும் நிறைவேறமாட்டாது. கொடுக்கப்பட்ட இப்பணம் மார்க்கத்தில் சரியான ஸகாத்தாக கருதப்படமாட்டாது. மாறாக முறைதவறி செய்யப்பட்ட ஒரு வணக்கமாகும.; யாறாவது கர்ளாவியின் பத்வாவைக்கேட்டு அதன் படி ஸகாத் கொடுத்தால் தகுதியற்றவர்களுக்கு கொடுக்கப்பட்டதாகவே கருதப்படும். அவரை விட்டும் கடமை ஒருபோதும் நீங்கமாட்டது. 
 எட்டுக்கூட்டத்தார்களுக்கு மாத்திரம் தான் கொடுக்கப்படவேண்டும் என்ற வரையரையை உணர்த்தும் انما  என்ற அறபுச் சொல்லை உபயோகித்தே கூறப்பட்டுள்ளது. இது சொந்தமாக்கிவைத்தல், சொந்தமாக்கிக்கொள்ளல் ஆகிய இருபகுதிகளையும் உள்ளடக்கியது என்பதை அதில் இடம்பெறும் (ل )என்ற அறபுச்சொல் வலியுறுத்துகிறது. எனவே தகுதியற்றவர்கள் ஸகாத்தை சொந்தமாக்கிக்கொள்ளக்கூடாது என்பதையே ஆயத்தின் போக்கு உணர்த்துகிறது என கவ்ஸரி ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறியுள்ளார்கள். இத்திருவசனம் இந்த எட்டுக்கூட்டத்தாரையும் தவிர்ந்த ஏனையோர் ஸகாத்தை பெறுவதற்கு எவ்வித தகுதியும் இல்லை என்பதை உணத்துகிறது இது ஏகோபித்து கூறப்பட்ட விடயம் என தப்ஸிர் ஹாஸினில் கூறப்பட்டுள்ளது. 
ஊதியம் பெறாத போர்வீரர்கள் இந்த எட்டுக்கூட்டத்தில் ஒன்றாகிய 'பீ ஸபீலில்லாஹ்' என்பதில் அடங்குவார்கள். ஏனெனில் 'பீஸபீலில்லாஹ்' என்ற வார்த்தை மார்க்கத்தில் அடிப்படையிலே யுத்தத்துக்கே பிரயோகிக்கப்படுகிறது. இது தவிர்ந்த ஏனைய அர்த்தங்களுக்கு உபயோகிக்கப்படுமானால் அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் காணப்படவேண்டும். இங்கே அவ்வாறான சந்தர்ப்ப சூழ்நிலை காரணிகள் எதுவும் கிடையாது. இதன் அடிப்படையிலே இமாம் ஷாபிஈ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் 'பீஸபீலில்லாஹ்' என்பதின் அர்த்தம் யுத்தம்புரிதல் எனக்கூறியுள்ளார்கள்.
 எங்களுடைய அறிஞர்கள் 'பீஸபீலில்லாஹ்' எனும்போது சிந்தனைக்கு கிட்டும் விளக்கம் யுத்தம் புரிதலாகும். குர்ஆனில் இந்த அர்த்தத்திலே அதிகமாக இடம் பெற்றுள்ளது எனக் கூறியுள்ளார்கள். மேலும் நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பணக்காரர்களில் ஐவருக்கு மாத்திரம் ஸகாத் கொடுக்கமுடியும் ஏனக்கூறிவிட்டு அதில் ஒருவராக யுத்தத்திற்கு செல்பவரை கூறியுள்ளார்கள். எனவே எட்டுக்கூட்டத்தில் போர் வீரர்களுக்கு கொடுக்கப்படுவது 'பீஸபீலில்லாஹ்' என்ற பங்கிலிருந்து மாத்திரமாகும் என இமாம் நவவி றஹ்மதுல்லாஹி அலைஹி கூறியுள்ளார்கள்.
 'பீஸபீலில்லாஹ்' என்ற வார்த்தை மார்க்கத்தில் யதார்த்தத்தில் யுத்தத்திற்கே பாவிக்கப்படுகிறது மார்க்கத்தில் எது யதார்த்த அர்த்தமோ அதையே உபயோகிப்பது அவசியமாகும். மாறாக அறபு பாசையிலுள்ள யதர்த்த அர்த்தம் மார்க்கவிடயத்தில் பிரபல்யமான ஒரு சொல்லுக்கு பாவிக்கப்படமாட்டாது. உதாரணமாக 'ஸலாத்' என்ற வர்த்தையை எடுத்துக்கொள்ளுங்கள், ஒருவர் 'ஸல்லைத்து' எனச்சொன்னால் மார்க்க யதார்த்த அர்த்தமாகிய தொழுகிறேன் என்ற அர்த்தைதையே கொள்ளவேண்டும். மாறாக அறபு பாஷை அர்த்தமாகிய பிரார்த்தித்தேன் என அர்த்தம் சொல்லமுடியாது. அவ்வாறு அறபு பாஷையிலுள்ள அர்த்தத்தை குறிக்கவேண்டுமானால் அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலை காரணிகள் காணப்படுவது அவசியமாகும்.
 ஒரு பேச்சுக்காக 'பீஸபீலில்லாஹ்' என்றால் இரு அர்த்தத்தையும் (மர்க்க-அறபுபாஷை) குறிக்கும் என வைத்துக்கொண்டாலும் நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லும், செயலும் பொதுப்படையான இவ்விடயத்தில் தெளிவைக்காட்டுகிறது. ஸகாத்தை பங்கீடு செய்யும் விடயத்தில் நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லையும் செயலையும் கவனித்துப்பார்த்தால் யுத்தத்துக்கு மாத்திரம் தான் கொடுத்துள்ளார்கள் என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது. அத்தோடு சில குறிப்பிடப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் ஹஜ்ஜை குறிக்கிறது.
இதனால் தான் எந்தவொரு திருக்குர்ஆன் விரிவுரையாளரும் 'பீஸபீலில்லாஹ்' எனப்படுவது அனைத்து நல்லவிடயங்களையும் குறிக்கும் என்றோ அல்லது கர்ளாவி கூறுவது போல் சிந்தனை ரீதியான போராட்டத்தைக் குறிக்கும் என்றோ யாரும் கூறவில்லை.
 பிரபல திருக்குர்ஆன் விரிவுரையாளர் குர்துபி 'ஜாமிஃ' என்ற அவரது விரிவுரை நூலில் கூறும்போது 'பீஸபீலில்லாஹ்' எனப்படுவோர் யுத்தவீரர்களும் காவலரண்களில் தங்கியிருப்பவர்களுமாகும். பணக்காரர்களக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் அவர்களுடைய யுத்தச் செலவுக்கு தேவையான அளவை கொடுக்கவேண்டும். இதுதான் அதிகமான அறிஞர்களின் கருத்தாகும். மாலிக் மத்ஹபின் தெரிவுசெய்யப்பட்ட கருத்தும் இதுவே. ஆனால் இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹு ஹஜ்,உம்ரா செய்பவர்களுக்கு கொடுக்க முடியும் எனக்கூறியுள்ளார்கள்.
 இப்னுல் ஜவ்ஸி 'ஸாதுல்மஸீh'; என்ற அவரது விரிவுரை நூலில் கூறியுள்ளதாவது: போர்வீரர்களும், அரண்களில் தங்குபவர்களுமாகும். எங்களிடத்தில் பணக்காரர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் கொடுக்கமுடியும். இது ஷாபி இமாமுடைய கருத்தாகும். ஆனால் ஏழைகளுக்கு மாத்திரம்தான் கொடுக்க வேண்டும் என இமாம் அபூஹனீபா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியுள்ளர்கள். 
 அபூ ஹய்யான் அல் அன்துலுஸி 'அல்பஹ்ருல் முஹீத்'; என்ற விரிவுரையில் கூறியுள்ளதாவது அவர்தான் யுத்தம் செய்யக்கூடிய ஏழையான யுத்தவீரராகும். ஆனால் பெரும்பான்மையான அறிஞர்கள் பணக்காரராக இருந்தாலும் கொடுக்கமுடியும் எனக்கூறியுள்ளார்கள்.
பிரபல திருக்குர்ஆன் விரிவுரையாலர் இமாம் தபறி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கொடுப்பதற்கான காரணமே யுத்தம்தான் எனக்கூறியுள்ளார்கள். அதாவது அல்லாஹுத்தஆலாவின் மார்க்கத்தை எதிரிகளுடன் யுத்தம்செய்து பாதுகாக்கக்கூடியவர்களாகும்.
 இதனால்தான் திர்குர்ஆன் விரிவுரையாளர் இப்னு அதிய்யா றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பள்ளிவாயல், பாலம் கட்டுவதற்கோ, குர்ஆன் வாங்குவதற்கோ கொடுக்கப்படமாட்டாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்கள்.
 இவ்வளவு கூறிய பின்னரும் கர்ளாவிக்கோ அவர்போன்றவர்களுக்கோ 'பீஸபீலில்லாஹ்' என்ற பங்கை சிந்தனைப் போராட்டத்திற்கு கொடுக்கமுடியும் எனச்சொல்லலாமா? இல்லவே இல்லை அல்லாஹூத்தஆலாவின் மீது ஆணையாக இது திர்குர்ஆன் வசனங்களின் அர்தத்தை திரிவுபடுத்துவதோடு குர்ஆனிலுள்ள சொற்றொடர்களுக்கு அதற்குரிய அர்த்தத்தை வழங்காமல் மனோ இச்சைக்கு அடிபணிந்த எவ்வித ஆதாரமுமில்லாத சுய கருத்தை கூறுவதாகும். இது ஹராம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது. அத்தோடு நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்களே இத்திருவசனத்திற்கு விளக்கம் கூறியிருக்கும் போது இதை என்னவென்று சொல்வது!! கர்ளாவியும் அவரை சரிகாண்பவர்களும் அல்லாஹுத்தஆலாவை அஞ்சிக்கொள்ளட்டும்.
 பணக்காரர்களில் ஐவரைத்தவிர ஏனையோர்களுக்கு ஸகாத்கொடுக்க முடியாதெனக்கூறிவிட்டு அதில் ஒருவராக யுத்தம்செய்வதில் ஈடுபடுபவரை கூறியுள்ளதால் எட்டுக்சுட்டத்தினரில் யுத்த வீரர்களுக்கு கொடுக்கப்படுவது 'பீஸபீலில்லாஹ்' என்ற பங்கிலிருந்து மாத்திரமாகும் என இமாம் ஷாபிஈ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியுள்ளார்கள்.
திருக்;குர்ஆனில் 'பீஸபீலில்லாஹ்' எனக்கூறப்பட்டிருப்பது போர்செய்யக்கூடிய யுத்தவீரர்களைக் குறிக்கும் என நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்களே விபரித்துக்கூறியுள்ளார்கள். படைப்புகளில் நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட அறிந்தவர்கள் யாரும் கிடையாது. எனவே நாம் நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லை விட்டு விட்டு கர்ளாவியினதோ அவர் போன்றவர்களினதோ கருத்தை ஏற்கவேண்டிய அவசியம் கிடையாது.
 கலாநிதி கர்ளாவி 'பிஸபீலில்லாஹ்' என்றால் அனைத்து நலவுகளையும் குறிக்கும் எனக் கூறுவாரானால் அவருடைய கருத்து பிழை என்பதை ஏனைய ஏழு கூட்டங்களும் அதற்குள் அடங்குவர் என்பது தெளிவு படுத்துகிறது. ஆனால் இன்னும் இன்னும் என இணைத்துக் கூறப்பட்டிருப்பதால் அவைகள் அடங்கமாட்டாது என்பது தெளிவான விடயமாகும். 
 'பீஸபீலில்லாஹ்' என்பது அனைத்து நலவுகளையும் குறிக்கும் என வைத்துக்கொண்டால் அப்பங்கிலிருந்து ஏழைக்கும் கொடுக்கமுடியும் மிஸ்கீன்களுக்கும் கொடுக்கமுடியும் அடிமைகளை விடுதலை செய்யவும் முடியும் கடன்காரனுக்கு கடனை அடைக்க கொடுக்கவும் முடியும் வழிப்போக்கனுக்கு உதவவும் முடியும் எனக்கூற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். எனவே இது தவறானதாகும். ஓவ்வொரு பங்குகளும் மற்ற பங்குகளைவிட்டும் வேறுபட்டவைகளாகும். இவ்விளக்கம் தவறானது என்பது உறுதியாகிவிட்டது. யுத்தம் எனக்கூறுவதே சரியான விளக்கமாகும். இதனால் தான் முஜ்தஹித்களான நான்கு இமாம்களில் யாருமே 'பீஸபீலில்லாஹ்'  என்பது அனைத்து நல்லவிடயங்களையும் குறிக்கும் எனக் கூறவில்லை. மாறாக இதற்கு மாற்றமாகவே அவர்களின் ஏகோபித்த முடிவு இருக்கிறது. அவர்களின் தரத்தை அடையாத கிட்டவும் நெருங்காத ஒருவர் அவர்களுக்கு மாற்றமாக ஒரு கருத்தை சொல்வாறானால் அதை ஏற்கவேண்டிய அவசியமில்லை. அக்கருத்து தூக்கி எரியப்படவேண்டியதாகும்.

  எனவே இஸ்லாமிய சகோதரனே யூசுப் கர்ளாவியின் பத்வாவைவிட்டும் எச்சரிக்கையாக இருந்துகொள். ஏகோபித்த முடிவுக்கு மாற்றமானது என்பதையும் விளங்கிக்கொள். இதன் விபரீதம் இதை சொன்னவரையும் அங்கீகரித்தவர்களையுமே சாறும்.
தொடரும்

No comments:

Post a Comment